ஆண்மை தவறேல் – 39

(Tamil Hot Sex Stories - Aanmai Thavarael 30)

Raja 2013-12-21 Comments

Tamil Hot Sex Stories – கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோயில் ரோட்டில் இருந்து பிரியும் அந்த குறுகலான சந்துக்குள், அசோக் காரை நுழைத்து குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் குறைவான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய உடல் முழுதும் இப்போது காமவேட்கையில் தகித்துக் கொண்டிருந்தது. ஆறு வருடங்களுக்கும் மேலாக, நினைத்தபோதெல்லாம் பெண்சுகத்திலேயே திளைத்துப் போயிருந்தவன் அவன். இப்போது பல வாரங்களாக எந்தப் பெண்ணையும் அணுகியிருக்கவில்லை. இத்தனை நாட்களாக நந்தினியின் நினைவால், வேறு எந்த பெண்ணையும் பற்றி எண்ணிப்பார்க்க அவனுக்கு நேரம் இல்லை.

ஆனால்.. இன்று அவள் அத்துமீறி நடந்துகொண்டது.. அவனுக்கு அந்த வேட்கையை மீண்டும் ஊட்டியிருந்தது..!! அவளுடைய அழகையும், ஸ்பரிசத்தையும் உணர்ந்த அவனுடைய உடல் ‘பெண் வேண்டும்’ என்று முறுக்கிக்கொண்டது..!! அவள் திமிராக பேசிய வார்த்தைகள் வேறு அவனுடைய கோவத்தை கிளறி விட்டிருந்தன..!!

‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்..?? அவளுடைய அழகை காட்டினால்.. மயங்கி அவளிடம் பணிந்து விடுவேன் என்று நினைத்தாளா..?? அவளுடைய அழகு பிரமிப்பூட்டக் கூடியதுதான்.. ஆனால் நான் பணிகிறவன் இல்லை..!! எத்தனை பேரை பாத்திருக்கிறேன் நான்..?? நீ மூட்டிய தீயை எப்படி அணைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்..!!’

இந்த மாதிரி அவனுடைய உடல் தகிக்கையில், அவன் யாரை தொடர்பு கொள்வான் என்று தெரியுமல்லவா..? நாயரையேதான்..!! ஆனால்.. நாயரை கைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் போக.. நேரிலேயே சென்று பார்த்து விடலாம் என்று கிளம்பிவிட்டான்..!! நாயருடைய வீட்டுக்குத்தான் முதலில் சென்றான். வீடு அடைத்து கிடக்கவும் அருகில் விசாரித்தான். அவர்கள் இந்த தெருவுக்கு கை காட்டினார்கள். அவர்கள் சொன்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகே, காரை ஓரமாக நிறுத்தி இறங்கிகொண்டான்..!!

அது புதிதாக கட்டப்பட்டிருந்த, இரண்டே இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு சிறிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்..!! மொத்தமே எட்டு கடைகள்..!! நான்கு கடைகள் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார்கள்..!! கீழே மூன்றாவதாக இருந்த கடையில்.. கூடிய விரைவில் வியாபாரத்தை ஆரம்பிக்கும் பொருட்டு.. உட்புற வேலைகள் நடந்து கொண்டிருந்தன..!! ‘விரைவில் வருகிறது.. நாயர் பேக்கரி..!!’ என்று வெளியே ஒரு பேனர் தொங்கியது..!! அசோக் அந்த கடைக்குள் நுழைந்தான்..!!

உள்ளே தச்சு வேலையும்.. க்ளாஸ் பொருத்தும் பணியும்.. நடந்து கொண்டிருந்தன. சுவற்றில் அடிக்க மரச்சட்டங்களை ஒரு க்ரூப் செதுக்கிக் கொண்டிருக்க, ஏற்கனவே அடித்து முடிக்கப்பட்ட மரச்சட்டங்களுக்கு இன்னொரு க்ரூப் க்ளாஸ் பொருத்திக் கொண்டிருந்தது. நடக்கிற வேலைகளை நாயர் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார். அசோக் வந்ததை கவனித்தும், கவனியாத பாவலாவுடன்..

“இன்னும் கொஞ்சம்.. அது அலைன்மன்ட் சரியில்ல பாரு.. கரெக்டா மாட்டு..”

என்று ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்துவிட்டு, பிறகு அசோக் அவரை அழைத்தான்.

“நாயர்..!!!”

நாயர் திரும்பி பார்த்தார். லேசாக திகைப்பது மாதிரி நடித்தார். அப்புறம் உதட்டுக்கு ஒரு செயற்கை புன்னகையை கொடுத்தவாறே, இவனை நெருங்கினார்.

“ஆங்.. அசோக்.. வா வா.. எப்படி இருக்குற..??”

“நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்குற நாயர்..??”

“எனக்கென்ன கொறைச்சல்.. நல்லா இருக்கேன்..??”

“நம்பர் மாத்திட்ட போல..??”

“ஆ..ஆமாம்.. உனக்கு தரணும்னு நெனச்சிருந்தேன்.. அப்புறம் மறந்து போச்சு..!! ஆமாம்.. என்ன இந்தப் பக்கம்..??”

“உன்னை பாக்கத்தான் வந்தேன் நாயர்..?”

“என்னை பாக்கவா..?? என்ன விஷயமா..??”

“என்ன.. வெளையாடுறியா..?? உன்னை நான் எதுக்கு பாக்க வருவேன்..??”

அசோக் அந்த மாதிரி சொன்னதும் நாயர் அமைதியானார். சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே கூர்மையாக பார்த்தவர், அப்புறம் உதட்டில் மெலிதான புன்னகையுடன் சொன்னார்.

“ம்ம்.. புரியுது..!! ஆனா.. இனிமே அதுக்காக என்னை பார்க்க வராத..!! சரியா..?? எனக்கு நெறைய வேலை இருக்கு.. நீ கெளம்பு.. நாம இன்னொரு நாள் பாக்கலாம்..!!”

சொல்லிவிட்டு நகர முயன்ற நாயரை, அசோக் கையை பற்றி நிறுத்தினான். ‘என்ன..?’ என்பது போல நாயர் திரும்பிப் பார்த்தார்.

“உக்காரு நாயர்.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”

“என்ன பேசணும்..???”

“உக்காரு.. பேசலாம்..!!”

e6

சற்றே தயங்கிய நாயர் அப்புறம் அங்கே கிடந்த சேர் ஒன்றில் அமர்ந்து கொண்டார். அசோக்கும் இன்னொரு சேரை இழுத்துப் போட்டு அவருக்கு எதிரே அமர்ந்து கொண்டான். நாயரின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு கேட்டான்.

“என்னாச்சு நாயர் உனக்கு..?? ஏன் இப்படிலாம் நடந்துக்குற..??”

“நான் எப்படி நடந்துக்குறேன்..??”

“பாத்தும் பாக்காத மாதிரி நடந்துக்குற..??”

“வேற ஒன்னும் இல்லை அசோக்.. என்னோட பழைய தொழிலை நான் விட்டுட்டேன்.. அதான்..!!”

“ஏன்..??”

“ஏன்னா..??”

“ஏன் திடீர்னு விட்டுட்ட..?? அப்படி என்ன திடீர்னு அந்த தொழில் மேல வெறுப்பு..??”

“கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..??”

“ஆமாம்..” அசோக் உறுதியாக இருக்க, நாயர் ஒரு பெருமூச்செறிந்து விட்டு சொன்னார்.

“ம்ஹ்ஹ்ம்.. உன்னாலதான் எனக்கு அந்த வெறுப்பு..!!”

நாயர் அந்த மாதிரி சொன்னதுமே அசோக்கிற்கு சுருக்கென மனதில் எதுவோ தைத்தது. அவனுடைய மூளை சுறுசுறுப்பாக எதையோ யோசித்தது. ஆபீசில் அந்த பிரச்னை நடந்த அன்று.. வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் ஏதோ கூடிப் பேசியது.. அன்று தான் இன்னொரு பெண்ணுடன் இருந்ததாக சொன்னதை நந்தினி மிக உறுதியாக நம்பாதது.. கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேனை தவிர, தன்னை சார்ந்த வேறு யாருக்கும் நாயரின் தொடர்பு விவரங்கள் தெரியாதது.. எல்லாவற்றையும் கூட்டி கழித்துப் பார்த்தால்..??

“என் வொய்ஃப் உன்னை வந்து பார்த்தாளா நாயர்..??” ஷார்ப்பாக விஷயத்திற்கு வந்தான் அசோக்.

“ம்ம்.. பரவாலையே.. ரொம்ப ஷார்ப்தான் நீ..!!”

“தேங்க்ஸ்..!! என்ன சொன்னா அவ..?? அப்படியே அழுது பொலம்பி பசப்புனாளா..?? அதான் நீ இப்படி மனசு மாறிட்டியா..??”

“ஹாஹா.. உன் மேல கொறையை வச்சுக்கிட்டு.. உன் பொண்டாட்டியை தப்பு சொல்லாத அசோக்..!! கட்டுன புருஷன் கெட்டு போகக் கூடாதுன்னு ஒரு பொண்டாட்டி நெனைக்கிறதுல என்ன தப்பு இருக்கு..?? நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு அசோக்.. உன் மேல இருக்குற அக்கறைலதான் இதை சொல்றேன்..!! உன் பொண்டாட்டி ரொம்ப பவித்ரமான பொண்ணு.. நீ எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ.. அவ உனக்கு பொண்டாட்டியா கெடைச்சிருக்கா..!! இந்தப் பழக்கத்தை எல்லாம் விட்டுட்டு அவ கூட சந்தோஷமா வாழற வழியை பாரு..!!”

“ம்ம்.. என் பொண்டாட்டியை பத்தி எனக்கே டீட்டெயில் கொடுக்குறியா நாயர்..?? சும்மா சொல்லக் கூடாது.. அட்வைஸ்லாம் ரொம்ப பிரம்மாதமா பண்ற ..!!”

“ஏன்.. இவன்லாம் நமக்கு அட்வைஸ் சொல்றானேன்னு பாக்குறியா..?? பரவால.. எப்படி வேணா நெனச்சுக்கோ.. உனக்கு அட்வைஸ் பண்ற தகுதி எனக்கு இருக்கா இல்லையான்னு.. எனக்கு தெரியலை..!! ஆனா ஒரு விஷயத்துல.. நான் உனக்கு எந்த வகைலையும் கொறைஞ்சவன் இல்ல..!!”

“ஹ்ஹ.. என்ன விஷயம் அது..??” அசோக் சற்று கேலியாகவே கேட்டான்.

“கட்டுன பொண்டாட்டிக்கு உண்மையா இருக்குறதுல..!!”

நாயர் பெருமையாக சொன்னதை கெட்டு, அசோக் சற்றே திகைத்துப் போனான். அவன் அவ்வாறு திகைத்துக் கொண்டிருக்க, நாயர் தொடர்ந்தார்.

“நான் பொண்ணுகளை சப்ளை பண்ற ப்ரோக்கரா இருக்கலாம் அசோக்.. ஆனா இதுவரை என் பொண்டாட்டியை தவிர வேற எந்த பொண்ணையும்.. மனசால கூட நெனச்சு பாத்தது கெடையாது..!! உனக்கு ஒரு விஷயம் தெரியாது அசோக்.. இதுவரை நான் உன்கிட்ட சொன்னது இல்ல.. இப்போ சொல்றேன்.. தெரிஞ்சுக்கோ..!! என் பொண்டாட்டியும் ஒரு காலத்துல உடம்பை வித்து பொழைச்சவதான்.. அவளுக்கு ஏஜென்டா போய்த்தான் எங்களுக்குள்ள பழக்கமே..!! எனக்கு அவளை பிடிச்சிருந்தது.. அவளோட நல்ல குணம் பிடிச்சிருந்தது.. அவகிட்ட சொல்லி.. அவளையே கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்..!! நானும் அவளும் இப்போ வரை ஒரு நல்ல புருஷன் பொண்டாட்டியா சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கோம்..!! என் தொழிலை பத்தி அவளுக்கு நல்லா தெரியும்.. இருந்தும் அவ என்னை அனுமதிக்கிறான்னா.. நான் அவளுக்கு துரோகம் செய்ய மாட்டேன்னு.. அவளுக்குள்ள ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை..!! அவளும் சொல்லிட்டேதான் இருந்தா.. ‘இந்த தொழிலை விட்டுட்டு வேற ஏதாவது தொழில் பண்ணலாங்க’ன்னு..!! நான்தான்.. ‘நாம என்ன கூலி வேலை செய்றவங்க கிட்ட புடுங்கி திங்கிறமா.. இல்ல.. அன்னாடங்காச்சிககிட்ட அடிச்சு சம்பாதிக்கிறமா..? பணக்கார பசங்களோட திமிரையும், தினவையும் யூஸ் பண்ணி சம்பாதிக்கிறோம்.. இதுல என்ன தப்பு இருக்கு..?’ன்னு.. இத்தனை நாளா எனக்கு நானே சொல்லிக்கிட்டு இந்த தொழிலை பண்ணிட்டு இருந்தேன்..!! ஆனா.. அந்த திமிரெடுத்த பணக்கார பசங்க பின்னாடி.. ஒரு அழகான, அன்பான குடும்பம் இருக்கும்னு.. நெனச்சுப் பாக்க மறந்துட்டேன்..!! உன் பொண்டாட்டி வந்து எங்கிட்ட பேசினதுந்தான்.. எனக்கு அந்த விஷயம் தெளிவா புரிஞ்சது..!!”

Comments

Scroll To Top