மாறுவது குணம் – 1

(Tamil Sex Story - Maruvathu Gunam 1)

Raja 2016-09-19 Comments

This story is part of a series:

Bathroomil Dress Mathum Tamil Sex Story – நான் வேலை முடிந்து வீடு திரும்பியபோது.. எனக்கு கதவைத் திறந்து விட்ட.. என் மனைவியின் முகம் பிரகாசமாக இருந்தது. உதடுகள் மலரச் சிரித்து என்னை வரவேற்றவள்.. அண்மையில் எடுத்த புடவை ஒன்றைக் கட்டியிருந்தாள். முகத்துக்கு பவுடர் பூசி.. அழகாக தலை வாரி… பின்னால் பூ வைத்து.. மேக்கப் எல்லாம் செய்து கொண்டு.. பளிச்சென இருந்தாள்.. !!

” கொஞ்சம் லேட் போல இருக்கு..??” எனச் சிரித்தபடி கேட்டாள்.

” ம்ம்.. பயங்கர ட்ராபிக் ஜாம்.. !!”

நான் அலுப்பாகச் சொல்லி விட்டு அவளைக் கண்டு கொள்ளாதவன் போல உள்ளே போனேன். குழந்தைகளை வீட்டிற்குள் காணவில்லை. டிவியில் சீரியல் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது. அந்த பிண்ணனி இசையைக் கேட்டால் எரிச்சலாக வந்தது..!!

நான் அறைக்குள் போய் உடைகளை களைய.. டிவியில் ஓடிக் கொண்டிருந்த சீரியலை மாற்றி விட்டு.. நான் இருந்த அறைக்குள் வந்தாள் என் மனைவி..!!

” பசங்க கீழ் வீட்ல இருக்காங்க.. !! பாத்திங்களா..??”
என.. என்னை நெருங்கி நின்று கேட்டாள்.

” ம்கூம்.. பாக்கல.. !!”

” நீங்க வந்த சத்தம் கேட்டிருக்காது..!! உள்ள ரூமுக்குள்ள ஏதாவது இருந்துருப்பாங்க.. !!”

நான் சட்டையைக் கழற்ற.. சட்டையை வாங்கி அவளது தோள் மீது போட்டுக் கொண்டு.. என் பேண்ட் பெல்ட்டை உருவினாள்.
நான் வியப்பாக அவளைப் பார்க்க.. என் பார்வையை கவனிக்காதவள் போல.. என் பேண்ட்டை லூசாக்கி கீழே தள்ளி விட்டாள்.. !!

என் கால்களைத் தூக்கி நான் பேண்ட்டை உருவ.. பீரோவில் இருந்து ஒரு லுங்கியை எடுத்துக் கொடுத்தாள். பேண்ட்டையும் எடுத்துக் கொண்டாள்.

” காபி போட்டு வெக்கறேன்.. !! பேஷ் வாஷ் பண்ணிட்டு வாங்க.. !!”
எனச் சொல்லி விட்டு.. அறையை விட்டு வெளியே போனாள்..!! நான் ஆச்சரியம் மாறாமல்.. பாத்ரூம் போய் பிரஷ்ஷாகி வெளியே வந்தேன்.. !! நடந்து போய் டிவி முன்னால் உட்கார்ந்து ரிமோட்டைக் கையில் எடுத்தபோது.. ப்ரூ காபியுடன் வந்தாள்.. !!

” சூடு போதுமா பாருங்க…!!”
என காபியை சூடு ஆற்றி.. என் கையில் கொடுத்துவிட்டு என் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டாள்..!!

என் மனைவியின் செயலில் இன்று வழக்கத்திற்கு மாறான.. ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்தேன்..!! வழக்கமாக நான் வேலை முடிந்து வரும் நேரம் வீட்டில் ஏதாவது ஒரு மெகா சீரியல் ஓடிக் கொண்டிருக்கும்..!! சீரியலை மிக ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு.. என்னை கவனிக்க நேரம் இருக்காது..!! நான் அறைக்குள் போய் உடை மாற்றி.. பாத்ரூம் போய் வந்தால்.. அந்த விளம்பர இடைவேளையில் ஓடிப்போய் ஒரு அவசர புரூ காபியைப் போட்டுக் கொண்டு வந்து என் கையில் இரண்டு டம்ளர்களில் கொடுப்பாள்..!!

” எந்த அளவுக்கு சூடு வேணுமோ ஆத்திக்கோங்க…!!”

நான் சூடு கொஞ்சம் கம்மியாகத்தான் குடிப்பேன். ஆனால் அவள் அப்படி அல்ல.. கொதிக்கக் கொதிக்கக் குடிப்பாள்..!!

அப்பறம் டிவியில் சீரியலை சத்தமாக வைத்து விட்டுப் போய் இரவு டின்னரை ரெடி செய்வாள். இதற்கிடையில் ஹோம் ஒர்க் பண்ணும் குழந்தைகளின் சத்தம் ஒரு பக்கம் இரைச்சலாக இருக்கும்.. !! ஹோம் ஒர்க் செய்து கொண்டே சண்டை போட்டுக் கொள்வது அவர்களுக்கு பிடித்த விளையாட்டு.. !! என்ன திட்டினாலும்.. அது மட்டும் மாறவே மாறாது.. !! அதற்காக கிச்சனில் இருந்தே.. என் மனைவியும் சத்தமாக கத்திக் கொண்டிருப்பாள்.. !! அல்லது..

” என்ன பண்றீங்க அங்க.. ?? அவங்க ரெண்டு பேரும் என்னதான் பண்றாங்கனு கொஞ்சம் கவனிங்களேன்.. !!” என்பாள்..!!

அதற்கு நான் பதில் கொடுக்காவிட்டால் அவ்வளவுதான்.

” செவிடன் காதுல சங்கு ஊதின மாதிரி என்ன பேசினாலும் பதிலே வராது.. !! என்ன ஜென்மமோ.. எப்பப் பாரு.. கொரங்கு மாதிரி அப்படி ஒரு உம்மணா மூஞ்சி.. !! அட வீட்டுக்கு வந்தா பொண்டாட்டிகூடத்தான் பேசலேன்னா தொலையுது.. நம்ம ரெண்ட பெத்து வெச்சிருக்கோமே அதுங்களோடயாச்சும் ஏதாவது ஒரு ரெண்டு வார்த்தை பேசலாம்னு இல்ல.. !! ப்பா.. !! கத்தி கத்தி… அவ அவளுக்கு ஆயுசு முடிஞ்சிரும் போலருக்கு.. !!

என அவள் பேசும் முக்கால் வாசி வசனங்கள் சீரியல் வசனங்களாக இருக்கும்..!! சரி அவள் சொல்கிறாளே என குழந்தைகளிடம் நான் ஏதாவது இரண்டொரு வார்த்தைகள் பேசினால்.. குழந்தைகள் பதில் சொல்கின்றனவோ இல்லையோ.. அதற்கு முன் அவசரக் குடுக்கையாக என் மனைவி இடையில் புகுந்து என்னோடு வம்பிழுக்கத் தயாராகி விடுவாள்.. !!

இந்த தொல்லையே வேண்டாம் என நான் எழுந்து அறைக்குள் போய் விடுவேன். அல்லது மொட்டை மாடிக்கு போய் விடுவேன்..!!

அப்பறம் குழந்தைகளோடு உட்கார்ந்து டிபன் சாப்பிட்டு விட்டு படுக்கைக்குப் போனால்.. குழந்தைகள் தூங்குகின்றனவோ இல்லையோ.. அவளது பிரசங்கம் தொடங்கி விடும்.. !!

கீழ் வீட்டுப் பெண் என்ன சமைத்தாள் என்பது தொடங்கி.. தெருவின் கடைசி வீட்டு கவிதா என்ன கலர் ப்ரா.. ஜட்டி போட்டிருந்தாள் என்பதுவரை.. எல்லாவற்றையும் என்னிடம் ஓதியாக வேண்டும்..!! அதையும் நான் சலிக்காமல் காது கொடுத்து கேட்க வேண்டும்..!! அவளுக்கு பதில் சொல்ல வேண்டும்.!

”அவ ஏங்க அப்படி பண்ணிருப்பா.. ?? அவன்கூட அவளுக்கு லிங்க் இருக்குமோ.. ??”
என்பன போண்ற ஐ நா சபையில் விவாதிக்கப் படும் சந்தேகங்களை நான் தீர்த்து வைக்க வேண்டும்..!!

” ஆமா.. இப்ப இது ரொம்ப முக்கியம் பாரு.. !! மூடிட்டு தூங்குடி.. !! அட. ச்சை ஒரு ரெண்டு செகண்ட்டாச்சும் கேப்பு விட்டு பேசு.. !! அவனவன் அலுத்து போய் வந்துருக்கான் கொஞ்சம் தூங்க விடுடி..!! ஆத்தா தாயீ… மூடிட்டு தூங்கறயா.. ?? நீ தூங்கலேன்னா தொலையுது என்னை தூங்க விடு.. !! இங்க நைட்ல தூக்கம் பத்தலேன்னா ஆபீஸ்ல போய் தூங்கி வழிய வேண்டியதிருக்கு.. !!”

இது போல நான் கெஞ்சினாலும் சரி.. கெட்ட வார்த்தையில் திட்டினாலும் சரி.. !! அவளது ஒப்பித்தல் மட்டும் ஓயவே ஓயாது.. !! அப்படி ஓய்ந்தால் அடுத்த நொடியே தூங்கி விட்டாள் என்று அர்த்தம்.. !! ஆனால் எனக்கு கோபத்தை அடக்கி.. பிரஷ்ஷர் ஏறி…என் மண்டைக்குள் எல்லாம் சூடாக இருக்கும்..!! கண்களை மூடினால் தூக்கமே வராது.. !! இதற்கிடையில்… ”இப்பல்லாம் ஒரு மாசமே ஆனாலும்.. நானா வந்து கட்டிப் புடிச்சு படுக்கற வரை.. என்னை தொடறது கூட இல்லை…!!” என்கிற குற்றச் சாட்டையும் தீர்த்து வைக்க வேண்டும்.. !!

இப்படிப் பட்ட என் தர்ம பத்தினி.. இன்று என்னை அக்கறையாக கவனிக்கிறாள் என்றால்… ??????

” ஜம்முனு இருக்க.. என்ன விஷேசம்.. ??”
சாப்பிடும் போது என் மனைவியைக் கேட்டேன்.

” ஒண்ணுமில்லையே.. !!”
என நான் கேட்க வேண்டும் என்பதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள் போல.. நளினமாகச் சிரித்தாள்.. !!

” புது புடவை..!! தலைல பூ..!! மூஞ்சில மேக்கப்பு… !!”

” ஏன்.. நான் இதெல்லாம் பண்ணதே இல்லயா என்ன.. ?? என்னமோ இப்பதான் புதுசா பண்ற மாதிரி கேக்கறிங்க.. ??”

” ஆஹா.. !! வீட்ல இருக்கப்ப.. இதுக்கு என்ன அவசியம் வந்துச்சு..?? கோயிலுக்கோ.. இல்ல ஏதாவது பங்க்சனுக்கோ.. ஈவினிங் போனியா என்ன ..??”

” அதெல்லாம் ஒண்ணுல்ல..!! இந்த புடவை கட்றதே இல்லேன்னு கட்னேன். மத்தபடிலாம்.. எல்லாம் நார்மலா இருக்கறதுதான.. ??”

அப்பறம்.. சாப்பிட்டு குழந்தைகள் படுத்து தூங்கிய பின் என் பக்கத்தில் வந்து படுத்து என்னைக் கட்டிப்பிடித்தாள். !

” மெலிஞ்சிட்டே போறிங்க.. ரொம்ப வேலையா இப்பல்லாம்..??”
என் நெஞ்சு முடியை மெதுவாக தடவிக் கொண்டே கேட்டாள்.

” அப்படியா ..??”
என் உள்ளே ‘சம்திங் ராங்.. !’ எனச் சொல்லிக் கொண்டேன்.

என் நெஞ்சில் ஆரம்பித்து என் கழுத்து.. வயிறு.. தொப்புள்.. தொடை.. என் ஆணுறுப்பு.. என எல்லாம் மென்மையாக தடவிக் கொடுத்தாள். என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து ஆசையாக முத்தம் கொடுத்தாள். அவள் முலை என் முகத்தில் படம்படி.. படுத்துக் கொண்டு என் தலை கோதி விட்டாள்..!! என் முகத்தில் நிறைய முத்தங்கள் கொடுத்தாள்..!!

Comments

Scroll To Top