ஆண்மை தவறேல் – 11

(Latest Tamil Sex Stories - Aanmai Thavarael 11)

Raja 2013-11-21 Comments

நந்தினி மலைத்து போனாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஒரு சில வினாடிகள் அசோக்குடைய முகத்தையே திகைப்பாக பார்த்தவள், அப்புறம் அமைதியாக தலையை குனிந்து கொண்டாள்.

ஆர்டர் செய்த ஜூஸ் கண்ணாடி டம்ளர்களில் வந்தது. நந்தினி ஒரு டம்ளரை எடுத்து ஜூஸ் பருக ஆரம்பித்தாள். அசோக்கும் சிகரெட்டை நசுக்கி அணைத்தது விட்டு, ஒரு டம்ளரை கையில் எடுத்துக் கொண்டான். மெலிதாக உறிஞ்சிக்கொண்டே கேட்டான்.

“ஓகே சொல்லிட்ட போல இருக்கு..?”

“எதுக்கு..?”

“என்னை கட்டிக்கிறதுக்கு..!!” சொல்லிவிட்டு அசோக் குறும்பாக புன்னகைத்தான்.

“ம்ம்.. ஆ..ஆமாம்..!!” நந்தினி தயக்கமாக சொன்னாள்.

“குட்..!! ஆனா.. என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு ஓகே சொன்ன..? ஆறு வருஷம் முன்னாடி இருந்த அசோக்கும் இப்போ இருக்குற அசோக்கும் வேற வேற.. தெரியுமா..? இப்போலாம்.. ஒரு மணி நேரத்துக்கு ஒரு சிகரெட் எனக்கு தேவைப்படுது.. காலைல எந்திரிச்சதும் காபிலாம் குடிக்கிறது இல்லை.. ரெண்டு லார்ஜ் விஸ்கிதான்..!!”

“ம்ம்.. தெரியும்..!!” நந்தினி பட்டென சொல்ல, அசோக்கிற்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது.

“ஓ.. தெரியுமா இதெல்லாம்..? டாடி சொன்னாரா..?”

“ம்ம்ம்..”

“நெனச்சேன்.. வேற என்ன சொன்னாரு..?”

“வேற.. இ..இன்னொன்னும் சொன்னாரு..” அவள் இழுக்க,

“என்னது..?” அசோக் ஆர்வமானான்.

“உ..உங்களுக்கு பொண்ணுக ச..சகவாசம் கூட..”

நந்தினி திக்கித்திணறி சொன்னாள். அசோக் இப்போது முன்பைவிட பெரிதாக ஆச்சரியப்பட்டான்.

“வாவ்…!!! தேட்ஸ் கூல்.. தேட்ஸ் ரியல்லி கூல்..!!!!!! டாட்.. தேட்ஸ் மை டாட்..!! ஹீ இஸ் அமேசிங் யு நோ..?? அவர் மாதிரி ஒரு ஆளை பாக்கவே முடியாது.. எனக்கு பிசினஸ் சொல்லி தந்தப்போ.. அவர் மொதல்ல சொன்ன மேட்டர் என்ன தெரியுமா..? பிசினஸ்ல நேர்மைதான் எல்லாமே.. நேர்மை இல்லாம பிசினஸ்ல ஜெயிக்க முடியாது.. ப்ளா ப்ளா.. புல்ஷிட்..!!! பிசினஸ்ல மட்டும் இல்ல.. நெஜ வாழ்க்கைலயும் இந்தளவுக்கு நேர்மையை கடைபிடிக்க அவராலதான் முடியும்..!! ம்ம்ம்ம்.. கூல்..!!!! ஆனா.. அவருக்கே தெரியாத சில விஷயங்கள்லாம் இருக்கு.. அதை பத்தி அவர் உனக்கு சொல்லிருக்க சான்ஸ் இல்லை..!!”

“அ..அவருக்கு தெரியாமன்னா..?” நந்தினியின் இதயத்துடிப்பு இப்போது மீண்டும் எகிறியது.

“எனக்கு பொண்ணுக சகவாசம் இருக்குன்னு சொன்னாரே.. எத்தனை பொண்ணுக கூட சகவாசம் இருக்குன்னு ஏதாவது சொன்னாரா..?”

“இ..இல்ல..”

“எப்படி சொல்வாரு..? அவருக்கு தெரிஞ்சாத்தான சொல்வாரு..? ம்ம்..?? சரி.. அவர் சொல்றது இருக்கட்டும்.. நீ என்ன நெனைக்கிற..? எனக்கு எத்தனை பொண்ணுக கூட சகவாசம் இருக்கும்..? ஐ மீன்.. நான் இதுவரை எத்தனை பொண்ணுக கூட செக்ஸ் வச்சிருப்பேன்னு நீ நெனைக்கிற..?”

“தெ..தெரியாது..”

“ஹாஹா.. உனக்கு தெரியாதுன்னு எனக்கும் தெரியும்மா.. உன்னை சும்மா கெஸ் பண்ணத்தான் சொன்னேன்..”

“இ..இல்ல.. நீங்களே சொல்லுங்க..” நந்தினி தப்பிக்க எண்ண,

“ஹே.. கமான்.. சும்மா கெஸ் பண்ணு.. ஏதோ ஒரு நம்பர்.. கமான்.. டெல் மீ ஸம் நம்பர்.. ஸம் நம்பர்..!!” அசோக் அவளை விடுவதாயில்லை.

“ஏ..ஏழு..” நந்தினி தயங்கி தயங்கி சொன்னாள்.

“ஓகே.. குட்.. வெரி க்ளோஸ்..!! பட் நீ சொன்னதோட ஒரு எயிட் ஆட் பண்ணிக்கோ.. ஆட் பண்றதுன்னா.. செவன் ப்ளஸ் எயிட்.. அந்த ஆட் இல்ல..!! செவன் முன்னாடி எயிட்னு ஒரு டிஜிட் ஆட் பண்ணிக்கோ.. இட்ஸ் எயிட்டி செவன்..!!!! இன்னும் கொஞ்ச நாள்ல செஞ்சுரி போடப்போறேன்..!!”

சொல்லிவிட்டு அசோக் புன்னகைக்க நந்தினிக்கு லேசாக தலை சுற்றியது. மயக்கம் வரும்போல் இருந்தது. எண்பத்தேழா..??? நெற்றியை பற்றிக்கொண்டவள், அசோக்கையே ஒருமாதிரி திகைப்பாக பார்த்தாள். தான் நினைத்ததை விட இவன் மிக மோசமாய் கெட்டுப் போயிருக்கிறான் என்று பளிச்சென அவளுக்கு உறைத்தது. அவள் அமைதியாயிருக்க அசோக்கே தொடர்ந்தான்.

“இப்போ சொல்லு.. இந்தக் கல்யாணத்துல உனக்கு சம்மதமா..?”

அசோக் கேட்க, நந்தினிக்கு இப்போது ஒருமாதிரி ஆயாசமாக இருந்தது. கடந்த சில நாட்களாக இந்த ‘சம்மதமா..?’ என்ற ஒரே கேள்வியை, எத்தனை பேர் எத்தனை விதமாக கேட்பார்கள் என்னிடம்..?? நந்தினி இப்போது விழிகளை மெல்ல மூடிக்கொண்டாள். படபடக்கும் இதயத்தை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அப்புறம் விழிகளை திறந்தவள் தெளிவாக சொன்னாள்.

“சம்மதம்..!!”

“அப்படி போடு அருவாளை..!!” அசோக் ஒருமாதிரி கிண்டலாக சொன்னான்.

“ஏன்.. என்னாச்சு..?”

“இல்ல.. ஒன்னும் ஆகலை.. உன் மன உறுதியை பாத்து.. நான் அப்படியே மலைச்சு போயிட்டேன்..!! ஆமாம்.. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா..?”

“எது என்ன காரணம்..?”

“இல்ல.. ஒரு காலத்துல நான் அப்பழுக்கில்லாத ஆளா இருந்தேன்.. உன்னை வேற சின்சியரா லவ் பண்ணுனேன்.. அப்போ நீ என்னடான்னா.. என்னை ‘ஆம்பளையே இல்ல.. ஒருத்தியும் உன்னை லவ் பண்ணமாட்டா’ன்னு.. தூக்கி எறிஞ்சுட்டு போயிட்ட..!! இப்போ எனக்கு இவ்வளவு கெட்ட பழக்கம் இருக்கு.. எவளையும் லவ் பண்ற மாதிரி எந்த ஐடியாவும் எனக்கு இல்ல.. அப்படி இருந்தும் இப்போ.. என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்ற.. அதான் என்ன காரணம்னு கேட்டேன்..!!”

“அ..அது. அது வந்து..”

“ம்ம்.. சொல்லு..!! எ..எனக்கு தெரிஞ்சு ஒரே ஒரு காரணந்தான்..”

“என்ன..?”

“என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நீ இழந்து போன அந்த வசதியான வாழ்க்கை உனக்கு திரும்ப கிடைக்கும்.. கார், பங்களா, ஏசின்னு சொகுசா வாழலாம்..!! கரெக்டா..??”

முகத்தில் ஒரு இதமான புன்னகையுடனே, அசோக் அந்த மாதிரி இளக்காரமான குரலில் கேட்க நந்தினிக்கு சுரீரென்று இருந்தது. அவ்வளவு நேரம் அவர்கள் பேசியதில் முதன்முறையாக அவளுக்கு அசோக்கின் மீது கோபம் வந்தது. விழிகளை உருட்டி அசோக்கை முறைத்து அதன்பிறகு அவள் பேசிய வார்த்தைகளிலும் அந்த கோபம் தாராளமாகவே நிறைந்திருந்தது.

“இங்க பாருங்க மிஸ்டர் அசோக்.. வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்க.. நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்ல..!! இந்த ஆறு வருஷத்துல நீங்க எவ்வளவு மாறிருக்கீங்களோ.. அதை விட நான் அதிகமா மாறிருக்கேன்..!! காலேஜ் படிக்கிறப்போ என்னை மாதிரி அழகும், பணமும் எவளுக்கும் இல்லைன்னு எனக்கு ஒரு திமிர் இருந்தது உண்மைதான்.. அந்த திமிர்னாலதான் நான் உங்களை ஹர்ட் பண்ணுனேன்..!! ஆனா.. இந்த ஆறு வருஷத்துல நெறைய மாறிப்போச்சு.. வாழ்க்கைல எதுவும் நிரந்தரம் இல்லைன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..!! நாலு வருஷம் முன்னாடி என் அப்பாவுக்கு பிசினஸ் லாஸ் ஆகி.. நாங்க நடுத்தெருவுல நின்னோம்.. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட பலநாள் கஷ்டப்பட்டோம்.. காஞ்ச வயிறோட வெறுந்தரையில படுத்தப்போதான்.. காலேஜ்ல என் திமிர்னால நான் பண்ணுன தப்பு எல்லாம் புத்தில உறைச்சுச்சு..!! நெறைய விஷயங்களை நெனச்சு நெனச்சு வருத்தப்பட்டிருக்கேன்.. உங்களை ஹர்ட் பண்ணுனதும் அதுல ஒன்னு..!! என்னைக்காவது ஒருநாள் உங்களை நேர்ல பாத்தா.. உங்ககிட்ட மனசார மன்னிப்பு கேக்கனும்னு நெனச்சேன்.. இன்னைக்கு அதை கேட்டுட்டேன்.. எனக்கு இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு..!! உங்க அழகுல மயங்கியோ.. உங்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டோ.. நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலை..!! என் குடும்ப சூழ்நிலை.. என் விருப்பம் என்னன்னு யார்கிட்டயும் சொல்ல முடியாத நெலமை.. இந்தக்கல்யாணம் நடந்தா நெறைய பேர் சந்தோஷமா இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை.. அதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்..!! ஆனா நீங்க.. என்னை இவ்வளவு கீழ்த்தரமா நெனைப்பீங்கன்னு நான் யோசிச்சே பாக்கலை.. ச்சே..!!” நந்தினி படபடவென பொரிந்து தள்ள, அசோக் சிரித்த முகத்துடன் அவளை தடுத்தான்.

“ஹே ஹே.. ஹோல்ட் ஆன்.. ஹோல்ட் ஆன்..!! ஹாஹாஹாஹா.. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு.. குலுக்கிட்டு ஓப்பன் பண்ணுன பீர் பாட்டில் மாதிரி அப்படியே பொங்குற..?? ம்ம்..?? நான் உன்னை சும்மா சீண்டிப் பாக்குறதுக்காக கேட்டேன்.. தேட்ஸ் ஆல்..!! ரிலாக்ஸ்..!!”

எதுவுமே நடக்காத மாதிரி அவன் மிகவும் கூலாக சிரிக்க, தான் கொஞ்சம் அவசரப்பட்டு அதிகமாக பேசிவிட்டோமோ என்று நந்தினிக்கே சந்தேகத்தை உண்டு பண்ணியது. தனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, அமைதியான குரலில் சொன்னாள்.

“ஸா..ஸாரி..”

“ம்ம்ம்.. சரி.. காரணம் வேணாம்.. காரியத்துக்கு வருவோம்..!! அப்போ.. உனக்கு என்னை கல்யாணம் செய்துக்க இஷ்டம்.. அப்டித்தான..?”

“ஆமாம்..!!” நந்தினியின் குரலில் இப்போது மெல்லிய எரிச்சல்.

“ஆனா.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையே..? என்ன பண்ணலாம்..??” அசோக் ஏளனமாக கேட்க,

“ரொம்ப சந்தோஷம்..!!”

என்று கடுமையாக சொன்ன நந்தினி சேரில் இருந்து எழுந்து கொண்டாள். ஹேன்ட் பேக் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள். நகர முற்பட்டவளை அசோக் தடுத்தான்.

“ஏய்.. ஏய்.. இரு.. எங்க கெளம்பிட்ட..?” Pundai Nakkum Latest Tamil Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top