இதயப் பூவும் இளமை வண்டும் – 125

(Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 124)

Raja 2015-12-14 Comments

This story is part of a series:

Lovers Okkum Tamil Kamakathaikal – நசீமா முகம் மட்டும்தான் கழுவியிருக்க வேண்டும். அவள் இன்னும் குளிக்கவில்லை. முகத்துக்கு எதுவும் பூசியிருக்கவில்லை. சிகை அலங்காரம் எதுவும் செய்திருக்கவில்லை…

இருந்தும்.. அவளது அசத்தும் அழகு.. சசியை அடித்துப் போட்டது..!!
அவன் கண்கள்.. அவளது அழகைப் பருகி.. பருவ தாகம் தணித்துக்கொண்டிருந்தது..! அவன் கண்களிலிருந்து வெளிப்படும்.. பருவ மோகப் பார்வையை.. நசீமாவின் நயன விழிகளும் பருகிக்கொண்டுதான் இருந்தது..!!

அவனது விழிகளின் வீச்சு.. அவளுக்குள்.. உணர்ச்சி மாற்றங்களை நிகழ்த்த.. நசீமாவின் இமைகள் படபடக்கத் தொடங்கின..! அவளது சுவாச லயத்தின் மாற்றங்கள்.. அவளது சின்னச் சின்ன அசைவுகளிலும்.. வெளிப்படத்தொடங்கியது. !!

அவளது சிவந்த அதரங்களை.. அவள் அடிக்கடி ஈரப்பதமாக்கிக் கொண்டிருந்தாள்..! வறண்டுவிடும் அவளின் செவ்விதழ்கள்.. அவளது நுணி நாக்கால் ஈரம் செய்த அடுத்த நொடி.. பளபளத்து.. கோஹினூர் வைரம் போண்று ஜொலிக்கும்..! அதைப் பார்க்கும் சசியின்.. உள்ளமும்.. உடம்பும்.. தரையில் தூக்கி வீசப்பட்ட.. தொட்டி மீனாக துடியாகத் துடிக்கும்..!!

நசீமா மீது.. அவனுக்கிருக்கும் இந்த ஈர்ப்பை.. காதல் என்று சொல்லிவிட முடியாது. ஆனால்.. அவள் விழி அசைத்தால் போதும்.. சசி எதையும் செய்து விடுவான்.. அவளுக்காக..!!
இது.. அவனுக்கு இன்று நேற்றல்ல.. அவன் நசீமாவுடன் பழகத்தொடங்கிய நாளில் இருந்தே இருக்கிறது.!
இந்த ஒரு உணர்ச்சி.. அவனுக்கு வேறு எந்தப் பெண்ணிடத்திலும் தோண்றியதில்லை..!!
இந்த உணர்ச்சிக்கு என்ன பெயர்.. இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதும்.. அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை..!!

ஆனால்… ஒன்று மட்டும் அவனுக்கு நிச்சயமாகப் புரிந்தது.
நசீமா கிடைத்தால்.. அவளது அழகு மொத்தத்தையும்.. அணு அணுவாக.. அங்கம் அங்கமாக.. ரசித்து ருசித்து.. பருகிவிடுவான் சசி…!!

புவி அவர்களைக் கவனிக்கிறாள் என்பதைக்கூட.. மறந்து.. நசீமாவின் அழகை ரசிக்கும் மனநிலையில் இருந்தான் சசி.!
ஆனால்.. நசீமா அவனைப்போல் அல்லாமல்.. விழிகள்.. மற்றும் இதழின் சிறுசிறு அசைவுகளுடன்.. பேசியவாறு அவனை வசியம் செய்து கொண்டிருந்தாள்..!!

”நானும்.. தங்கமணியும்னா.. அடிக்கடி உங்கள பத்திதான் பேசுவோம்.! நாங்கூட பரவால்ல.. தங்கமணிக்குன்னா.. உங்க மேல அப்படி ஒரு பாசம்.! உங்களபத்தி இவ ஏதாவது தப்பா பேசிட்டான்னா.. சண்டைக்கு இவகூட வரிஞசு கட்டிட்டு நிப்பா..! எங்கண்ணாடி அவரு.. அவர பத்தி பேச.. உனக்கு எந்த ரைட்ஸும் இல்லேன்னுவா.! அவ இருந்தா.. இவ உஙகளபத்தி பேசவே மாட்டா…” என தோழிகளுக்குள் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி.. செவ்விதழ் சிந்தும் குறுநகையுடன் சொன்னாள் நசீமா..!!

”அப்படியா..?” என வியப்புடன் கேட்டான் சசி ”இத.. யாரும் என்கிட்ட சொல்லவே இல்ல..?”

”எங்க சொல்ற மாதிரி இருந்துச்சி..? உங்க சண்டைனால.. நாங்களும் உங்ககூட சரியா பேச முடியலயே..? நான்லாம் சொல்ல நினைப்பேன்..!” என இழுத்தாள்.

”ஓ..!!”

”நான் ஒன்னு சொல்றேன் தப்பா நெனச்சிக்காதிங்க..! அனேகமாக அடுத்த ஜென்மத்துல.. தங்கமணி உங்க தங்கச்சியாதான் பொறப்பா.. இல்லேன்னா.. போன ஜென்மத்துல அவ உங்க தங்கச்சியா பொறந்திருப்பா..” என நசீமா சிரித்துக் கொண்டே சொல்ல…

புவியாழினியும் லேசாகச் சிரித்தாள்.

”ஓ.. தங்கமணிக்கு அவ்ளோ பாசமா.. என்மேல..?” என சசி கேட்க..

”பாசமாவா..? என்ன நீங்க இப்படி கேட்டுட்டிங்க.? இப்ப நான் உங்ககிட்ட சொன்னதெல்லாம் நானா சொன்னது இல்ல..! தோ.. நிக்கறாளே.. இவ அவகிட்ட சொன்னது.! வேணா இவளையே கேட்டுப்பாருங்க..!” என நசீமா.. புவியைக் கோர்த்துவிட்டாள்.

புவியோ.. ”ஏய்.. விடுறி..! சாரு இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்ல. ! ரொம்ப மாறிட்டாரு.! சீக்கிரம் மேரேஜ் பண்ணி செட்டிலாக போறாரு..! இதுல.. அவளையெல்லாம் எங்க கண்டுக்க போறாரு..?” என்றாள்.

சசி.. ”ஏய்.. என்னப்பா இது.. எனக்கே இப்ப நீ சொல்லித்தான் தெரியும்..! இதுல.. இந்த லூசு பக்கி.. என்னமோ.. புதுசா ஒரு கதைய கொண்டு வரா..! நெஜமா எனக்கு தெரியாது நசீ..! சொன்னாத்தான தெரியும்..?” என நசீமாவிடம் விளக்கிக்கொண்டிருக்க..

நசீமா.. அவன் பேச்சை செவி மடுக்காமல் அவனைக் கேட்டாள்.
”உங்களுக்கு மாரேஜா..?”

”ஆமா.. பொண்ணெல்லாங்கூட ரெடி..” என்றாள் புவி.

”ஹெலோ.. சார்ர்ர்.. என்னங்க.. இது.. இப்படி ஷாக் குடுக்கறீங்க..? நாங்கெல்லாம் இருக்கோம்.. உங்களுக்காக உயிரையே விடற.. ஒரு பாசககார தங்கச்சி இருக்கா..! எங்களெல்லாம் எப்படி மறந்திங்க.. ஹா..? ஹைய்யோ.. அவ கேட்டா… எவ்ளோ ஃபீல் பண்ணுவா..?” என நசீமா ஒரு பக்கம் அங்கலாய்க்க…

புவியோ உள்ளே குமுறும் வயிற்றெரிசசலுடன் சொன்னாள்.
”அவ என்ன.. இவருக்கு கூட பொறந்த பொறப்பா.? விடுடி..! உனக்கு தெரியாதது இல்ல.. இவ்ளோ பழகின நானே.. இப்பெல்லாம் செல்லாக்காசாகிட்டேனாமா.. நீ என்னமோ.. அவள பத்தி பேசிட்டிருக்க..! எனக்கே.. இவங்கக்கா சொல்லித்தான் தெரியும். ! சாரு.. அதப்பத்தியெல்லாம்.. நாம கேட்டா சொல்லக்கூட மாட்டாரு.! நீ வேணா பாரேன்.. திடுதிப்னு ஒரு நாள் மாலையும் கழுத்துமா.. ஜோடியோட வந்து நிப்பாரு..! இப்பக்கூட பாரு.. நாம இவ்ளோ பேசறோம்.. ஏதாவது பதில் வருதானு..?”

சசி வாய்விட்டே சிரித்து விட்டான்.
”அடிப்பாவிகளா.. ரெண்டு பேரும் சேந்து.. இந்த வாங்கு வாங்கறீங்களே.. என்னை எங்காவது பேச விட்டிங்களா..? ஆ..? நீங்களாவே பேசி… நீங்களாவே முடிவு பண்ணி…” மெதுவாக புவி பக்கம் நகர்ந்து.. அவளது தலையில் ஒரு தட்டு தட்டினான் ”உனக்கு என்ன தெரியும்னு நீ பாட்டுக்கு ஓதிட்டிருக்க..?” எனக் கேட்டான்.

”ஆ..!! தெரியும்.. எல்லாம். .!!” என மண்டையைத் தேய்த்துக் கொண்டாள்.

”ஏய் லூசு..!! கொஞ்சம் பேசாம இருக்கியா..!” என்றுவிட்டு நசீமாவைப் பார்த்துச் சொன்னான் ”இந்த அரவேக்காடு எப்பயுமே.. எதையும் சரியா புரிஞ்சுக்க மாட்டா நசீ..! இவ சொல்றது உண்மை இல்ல. !”

”ஆ..ஆ..! என்ன உண்மை இல்ல..?” வரிந்து கட்டிக்கொண்டு வந்தாள் புவி ”அப்பறம் குமுதக்கா சொன்னது எல்லாம் பொய்யா..?”

”பொய்னு நான் சொன்னேனா.. லூசு..?”

”உண்மையும் இல்ல.. பொய்யும் இல்லேன்னா.. ஏன் சார் இப்படி கொழப்பறீங்க..?” என சிரித்துக்கொண்டே கேட்டாள் நசீமா.

”அட.. நீயுமா நசீ..? அக்கா சொன்னது சரிதான்.! எனக்கு பொண்ணு ரெடியா இருக்கு..! ஆனா நான் ஓகே சொல்லனுமா..? எங்கக்கா அத சொன்னாளானு கேளு.. இநத அரைவேக்காடுகிட்ட..” என அவன் சொன்னதும்..

”ஓஓஓ..!!” என வாயைக் குவித்தாள் நசீமா ”இத நான் யோசிக்கவே இல்ல..”

புவி முகம் மலர்ந்திருந்தது. அவளது வாய்ப்பு.. இன்னும் அவள் கையைவிட்டு போய்விடவில்லை என்கிற மகிழ்ச்சியில் அவள் உள்ளம் திளைத்துக் கொண்டிருந்தது..!!

”உண்மை இதுதான் நசீ..! மத்தபடி இவ சொல்றானு கேட்டு.. நீயும் நம்பிடாத..” என்றான் சசி.

”ஸாரி..!” புன்னகைத்தாள் நசீமா ”ஆமா.. நீங்க ஏன்.. ஓகே சொல்லல.. எனி ரீசன்..?”

”ப்ச்.. அப்டிலாம் எதும் இல்ல..! ஏனோ.. எனக்கு மேரேஜ்ல இன்னும் இன்ட்ரெஸ்ட் வரல..!”

”ஓகே.. ஓகே..!” என அவள் புவியைப் பார்த்து ”கேட்டுக்க லூசு..? உன் பேச்ச நம்பி.. நானும் அவர கேட்டேன் பாரு..!” என்றாள்.

”இதெல்லாம் இப்ப நீ வந்ததாலதான் சொல்லிருக்காரு.. இப்ப நீயும் வரலேன்னா இதப்பத்தி அவரு சொல்லப்போறதே இல்ல.! எனக்கென்ன தெரியும்..? அக்கா சொன்னாங்க.. அத நான் அப்படியே நம்பிட்டேன்.!” என்றாள் புவி.

அப்போதுதான் நசீமாவைக் கேட்டான் சசி.
”அது இருக்கட்டும் நசீ.. உன் லவ்லாம் எப்படி போகுது..?”

”லவ்வா..?” கொஞ்சம் குழம்பிய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.

”என்னது.. லவ்வானு கேக்கற.? அட.. உங்க மாமா பையன.. நீ லவ் பண்ண இல்ல..?”

”ஓஓ.. அது..வ்வா…!!” என வாயில் கை வைத்துக் கொண்டு ஜோக்கைக்கேட்டவள் போலச் சிரித்தாள்.

”என்ன நசீ.. இப்படி சிரிக்கற..?”

”வேற என்ன பண்ண சொல்றீங்க..?”

” ஏன்..?”

”அதுலாம்.. பிரேக் அப் ஆகியே.. ஒன் இயர்க்கு மேல ஆகிப்போச்சு.. அத நானே மறந்துட்டேன். அதான்.. இப்ப நீங்க கேட்டதும் நான் கொஞ்சம் கன்ப்யூஸ் ஆகிட்டேன்..” என்றாள்.

”பிரேக் அப்.. பா..? ஏன்.. என்னாச்சு..?”

”ஃபேமிலி பிராப்ளம்..! எங்க லவ் எங்க ஃபேமிலிக்கு தெரிஞ்சு.. இது ஒத்து வராதுனு.. பிரிச்சு வெச்சிட்டாங்க..”

” ஓ..! அப்படியா..?”

”அதுகூட ஒன் இயர்க்கு மேல ஆச்சு.! உங்களுக்கு தெரியல இல்ல..?”

”ம்கூம்..! வருத்தமாருக்கு..!”

”ஆரம்பத்துல கொஞ்ச நாள் நான் ரொம்ப அழுதேன். அழுது என்ன பண்றது.? அப்பறம்.. அப்படியே மனச தேத்திட்டு….” என நசீமா சொல்ல..

Comments

Scroll To Top