ஆண்மை தவறேல் – 23

(Tamil Sex Stories - Aanmai Thavarael 23)

Raja 2013-12-05 Comments

Tamil Sex Stories – சூளைமேடு ஹைரோடில், சுற்றிலும் தென்னை மரங்களாளும் நெட்டிலிங்க மரங்களாளும் சூழப்பட்டு, பிரம்மாண்டமான நிற்கும் அந்த மூன்று நட்சத்திர ஹோட்டல். அசோக் அந்த ஹோட்டலுக்குள் தன் காருடன் நுழைந்த போது மணி மாலை 6.15. விசிட்டர்கள் பார்கிங் செய்யும் ஏரியாவுக்குள் காரை செலுத்தி அங்கேயே காரை நிறுத்திக்கொண்டான். பின் சீட்டில் இருந்த ப்ரீஃப்கேஸை எடுத்துக்கொண்டு ரிசப்ஷன் வந்தான். கருநீல நிற புடவையில், காதில் ஹெட்ஃபோனும், வாயில் மைக்குடனும் இருந்த ரிசப்ஷனிஸ்டை அணுகி, அந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் ஒருவரை தான் சந்திக்க வந்திருக்கும் விஷயத்தை சொன்னான்.

a3

“ஹிஸ் நேம்..?” ரிஷப்ஷனிஸ்ட் கேட்டதற்கு,

“பரமேஸ்வரன் ஃப்ரம் புனே..!!”

“நீங்க வர்ற விஷயம் அவருக்கு தெரியுமா..?”

“எஸ்.. ஹீ ஸ் வெயிட்டிங் ஃபார் மீ..!!”

“யூ ஆர் மிஸ்டர்..??”

“அசோக்..!! அசோக் ஃப்ரம் A-ONE Flow Controls..!!”

“ஒன் மொமன்ட் ப்ளீஸ்..”

சொன்ன ரிஷப்ஷனிஸ்ட் டெலிபோனை கையிலெடுத்து அந்த பரமேஸ்வரன் இருந்த அறைக்கு கால் செய்தாள். அவள் அனுமதி பெறுவதற்காக காத்திருந்த நேரத்தில் அசோக் தன் பார்வையை சுழற்றி, அந்த இடத்தை ஒருமுறை நோட்டமிட்டான். சற்றே பெரிய ரிஷப்ஷன் அறைதான். அறையின் ஒரு பக்கம் ஒரு மல்ட்டிகுஷன் ரெஸ்டாரன்ட். இன்னொரு பக்கம் பார்ட்டி ஹால். இன்று ஏதோ ஓவிய கண்காட்சி என்று வெளியே போர்ட் வைக்கப்பட்டிருந்தது. அறை சீலிங்கின் மையத்தில் ஒரு பெரிய சாண்டலியர் விளக்கு தொங்கிக்கொண்டிருந்தது. அதற்கு நேர் கீழே கிடந்த மர டேபிளில் நாளிதழ்களும், வார இதழ்களும் பரவி கிடந்தன. அதை சுற்றி போடப்பட்டிருந்த சொகுசு சோபாக்கள் இப்போது காலியாகவே இருந்தன. அங்காங்கே வைக்கப்பட்டிருந்த வெண்கல தொட்டிகளில் வண்ண வண்ணமாய் மலர்கள் முளைத்திருந்தன.

“எக்ஸ்க்யூஸ் மீ..” ரிஷப்ஷனிஸ்ட் அழைக்க,

“எஸ்..” என்றான் அசோக் திரும்பி.

“உங்களை வர சொல்றார்.. தேர்ட் ஃப்ளோர்.. ரூம் நம்பர் 307..!!”

“தேங்க்யூ..!!”

விசிட்டர்ஸ் புக்கில் ஒரு என்ட்ரி போட்டுவிட்டு, ரிஷப்ஷனிஸ்டிடம் ஒரு புன்னகையை வீசிவிட்டு, அசோக் லிஃப்ட் நோக்கி நடந்தான். மூன்றாவது மாடியை அடைந்து அவள் சொன்ன அறை எண்ணை தேடினான். அறையை கண்டுபிடித்து காலிங் பெல் அடித்து காத்திருந்தான். கதவை திறந்த பரமேஸ்வரன் புன்னகையுடன் வரவேற்றார்.

“கமான் இன் அசோக்.. உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. சொன்ன மாதிரி ஷார்ப் டைம்க்கு வந்துட்டீங்க..!!”

இருவரும் உள்ளே சென்றார்கள். பரமேஸ்வரன் ரிஷப்ஷனை அழைத்து காபி கொண்டு வர சொன்னார். சோபாவில் அமர்ந்து கொண்டு, காபியை உறிஞ்சிக்கொண்டு பொதுவாக கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தார்கள். அப்புறம் பரமேஸ்வரன்,

“உங்க பர்சேஸ் ஆர்டர் பேக்ஸ் வந்துடுச்சு அசோக்.. சைன் பண்ணி ரெடியா வச்சிருக்கேன்..” என்று அந்த கவரை நீட்டினார்.

அசோக் அந்த கவரை வாங்கி பிரித்தான். உள்ளே இருந்த லெட்டரில் பிரிண்ட் ஆகியிருந்த இலக்கங்களை சரிபார்த்தான். சந்தோஷமானவன் பரமேஸ்வரனை ஏறிட்டு புன்னகைத்தான்.

“தேங்க்ஸ் ஸார்..”

“ஹேப்பிதான அசோக்..?”

“ரொம்ப ரொம்ப ஹேப்பி..!! என்னை நம்பி இவ்வளவு பெரிய காண்ட்ராக்ட் கொடுத்ததுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை..!!”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் அசோக்.. வேலையை பக்காவா முடிச்சு கொடுங்க.. அது போதும்..!!”

“கண்டிப்பா ஸார்.. கவலையே படாதீங்க..!!”

தன் ப்ரீஃப்கேஸ் திறந்து அந்த கவரை உள்ளே வைத்த அசோக், உள்ளே இருந்த அந்த ஜ்வல் பாக்ஸை வெளியே எடுத்தான். பரமேஸ்வரனிடம் நீட்டினான். புன்னகையுடனே சொன்னான்.

“இது உங்க வொய்ஃபுக்கு மிஸ்டர் பரமேஸ்வரன்.. ஒரு சின்ன கிஃப்ட்..!!”

“ஐயோ.. எதுக்கு இதெல்லாம் அசோக்..??”

பரமேஸ்வரன் இளித்தவாறே அந்த ஜ்வல் பாக்ஸை வாங்கிக்கொண்டார். உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தார். பார்த்ததும் அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு ஒன்று எரிந்தது. மனதில் இருந்த சந்தோஷத்தை முகத்தில் காட்டாமல் மறைத்துக்கொண்டே சொன்னார்.

“என்ன அசோக்.. எதுக்கு இவ்ளோ காஸ்ட்லியான கிஃப்ட்லாம்..??”

“பரவால்ல ஸார்.. இருக்கட்டும்..”

அவர் அசோக்கிற்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு, அந்த ஜ்வல் பாக்ஸை எட்டி மெத்தை மீது வைத்தார். அப்போதுதான் அசோக் அதை கவனித்தான். மெத்தை மீது பிரவுன் ராப்பர் சுற்றப்பட்ட அந்த அகலமான பார்சல். அது என்னவாயிருக்கும் என்று அவனுக்கு ஆர்வம் மேலிட, அதை அவரிடமே கேட்டுவிட்டான்.

“என்ன ஸார் அது..?” அவன் கேள்விக்கு ஒருகணம் திகைத்த பரமேஸ்வரன், பிறகு உடனே புரிந்துகொண்டு

“ஓ.. இதுவா..?? இது ஒரு பெயிண்டிங்..!!”

“பெயிண்டிங்கா..?? உங்களுக்கு அதுலலாம் இன்ட்ரஸ்ட் இருக்கா..??”

“ஹாஹா..!! எனக்கு ரொம்பலாம் இன்ட்ரஸ்ட் இல்லை அசோக்.. ஆனா என் வொய்ஃபுக்கு இன்ட்ரஸ்ட் உண்டு..!! இந்த ஹோட்டல்ல கீழ ஒரு ஓவிய கண்காட்சி ஒன் வீக்கா போயிட்டு இருக்கு.. ஈவினிங் சும்மா அப்படியே போய் வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்.. இது எனக்கு புடிச்சிருந்தது.. என் வொய்ஃபுக்கும் புடிக்கும்னு தோனுச்சு.. வாங்கிட்டேன்..!! உங்களுக்கு பெயிண்டிங்ல இன்ட்ரஸ்ட் உண்டுங்களா..??”

“ம்ம்.. கொஞ்சம் கொஞ்சம்..!!”

“பிரிக்கிறேன்.. பெயின்டிங்கை பாக்குறீங்களா..?”

“ஐயையோ.. வே..வேணாம் ஸார்.. விடுங்க..” அசோக் தயங்கினான்.

“பரவால அசோக்.. பாருங்க.. இதுல என்ன இருக்கு..?”

அவர் அந்த ராப்பரை பிரித்தார். பெயிண்டிங்கை அசோக்கிடம் நீட்டினார். அவனும் கையில் வாங்கி பார்த்தான். மிக அழகாக இருந்தது அந்த பெயிண்டிங். கானகத்தில் இருந்த ஒரு மரக்கிளையில்.. கண்ணனும் ராதையும் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள்..!! மலராலான ஊஞ்சலில்.. பொன்னாலான பலகையில் இருவரும் அமர்ந்திருந்தார்கள்..!! கண்ணன் ராதையை காதலாக பார்க்க, ராதையோ வெட்கத்தில் தலை குனிந்திருந்தாள். அவர்களுக்கு முன்பாக நின்று இரண்டு மயில்கள் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தன. அதற்கு பின்புறம் இருந்த ரம்யமான பின்னணியில் ஒரு நீரோடையும், அதில் நீந்தி செல்லும் அன்னப் பறவைகளும்..!!

“அமேஸிங்..!!” வியந்தான் அசோக்.

“நெஜமாவா..?? நல்லாருக்கா..??”

“ரொம்ப நல்லாருக்கு ஸார்..”

“என் வொய்ஃபுக்கு புடிக்குமா..?”

“கண்டிப்பா புடிக்கும்.. ஷீ இஸ் கோனா லவ் திஸ்..!! இதை வரைஞ்ச ஆர்ட்டிஸ்ட் பேர் என்ன..?”

“ஹ்ஹ.. இப்போதான் பார்த்தேன்.. அதுக்குள்ளே மறந்துடுச்சு.. அந்த கார்னர்ல பேர் இருக்கும் பாருங்க..”

அவர் சொன்னதும் அசோக் அந்த பெயிண்டிங்கில் அந்த ஓவியத்தை வரைந்த ஓவியரின் பெயரை தேடினான். பெயிண்டிங்கின் கீழே இடதுபக்க மூலையில் அந்த பேர் எழுதப்பட்டிருந்தது. புனிதா..!! அதை பார்த்ததும் அசோக்கிற்கு ஒரு பரீட்சய உணர்வு எழுந்தது.

“புனிதா..???” கேட்டான் பரமேஸ்வரனிடம்.

“ஆங்.. ஆமாம்.. கரெக்ட்..!! கீழ எக்ஸிபிஷன்ல இருக்குறது எல்லாம் அவங்க வரைஞ்ச ஓவியந்தான்..!!”

“ஓஹோ..?? நான் நெனைக்கிறது சரியா இருந்தா.. இந்த புனிதா.. குமுதம் ஆனந்த விகடன் படிக்கிறவங்ககிட்டரொம்ப பாப்புலர்.. இப்போ ரீசண்டா இவங்களோட நெறைய ஓவியம் அந்த புக்ஸ்ல வந்திருக்கு..!!”

“ஓ..!! அப்படியா..?? அல்ரெடி இவங்க ரொம்ப பாப்புலரா..??”

“சிக்னேச்சர் பாத்தா அப்படித்தான் தோணுது.. எனக்கும் சரியா தெரியலை..!!”

“ஓகே ஓகே..!!”

அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து அசோக் கிளம்புவதாக சொன்னான். அந்த பரமேஸ்வரன் அவனை மது அருந்திவிட்டு போகலாம் என்று சொன்னார். வேண்டாம் என்று மறுத்த அசோக்கை கட்டாயப் படுத்தினார். வேறு வழியில்லாமல் ஒரே ஒரு லார்ஜ் என்று அசோக் ஒத்துக்கொண்டான். மேலும் ஒரு பதினைந்து நிமிடங்கள் செலவழித்து இருவரும் மது அருந்தி முடித்தனர்.

அந்த அறையை விட்டு கிளம்பி அசோக் கீழ்த்தளத்துக்கு வந்தான். முதலில் ஹோட்டலை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் கார் பார்க்கிங் ஏரியாதான் செல்ல நினைத்தான். அப்புறந்தான் அவனுடைய கண்களில் அந்த ஓவிய கண்காட்சி போர்ட் மீண்டும் பட்டது. உள்ளே சென்று ஒரு முறை ஓவியங்களை பார்வையிட்டு வரலாம் என்று தோன்றியது. ஓரிரு விநாடிகள்தான் யோசித்திருப்பான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்த ஹாலுக்குள் நுழைந்தான்.

மிகவும் அமைதியாக இருந்தது அந்த ஹால். அதிகமும் இல்லாமல் குறைவும் இல்லாமல் ஆங்காங்கே ஜனங்கள் அந்த அறையை நிறைத்திருந்தனர். அனைவரும் அமைதியாக ஓவியங்களை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அசோக்கும் அந்த ஜனங்களுடன் கலந்து கொண்டான். பொறுமையாக ஒவ்வொரு ஓவியமாக ரசித்து ரசித்து பார்வையிட ஆரம்பித்தான்.

அனைத்து ஓவியங்களையுமே அசோக்கிற்கு மிகவும் பிடித்திருந்தது. பார்த்து பார்த்து வியந்தான். அனைத்தும் கேன்வாஸில் தீட்டப்பட்ட ஓவியங்கள். ஒரு கட்டுக்குள் அகப்படாமல் காட்டாற்று வெள்ளம் போல, அந்த ஓவியங்களை வரைந்த ஓவியனின் தூரிகை பலதரப்பட்ட விஷயங்களை தொட்டிருந்தது. ஆன்மிகம் பேசியது.. அரசியலை ஏசியது.. இயற்கையழகை கொட்டியிருந்தது.. ஈழப்படுகொலையை திட்டியிருந்தது.. தாய்மையின் புனிதம் சொன்னது.. தாயகத்தின் பெருமை உரைத்தது..!! வண்ணம், செறிவு, அளிக்க நினைத்த உணர்வு என அனைத்து வகையிலும் பூரணமான ஓவியங்கள்..!!

Comments

Scroll To Top