ஆண்மை தவறேல் – 33

(Tamil Hot Stories - Aanmai Thavarael 33)

Raja 2013-12-15 Comments

Tamil Hot Stories – அன்று மதியம் நந்தினி வழக்கம் போல அசோக்கிற்கு சாப்பாடு கொண்டு செல்ல ஆபீஸுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். சமைத்த உணவை ஒரு ஹாட்பாக்ஸில் வைத்து மூடி, பிறகு அந்த ஹாட்பாக்ஸை ஒரு கூடையில் வைத்து எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். ஹாலில் நின்றுகொண்டிருந்த ராமண்ணாவிடம்,

“ம்ம்.. கெளம்பலாம் ராமண்ணா..” என்றாள்.

“இரும்மா.. ஐயாவும் வர்றேன்னு சொன்னாரு..”

ராமண்ணா சொல்லவும் நந்தினி அங்கு கிடந்த சோபாக்களில் ஒன்றில் அமர்ந்து கொண்டாள். மஹாதேவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். மஹாதேவன் வாரத்துக்கு இரண்டு நாட்கள்தான் ஆபீஸுக்கு செல்வார். பெரும்பாலும் காலையிலேயே சென்று விடுவார். மதியம் திரும்பி விடுவார். சில நேரங்களில்தான் இந்த மாதிரி மதியம் ஆபீஸுக்கு செல்வது. அவ்வாறு செல்கையில் நந்தினியுடன் சேர்ந்தே சென்று விடுவார். அசோக் சாப்பிட்டதும் நந்தினி காரில் திரும்பி விட, மஹாதேவன் இரவு அசோக்குடன் வீடு திரும்புவார்.

ஒரு இரண்டு நிமிடங்களிலேயே மஹாதேவன் வந்துவிட, மூவரும் காரில் கிளம்பினார்கள். ராமண்ணா காரை செலுத்திக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே மஹாதேவன் அமர்ந்திருந்தார். பின் சீட்டில் நந்தினி. கார் மிதமான வேகத்தில் அடையாறு நோக்கி சென்றுகொண்டிருக்க, மஹாதேவன் மெல்ல மருமகளிடம் பேச்சு கொடுத்தார்.

“அம்மா, தங்கச்சிலாம் எப்படிம்மா இருக்காங்க..?”

“ம்ம்.. நல்லாருக்காங்க மாமா..”

“அம்மா செக்கப்புக்குலாம் ஒழுங்கா போறாங்களா..?”

“போ..போறாங்க..”

“ம்ஹ்ம்.. இங்க வந்து நம்ம கூடயே இருக்கலாம்.. கவனிச்சுக்க ஆளு இருக்கும்.. சொன்னா உங்க அம்மா கேக்க மாட்டேன்றாங்க..”

“இல்ல மாமா.. அது அப்பா வாழ்ந்த வீடு.. அதை விட்டுட்டு வர அம்மாவுக்கு இஷ்டம் இல்ல..!!”

“ம்ம்.. புரியுதும்மா.. அதுதான் நானும் ரொம்ப கட்டாயப் படுத்தலை..!! ம்ஹ்ம்.. அப்புறம்.. நம்ம அசோக் ஐயா என்ன சொல்றாரு..?” மஹாதேவனின் கேள்வி திடீரென வேறு பக்கமாக பாய, நந்தினி குழம்பினாள்.

“எ..என்ன சொல்றார்னா..? பு..புரியலை மாமா..”

“ஹாஹா.. அவனை மாதிரியே நீயும் நடிக்காதம்மா.. உங்களுக்குள்ள ஏதோ சண்டைனு எனக்கு புரியுது.. ஆனா எதுவுமே இல்லாத மாதிரி ரெண்டு பேரும் நல்லா நடிக்கிறீங்க..!! ஆனா நீங்க இப்படி இருக்குறதை பாத்து.. எங்களுக்குத்தான் தெனமும் ரொம்ப கவலையா இருக்கு..!!”

“ஐயோ.. நீங்க கவலைப்படுற அளவுக்குலாம்.. எங்களுக்குள்ள ஒன்னும் பெரிய சண்டை இல்ல மாமா.. இது சும்மா.. சின்னதா ஒரு மனஸ்தாபம்..!!”

“ம்ம்ம்.. புருஷன் பொண்டாட்டின்னா இந்த மாதிரி மனஸ்தாபம் வர்றது சகஜம்தான்..!! அது சின்னதோ பெருசோ.. அப்பப்போ அதை மனசு விட்டு பேசி தீத்துடனும்.. நீங்க ரெண்டு பேரும் இப்படி பேசாமலே இருந்தா.. அந்த விரிசல் பெருசாகிட்டேதான்மா போகும்..!! நான் சொல்றது புரியுதா..??”
“ம்ம்.. புரியுது மாமா..”

“அவனுக்கு கொஞ்சம் புடிவாதம் ஜாஸ்தி.. நீதான் அதை பேலன்ஸ் பண்ற மாதிரி நடந்துக்கனும்.. அவன்கிட்ட நீ பணிஞ்சு போகணும்னு அவசியம் இல்ல.. அதே நேரம் பிரச்னையை முத்த விடுறதும் ரொம்ப தப்பு..!!”

“ம்ம்..”

“எதை நெனச்சும் நீ கவலைப்பட வேணாம்மா.. என் சப்போர்ட் எப்போவும் உனக்குத்தான்..!! சரியா..??”

“ம்ம்.. சரி மாமா..”

அப்புறம் மஹாதேவன் ராமண்ணாவிடம் பேச ஆரம்பித்து விட்டார். நந்தினியோ மனதுக்குள் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். தங்களுக்குள்ளான பிரச்னையால் சுற்றி இருப்பவர்களை கவலை கொள்ள செய்வது தவறு என்று புரிந்தது. மஹாதேவன் சொல்வது மாதிரி பிரச்னையை முற்ற விடுவதும் தவறுதான். அசோக் மனம் விட்டு பேச முன்வரும்போதேல்லாம் அவனை காயப்படுத்தி அனுப்பியதை எண்ணி, அவளையே அவள் கடிந்து கொண்டாள். இன்று இரவு அவளாகவே சென்று அவனிடம் பேசி பிரச்சினை பெரிதாகாமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

ஆபீஸை அடைந்தார்கள். காரை பார்க் செய்த ராமண்ணா காருக்குள்ளேயே அமர்ந்து கொள்ள, மஹாதேவனும் நந்தினியும் மட்டும் காரை விட்டு இறங்கி ஆபீஸுக்குள் நுழைந்தார்கள். அசோக் இருக்கும்போது கூட ஆபீஸில் அவ்வப்போது சிரிப்பொலியையும், வெட்டி அரட்டையையும் கேட்க இயலும். ஆனால் மஹாதேவன் வந்துவிட்டால் ஆபீஸே சைலன்ட் ஆகிவிடும். ஆபீஸ் வேலையை தவிர வேறெந்த வேலையை பார்க்கவும் யாரும் துணிய மாட்டார்கள். அன்றும் அப்படித்தான்.. அவரை கண்டதும் ஆபீஸே கப்சிப் ஆனது.. எழுந்து நின்று வணக்கம் சொன்னது..!!

“குட் ஆஃப்டர்நூன் ஸார்..” எதிரே வந்த கற்பகமும் அவருக்கு வணக்கம் சொன்னாள்.

“குட் ஆஃப்டர்நூன்..!! உங்க எம்.டி இருக்காராம்மா..??”

“ஆங்.. இருக்காரு சார்..”

முகம் முழுவதும் மலர்ச்சியாய் சொன்ன கற்பகத்தை, மஹாதேவன் ஒரு புன்னகையுடனே கடந்து செல்ல, அவருக்கு பின்னால் வந்த நந்தினி ஓரக்கண்ணால் முறைத்து பார்த்தவாறே கடந்து சென்றாள். கதவை உள்ளே தள்ளி, இருவரும் அசோக்கின் அறைக்குள் நுழைந்தார்கள். நுழைந்தவர்கள் உள்ளே கண்ட காட்சியில் உச்ச பட்ச அதிர்ச்சிக்கு உள்ளாகி, அப்படியே உறைந்து போய் நின்றார்கள்.

அத்தியாயம் 25

அடையாறு ஆபீஸ். அசோக் அவனது அறையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்பாக திறந்திருந்த மடிக்கணிணியில் அந்த மாத வங்கிக் கணக்கு விவர அறிக்கையை வாசித்து சரிபார்த்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் டேபிளில் இருந்த இன்டர்காம் கிணுகிணுத்தது. பார்வையை திருப்பி டிஸ்ப்ளே பார்த்தவன் ரிஷப்ஷனிஸ்ட் வஸந்தி அழைக்கிறாள் என்று புரிந்து கொண்டான். ரிசீவரை எடுத்து காதில் வைத்துக்கொண்டு,

“சொல்லு வஸந்தி..” என்றான்.

“ஸார்.. உங்களை பாக்க டெய்ஸின்னு ஒருத்தங்க வந்திருக்காங்க..”

“டெய்ஸியா..??” அசோக் புருவத்தை சுருக்கினான்.

“யா.. இன்டர்வ்யூக்கு வர சொல்லிருந்தீங்களாம்.. கைல உங்களோட பிசினஸ் கார்ட் வச்சிருக்காங்க..”

வஸந்தி சொல்ல அசோக் இப்போது நெற்றியை கீறிக்கொண்டான். ‘யார் அது டெய்ஸி..?? அவளை எப்போது நான் இன்டர்வ்யூக்கு வர சொன்னேன்..?? எனது பிசினஸ் கார்ட் வேறு வைத்திருப்பதாக சொல்லுகிறாளே..??’ ஒரு ஐந்தாறு வினாடிகள் குழப்பமாக யோசித்த அசோக், அப்புறம்

“சரி உள்ள வர சொல்லு..” என்றான்.

டேபிள் மீதிருந்த மடிக்கணினியை மூடி ஓரமாக வைத்தான். யார் அந்த டெய்ஸி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அறைக்கதைவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு அரை நிமிடத்திலேயே அந்த கதவு திறந்தது. புன்னகை வழியும் முகத்துடன் உள்ளே நுழைந்தவளை பார்த்த அசோக், மெலிதாய் ஒரு அதிர்ச்சிக்கு போனான். அப்புறம் அந்த அதிர்ச்சி உடனே சலிப்பாய் மாறியது.

அவள்.. அந்தப்பெண்.. நான்ஸி..!! தன் உடலை மூலதனமாக நம்பி, எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பி, சென்னையில் வந்து களம் இறங்கியவள்..!! அசோக்கிற்கு சுகமாக நகம் வெட்டி விட்டவள்..!! வந்த முதல்நாளே அவனிடம் காதல்மொழிகளை உளறிக்கொட்டி, பிறகு அவனால் புறக்கணிக்கப்பட்டவள்..!! இவள் எங்கே இங்கே..?? மனதில் இருந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு, புன்னகையுடனே அசோக் அவளை வரவேற்றான்.

“ஹேய்.. நான்ஸி..”

“ஹாய் அசோக்.. எப்படி இருக்கீங்க..?”

“ம்ம்.. நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்குற..?”

“நானும் நல்லா இருக்கேன்..!!”

“டேக் யுவர் ஸீட்..” அசோக் எதிரே கிடந்த சேரை நோக்கி கைநீட்டினான்.

“தேங்க்ஸ்.. என்னை எதிர்பார்க்கலைல..? ஹாஹா..!!” அவள் சேரில் அமர்ந்துகொண்டே சிரிப்புடன் கேட்டாள்.

“ம்ஹூம்.. சத்தியமா எதிர்பார்க்கலை..!! இந்த வஸந்தியோட வாயில வசம்பை வச்சுத்தான் தேய்க்கணும்.. நான்ஸியை டெய்ஸின்னு சொல்லிருக்கா..!!”

“ஹாஹா.. அவ மேல தப்பு இல்லைங்க.. நான்தான் பேரை மாத்தி சொல்லிட்டேன்.. அதுக்காக ஸாரி கேட்டுக்குறேன்..!!”

“ஓ..!! பேரை எதுக்கு மாத்தி சொன்ன..?? உன் உண்மையான பேரை தெரிஞ்சு அவ என்ன பண்ண போறா..??”

“ஐயோ.. நான் பேரை மாத்தி சொன்னது அவகிட்ட இல்ல.. அன்னைக்கு உங்ககிட்ட..!!” அவள் அசோக்கிற்கு பல்பு கொடுக்க,

“என்னது…???” அசோக்கின் முகம் அஷ்ட கோணலாகியது.

“ம்ம்.. என் உண்மையான பேர் டெய்ஸிதான்..!! அன்னைக்கு உங்ககிட்ட நான்ஸின்னு மாத்தி சொல்லிட்டேன்..”

“ஓஹ்.. ஏன் அப்படி செஞ்ச..??” உள்ளுக்குள் எழுந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு அசோக் கேட்டான்.

“என்னை மாதிரி பொண்ணுங்க.. வெளில போறப்போ அந்த மாதிரி புதுசா ஏதாவது பேர் வச்சுக்குறது சகஜம்தான..?? உங்களுக்கு தெரியாததா..?? உண்மையான பேர்லயே அந்த மாதிரி தொழில்லாம் பண்ண முடியுமா..??”

“ம்ம்ம்.. வெவரந்தான்..!! பர்ஸ்ல இருந்து பிசினஸ் கார்ட்லாம் வேற சுட்டிருப்ப போல இருக்கு..??”

“பணத்தை சுடலைல..?? அந்த அளவுக்கு சந்தோஷப்பட்டுக்கோங்க.. ஹாஹா..!!! உங்க கார்ட் சும்மா இருக்கட்டுமேன்னு எடுத்து வச்சேன்..!! நீங்க மட்டும்.. போறவளுகளை ஃபோட்டோ புடிச்சு ஆல்பம் போட்டு வச்சுக்குறது இல்லையா..?? அந்த மாதிரி..!!”

Comments

Scroll To Top