ஆண்மை தவறேல் – 43

(Tamil Sex Stories - Aanmai Thavarael 43)

Raja 2013-12-26 Comments

Tamil Sex Stories – அன்று மாலை வரை அசோக் ஹாஸ்பிட்டலில்தான் இருந்தான். கற்பகத்தின் கணவருக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டான். தனது அக்கவுன்ட்டில் இருந்து ஹாஸ்பிட்டலின் அக்கவுன்ட்டுக்கு பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்தான். உடனடியாய் சிகிச்சை ஆரம்பித்தார்கள். பனிரெண்டு மணிக்கு ஆரம்பித்த அறுவை சிகிச்சை மூன்று மணிக்கு முடிந்தது. அப்புறம் ஒரு அரை மணிநேரம் கழித்துத்தான் ‘இனி பயப்படுவதற்கு எதுவும் இல்லை..’ என்று ஆபரேஷன் செய்த டாக்டர்களில் ஒருவர் வந்து சொல்லி சென்றார். அதன் பிறகுதான் அசோக்கும், கற்பகமும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

அசோக் வீட்டுக்கு திரும்புகையில் மணி மாலை ஐந்தை நெருங்கியிருந்தது. கற்பகம் காருக்குள் வைத்து பேசிய பேச்சின் தாக்கம் இன்னும் குறையாதவனாகவேதான் அவன் காட்சியளித்தான். காரில் இருந்து இறங்கி ஒரு எந்திரம் போலதான் நடந்து சென்று, காலிங் பெல்லை அழுத்தினான். நந்தினி வந்து கதவு திறந்தாள். அசோக் வீட்டுக்குள் நுழைந்தான்.

உள்ளே சென்றதுமே அவன் தன் மனைவியை ஆசையும் காதலுமாய் பார்க்க, அவனுடைய மனமாற்றத்தை அறியாத அவளோ அவனை பார்த்து அமைதியாக ஒரு புன்னகையை சிந்தினாள். ஓரிரு விநாடிகள்தான்..!! அதற்குள்ளாகவே நந்தினியின் பார்வையில் அது பட்டு விட்டது.. அசோக்கின் சட்டையில்.. இடது புறத்தில்.. இடுப்புக்கு சற்று மேலே.. உள்ளங்கை அகலத்திற்கு வட்டமாய்.. சிவப்பு கலரில்.. ரத்தம்..!!! அதை பார்த்த மாத்திரத்திலே நந்தினி பக்கென அதிர்ந்து போனாள்.

“எ..என்னங்க இது..????” என்று பதறினாள்.

“எ..எது..??”

“ஐயோ.. ரத்தங்க..!!!!”

நந்தினி பயந்து போய் அலறினாள். அசோக்கும் அப்போதுதான் அதை கவனிக்கிறான். காயம்பட்டு சிகிச்சைக்கு வந்த ஒருவர் ஹாஸ்பிட்டலில் அவன் மீது மோதியது, இப்போது அவனுடைய நினைவுக்கு வரவில்லை.

“இ..இது எப்படி..??” என்று குழம்பினான்.

“என்னங்க ஆச்சு.. சொல்லுங்க.. என்னாச்சு..???” நந்தினி தவிப்பும், துடிப்புமாய் கத்தினாள்.

“ஒ..ஒன்னும் ஆகலை நந்தினி.. இது எப்படி..”

அசோக் சொல்லிக்கொண்டிருக்க, அவன் சொல்வதை எல்லாம் கவனிக்கிற மனநிலையில் நந்தினி இல்லை. கணவனின் ஆடையில் உதிரத்தை பார்த்த மாத்திரத்திலேயே, உச்சபட்ச பதற்றத்துக்கு உள்ளாகியிருந்தாள். அவளுடைய விரல்கள் எல்லாம் நடுநடுங்க, அதே விரல்களாலேயே, டக்-இன் செய்யப்பட்டிருந்த அவனது சட்டையை பற்றி, சரக்கென மேலே இழுத்தாள். பனியனை தூக்கி அவனுடைய உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று பதறும் விரல்களால் தடவி தடவி பார்த்தாள்.

“எனக்கு ஒன்னும் இல்ல நந்தினி.. இது வேற யாரோட ரத்தம்..!!”

“திரும்புங்க.. பின்னாடி திரும்புங்க..”

“ஐயோ.. எனக்கு ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல..??”

அசோக் சொன்னது அவள் காதில் விழவே இல்லை. விலாப்பக்கம் இருந்து ஒருவேளை ரத்தம் கசிகிறதோ என தவிப்புடன் தடவிப் பார்த்தாள். அவளுடைய பார்வை அங்கும் இங்கும் கிடந்து அல்லாடியது. அவனுடைய உடலில் இருந்து ரத்தம் கசியவில்லை என்பதை இப்போது அவளுடைய புத்தி அறிந்து கொண்டிருந்தாலும், ஒருவேளை இருந்துவிடுமோ என்று அவளுடைய காதல்மனம் பதைபதைத்தது.

தனது உடையில் ரத்தத்தை பார்த்ததுமே, புத்தி பேதலித்துப் போனவள் மாதிரி நடந்துகொள்கிற மனைவியையே, அசோக் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய பரிதவிப்பை பார்க்க பார்க்க.. அவனுடைய கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நீரை கசிய ஆரம்பித்தன. ‘ஆடையில் ரத்தத்தை பார்த்ததற்கே இப்படி துடித்துப் போகிறாளே..?? என் அங்கத்தில் பார்த்தால் என்ன ஆவாள்..?? என் மீதுதான் எவ்வளவு காதல் இவளுக்கு..?? இவள் கிடைக்க நான் நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்..??’

“எனக்கு ஒன்னும் இல்ல நந்தினி..!!”

அசோக் இப்போது தழதழத்துப் போன குரலில் சொன்னான். நந்தினி இப்போது நிமிர்ந்தாள். அவளுடைய கண்களில் அப்பியிருந்த பயம் இன்னும் குறையவில்லை. தனது இரு கைகளாலும் அசோக்கின் கன்னங்களை தாங்கிப் பிடித்தவாறு, இன்னும் பதற்றம் குறையாதவளாய் கேட்டாள்.

“ஒன்னும் இல்லைலப்பா.. ஒன்னும் இல்லைல..??”

அதற்கு மேலும் அசோக்கால் தாங்க முடியவில்லை. இரண்டு கைகளாலும் நந்தினியின் கன்னத்தைப் பற்றி, அவளுடைய முகத்தை தன்னை நோக்கி சரக்கென இழுத்து, பயத்தில் படபடத்துக் கொண்டிருந்த அவளது உதடுகளை தனது உதடுகளால் அழுத்தமாக அணைத்து மூடினான். நந்தினி அதை எதிர்பார்த்திரவில்லை. கணவனின் இதழ்களுக்குள் அவளது இதழ்கள் அடங்கிப் போயிருக்க.. அவனுடைய முத்தம் உடல் முழுதும் சர்ரென ஒரு மின்சாரத்தை பாய்ச்சியிருக்க.. அவளது கண்கள் ரெண்டும் தானாக, மெல்ல மூடிக் கொண்டன.

அசோக் நந்தினியின் உதடுகளை மென்மையாக, ஆசையாக, காதலாக சுவைத்து முத்தமிட்டான். அவளும் அவனது சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டு, இதழ்களை அவன் வசம் இழந்திருந்தாள். அவளுடைய மார்புப்பந்துகள் ரெண்டும் அவனது நெஞ்சில் மெத்தென்று அழுந்தியிருந்தன. அவளது இதயம் அதிகபட்ச வேகத்தில் துடிப்பதை அவனால் தெளிவாக உணர முடிந்தது. அவளது மார்புத் துடிப்பு சீராகும் வரை அவளுடைய உதட்டை கவ்வியிருந்தான். இதழ்களை சுவைத்து சுவைத்தே அவளது இதயத்துடிப்பை கட்டுக்குள் கொண்டுவந்தான். பிறகு அந்த மெல்லிய உதடுகளை மெல்ல விடுவித்தான்.

நந்தினி இப்போது இமைகளை மெல்ல பிரித்து கணவனின் முகத்தை ஏறிட்டாள். நெஞ்சின் படபடப்பு இப்போது குறைந்து போயிருக்க, அவனது முகத்தையே ஒருமாதிரி மலங்க மலங்க பார்த்தாள். அசோக்கும் தன் மனைவியின் எழில் முகத்தை, ஏக்கமும் காதலுமாய் பார்த்தான். பிறகு சற்றே பரிதாபமான குரலில் மீண்டும் சொன்னான்.

“எனக்கு ஒன்னும் இல்லடி..!!”

நந்தினி ஓரிரு விநாடிகள்தான் அசோக்கை அவ்வாறு பார்த்திருந்திருப்பாள். அப்புறம் அவனை ஆவேசமாய் அணைத்துக் கொண்டாள். அசோக்கும் அவளை ஆரத்தழுவிக் கொண்டான். அதன் பிறகு இருவதும் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே, அப்படியே நின்றிருந்தார்கள். அசோக் அவளுடைய நெற்றியில் ‘இச்.. இச்.. இச்..’ என்று தனது இதழ்களை ஒற்றி எடுத்தான். நந்தினியும் பதிலுக்கு அவனுடைய மார்பில் முத்தமிட்டு கணக்கை சரி செய்து கொண்டிருந்தாள்.

தன் மார்பில் படர்ந்திருந்த நந்தினியின் முகத்தை அசோக் மெல்ல நிமிர்த்தினான். அவளுடைய கன்னங்களை மெல்ல வருடினான். கட்டை விரலால் அவளுடைய கனியிதழை தடவினான். ‘எனக்காகவே வாழ்கிறவள்.. என் மீது கொள்ளை கொள்ளையாய் காதல் வைத்திருப்பவள்.. எனக்கொன்றென்றால் துடித்துப் போகிறவள்.. என் அன்புக்காக ஏங்குகிறவள்.. என்னுடன் வாழப்பிறந்தவள்.. என் மனைவி..!!’ என்ற நினைப்புடன் நந்தினியை பெருமிதமாக பார்த்தான். பிறகு உள்ளத்தில் பொங்கிய காதலின் உதவியுடன்.. தனது ஈகோவை காலால் எட்டி உதைத்தவாறே..

“ஸாரி நந்தினி..” என்றான் வருத்தமான குரலில்.

“ஸா..ஸாரியா.. எதுக்கு..??” நந்தினி மெலிதாக பதறினாள்.

“இத்தனை நாளா உன்னை தவிக்க விட்டதுக்கு.. உண்மையான சந்தோசம் எதுன்னு தெரியாம இருந்ததுக்கு..!!”

“ச்சே.. என்னப்பா நீங்க.. அதெல்லாம் ஒண்ணுல்ல..!!”

“இல்ல நந்தினி.. நான் சரியாத்தான் பேசுறேன்..!! இத்தனை நாளா உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்டா.. இனி அப்படி செய்ய மாட்டேன்..!! இனிமேயும் எனக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வேணாம் நந்தினி.. எனக்கு இனிமே எல்லாம் நீதான்னு வந்து நிக்கிறேன்..!! காலைல நீ சொன்ன மாதிரி என்னை பாத்துப்பியா..?? கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பியா..??”

அசோக்கின் குரலில் ஒரு மிதமிஞ்சிய ஏக்கம். நந்தினி அவனது வார்த்தைகளில் அப்படியே உருகிப் போனாள்.

“பாத்துக்குறேன் அசோக்..!! நான் சொன்ன மாதிரி இல்ல.. நீங்க கௌரம்மாட்ட சொன்ன மாதிரி..!! ஒரு அம்மா மாதிரி உங்களை பாத்துக்குறேன்.. சரியா..???”

கண்களில் நீர் கசிய சொன்ன மனைவியை அசோக் காதலாக பார்த்தான். அவளுடைய நெற்றியுடன் தனது நெற்றியை இடித்து சேர்த்துக் கொண்டான். அவளது அழகு முகத்தை அருகில் இருந்து ஆசையாய் பருகினான். பிறகு அவளுடைய நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்துவிட்டு, மெல்லிய குரலில் அந்த வார்த்தைகளை சொன்னான்.

“ஐ லவ் யூ நந்தினி..!!”

உள்ளமெல்லாம் சந்தோசம் பொங்கிப் பெருக, நந்தினி தன் கணவனை ஏறிட்டாள். ஆறு வருடங்களுக்கு முன்பாக அவனிடம் இருந்து கேட்ட அந்த வார்த்தைகளை.. மீண்டும் அவனுடைய வாயில் இருந்து வரவைக்க.. அவளுக்குத்தான் எத்தனை போராட்டம்.. எத்தனை வலி.. எத்தனை வேதனை..!! ஆனால் அத்தனையும் இப்போது.. அந்த வார்த்தைகள் அவள் காதில் வந்து விழுந்தபோது.. இருந்த இடம் தெரியாமல் பறந்து போயிருந்தன..!! உடலெல்லாம் ஒரு உன்னதமான சிலிர்ப்பு உடைப்பெடுத்து ஓட.. பேசக்கூட வார்த்தையின்றி நின்றிருந்தாள் நந்தினி..!! ‘இவன் எனக்கே எனக்கு..!!’ என்று வேகம் கொண்டவளாய், ஆவேசமாக அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அன்று இரவு.. அவர்களது படுக்கையறை..!!

Comments

Scroll To Top