ஐ ஹேட் யூ பட் – 36

(Tamil Kamaveri - I Love U But 36)

Raja 2013-11-03 Comments

Tamil Kamaveri – ப்ரியா நினைத்துக்கொண்ட மாதிரி அவ்வளவு எளிதாக அசோக்கிடம் மனம்விட்டு பேசி விட முடியவில்லை. அவர்கள் இருவரும் தனித்திருக்கும் நேரமே வாய்க்கவில்லை. அசோக் அந்த மருத்துவமனையில் ஐந்து நாட்கள் இருந்தான். அந்த ஐந்து நாட்களும் ப்ரியா காலையில் ஒருமுறை, மாலையில் ஒருமுறை அவனை சென்று பார்த்து வருவாள். ஆனால் எந்த நேரமும் அவனுடன் யாரவது ஒருவர் உடனிருப்பார்கள். மனதில் நினைத்தை சுதந்திரமாக பேசிக்கொள்ள முடியாமல் போகும்.

“இப்போ எப்படிடா இருக்கு..?? பரவாலையா..??” என்று ஃபார்மலாகத்தான் கேட்க முடியும். அதற்கு அவனும்

“ம்ம்..?? இருக்கு இருக்கு..!!” என்பான் முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு.

“ஸாரிடா..!!” ப்ரியா கிசுகிசுப்பான குரலில் கெஞ்சலாக சொல்வாள்.

“ப்ச்..!!” அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வான்.

தினமும் காலையிலே கோவிலுக்கு சென்று அசோக்கின் பெயரில் அர்ச்சனை செய்து, அவன் நெற்றியில் வந்து திருநீறு பூசுகிற ப்ரியாவை செல்விக்கு மிகவும் பிடித்து போனது. மாலையில் ஆபீஸை விட்டு கிளம்ப எவ்வளவு நேரம் ஆனாலும், ஆஸ்பத்திரிக்கு வந்து கொஞ்ச நேரமாவது அவர்களுடன் செலவழித்து சென்றது செல்வியை கவர்ந்துவிட்டது. ப்ரியா வந்துவிட்டாலே, அவளை அருகில் அமர்த்தி வைத்து, அவளுடைய கையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தவாறே, ஏதாவது ஸ்னேஹமாக பேசிக்கொண்டிருப்பாள்.

ஆறாம்நாள் காலை.. அசோக் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டான். ‘வீட்டுக்கு அடிக்கடி வாம்மா..!!’ என்று சொன்ன செல்வியின் நட்பு கிடைத்ததால், ப்ரியா அசோக்கின் வீட்டுக்கு செல்வதிலும் எந்த தடையும் இருக்கவில்லை. ஆஸ்பத்திரிக்கு விட்டது போலவே அசோக்கின் வீட்டுக்கும் தினம் இரண்டு முறை விசிட் விட்டாள். ஆனால் அவர்கள் தனித்து பேசிக்கொள்ளத்தான் சந்தர்ப்பம் கிட்டவில்லை..!! அசோக்கின் மனதிலோ வெறுப்பு.. ப்ரியாவின் மனதிலோ ஏக்கம்.. வெளிப்படுத்திக்கொள்ளத்தான் வாய்ப்பு அமையவில்லை.. காத்திருந்தனர் இருவரும்..!!

அசோக் வீட்டுக்கு சென்ற மூன்றாம் நாள் காலை..!! அன்று விடுமுறைதான்.. ப்ரியா சற்று தாமதமாகவே தனது வீட்டில் இருந்து அசோக்கை பார்த்துவர கிளம்பினாள்..!! அசோக்கின் வீட்டை அடைந்தபோது மணி ஒன்பதரை ஆகி இருந்தது..!! வீட்டுக்குள் நுழைந்தவள்.. ‘இது அசோக்கின் வீடுதானா..?’ என்று ஒருகணம் குழம்பிப் போக நேர்ந்தது..!! ஏதோ சந்தைக்கடைக்குள் நுழைந்தாற்போல சலசலவென்று ஒரே சத்தம்..!! இருபது.. இருபத்தைந்து பேர்கள்.. அசோக்கின் உறவினர்கள்.. விபத்தில் சிக்கிய அசோக் வீடு திரும்புவதற்காக காத்திருந்தவர்கள்.. அவன் வீடு திரும்பியதும் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்திருந்தனர்..!! இப்போது ஹாலில் கும்பலாக அமர்ந்து ஆளாளுக்கு ஏதேதோ கதையடித்துக் கொண்டிருந்தார்கள்..!! அசோக்கை மட்டும் அந்த கூட்டத்தில் காணோம்..!! அவர்களை பார்த்து ப்ரியா சற்றே திகைத்துப்போய் நின்றிருக்க..

“இதோ வந்துட்டால..?? இவதான் ப்ரியா..!!” என்று செல்விதான் முதலில் இவளை கவனித்து கத்தினாள்.

அவ்வளவுதான்..!! உக்காந்திருந்த ஏழெட்டுப் பெண்கள் உடனே எழுந்து வந்து ப்ரியாவை பிடித்துக் கொண்டார்கள். ‘நீதானாம்மா.. வா.. வா..’ என்று அவளை அழைத்து சென்று அவர்களுக்கு நடுவில் அமர்த்தி வைத்துக் கொண்டனர். இந்த திடீர் சூழ்நிலையை சற்றும் எதிர்பாராத ப்ரியா திருதிருவென விழித்தாள். ஒருமாதிரி மிரட்சியாக எல்லோரையும் பார்த்தாள். அதை யாரும் புரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு அவளுடைய கன்னத்தை தடவி பிய்த்து எடுத்தனர். ஏதேதோ கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.

“செவசெவன்னு சினிமாக்காரி மாதிரில இருக்குறா..!!” என்று கமென்ட் அடித்தாள் ஒரு கிழவி.

“ஏம்மா.. இந்த தலைக்கறில சின்ன வெங்காயம், மொளகா வத்தல் போட்டு பெரட்டி எடுத்தா.. எனக்கு ரொம்ப உசுரு.. தாத்தாவுக்கு வச்சு குடுப்பியா..??” என்று கேட்டது ஒரு பெருசு.

“உங்களுக்கு அஜித் புடிக்குமா.. விஜய் புடிக்குமா..??” என்றாள் ஒரு ஆறு வயது சிறுமி.

“இது என்னடி அதிசயமா இருக்கு..?? வளையலை போய் காதுல மாட்டிருக்காக..?? இதுதான் பெங்களூர் மாடலாக்கும்..??” ப்ரியாவின் காது வளையத்தை பிடித்து இழுத்தாள் ஒரு பெண்.

“ஏத்தா.. என் பேரனை கட்டிக்க உனக்கு சம்மதந்தானா..??” இதை கேட்டது அசோக்கின் பாட்டி. ப்ரியா இன்னும் மிரட்சி தெளியாமலே இருக்க, செல்வியே அதற்கு பதில் சொன்னாள்.

“ம்க்கும்.. இந்தப்புள்ளையா வேணாஞ்சொல்லுச்சு..?? உன் பேரப்புள்ளைதான் உச்சானிக்கொம்புல ஏறி ஒக்காந்திருக்காப்புல.. அவன்ங்கிட்ட போய் கேக்க வேண்டியதான..??”

“அடிப்போடி.. அவன்ங்கிட்ட போய் என்னத்த கேக்க சொல்றவ..?? பொண்ணு பாக்கவான்னு கேட்டதுக்கே.. ‘போறியா.. இல்ல.. பொதைகுழில எறக்கிப்புடவா’ன்ல கேட்டான்..??”

“அப்புறம் என்ன.. வாயை மூடிக்கிட்டு ச்சும்மா கெட..!!”

இப்போது அசோக்கின் அம்மா எழுந்து வந்து ப்ரியாவுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள். ப்ரியாவின் கன்னத்தை பிடித்து வாஞ்சையாக தடவியவாறே, மலர்ந்த முகத்துடன் கேட்டாள்.

“வீட்ல அப்பா, தம்பிலாம் சவுக்கியமாம்மா..??”

“ம்ம்.. ச..சவுக்கியம்..!!”

“நீயும் என் புள்ளை வேல பாக்க அதே கம்பெனிலதான் வேல பாக்கியாக்கும்..??

“ம்ம்.. ஆ..ஆமாம்..!!”

“செல்விதான் சொன்னா..!! அசோக்கு அடிபட்ட அன்னைக்கு நீ எப்படி துடிச்சு போயிட்டேன்னு.. அன்னைக்கு பூரா அவன் கூடவே இருந்து பாத்துக்கிட்டியாமே..?? என் புள்ளை மேல உனக்கு அவ்வளவு பிரியமாம்மா..??”

“ம்ம்..!!”

ப்ரியா அவஸ்தையாக நெளிந்தவாறே சொன்னாள். ஒருமுறை பார்வையை சுழற்றி செண்பகத்தை தேடினாள். அவளோ இங்கே நடப்பது எதையுமே கண்டுகொள்ளாமல், அசோக்கை பார்க்க வந்தவர்கள் அவனுக்கு கொண்டுவந்திருந்த பலாச்சுளைகளை, ‘லபக் லபக்’ என்று வாய்க்குள் திணித்து அசைபோட்டுக் கொண்டிருந்தாள். ப்ரியா இப்போது சற்றே எரிச்சலாக செண்பகத்தை பார்த்தாள். ‘ச்சே.. என்ன பெண் இவள்..?? அவளுடைய காதலனை பிடித்திருக்கிறதா என்று இங்கே ஆளாளுக்கு என்னை மொய்க்கிறார்கள்.. கல்யாணப்பேச்சு பேசுகிறார்கள்.. இவள் என்னவென்றால் கவலையே இல்லாமல் பலாப்பழம் விழுங்குகிறாள்..??’

“என்னம்மா.. அப்படி பாக்குற..??” அசோக்கின் அம்மா அன்பாய் கேட்க,

“ஒ..ஒண்ணுல்ல ஆண்ட்டி.. அ..அசோக்.. அசோக் எங்க..??” ப்ரியா திணறலாக கேட்டாள்.

“அப்படியே காத்து வாங்கிட்டு வரேன்னு மொட்டை மாடிக்கு போனான்..!! ஏன்மா.. அவனை பாக்கணுமா..??”

“ம்ம்..!!”

“சரி போ.. மேலதான் இருக்கான்.. போய்ப்பாரு..!!”

‘விட்டால் போதும்..’ என்பது போல ப்ரியா படக்கென எழுந்து கொண்டாள். அவளுடைய முதுகுக்குப்பின், அவளை கிண்டல் செய்து எல்லோரும் கெக்கேபிக்கே என்று கனைக்க, இவள் அதை கண்டுகொள்ளாமல் வெளியே வந்தாள். படியேறி மொட்டை மாடி சென்றாள். தூரத்தில் முதுகு காட்டி நின்றவாறு பூங்காவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அசோக் கண்ணில் பட்டான். மெல்ல நடந்து அவனை நெருங்கினாள்.

3

ப்ரியா வந்ததை அசோக் கவனிக்கவில்லை. அவனுக்கு அருகில் சென்ற ப்ரியா, ஓசை ஏதும் எழுப்பாமல், கைப்பிடி சுவற்றில் ஊன்றியிருந்த அவனது வலது கையை, தனது கையால் இதமாக பற்றி ஒரு அழுத்தம் கொடுத்தாள். உடனே படக்கென திரும்பி பார்த்த அசோக், ப்ரியா என்று தெரிந்ததும் வெடுக்கென தனது கையை உருவிக் கொண்டான். சற்றே சீற்றமாக கேட்டான்.

“ப்ச்.. என்ன..??”

“என் மேல கோவம் இன்னும் போகலையா..??”

“உன் மேல கோவப்பட நான் யாரு..??” அசோக்கின் வார்த்தைகள் ப்ரியாவை வன்மையாக தாக்கின.

“ஏண்டா இப்படிலாம் பேசுற..??”

“இனிமே எல்லாம் அப்படித்தான்..!! என்ன விஷயம்னு சொல்லு..!!”

அசோக் கடுமையாக சொன்னான். வெறுப்பு கொப்பளிக்கும் அவன் முகத்தையே ப்ரியா பரிதாபமாக பார்த்தாள். சில வினாடிகள் தயங்கியவள், அப்புறம் மெல்ல ஆரம்பித்தாள்.

“கீ..கீழ.. அவங்க எல்லாம் என்னன்னவோ பேசுறாங்க அசோக்..!!”

“என்ன பேசுறாங்க..??”

“நம்ம கல்யாணப் பேச்சை திரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.. உன்னை கட்டிக்க சம்மதமான்னு எங்கிட்ட கேக்குறாங்க..!!”

“ஓஹ்..!! அவங்களுக்கு வேற வேலையே கெடயாது.. அவங்க எய்ம்லாம் ஏதோ ஒரு கழுதையையோ குரங்கையோ புடிச்சு எனக்கு கட்டி வச்சிடணும்.. அவ்ளோதான்.. ச்ச..!!” அசோக் சலிப்பாக சொல்ல,

“என்னது..???” ப்ரியா முகத்தை சுளித்தவாறு அவனை பார்த்தாள்.

“ஹ்ம்ம்.. அதுக்கு நீ என்ன சொன்ன..??”

“நான் என்னத்த சொல்றது..?? நீதான் அவங்ககிட்ட போய் சொல்லணும்..!!”

“நானா..?? நான் என்ன சொல்லணும்..??”

“இங்க பாரு அசோக்.. இனிமேயும் நீ காலம் கடத்துறது கொஞ்சம் கூட சரி இல்ல.. அல்ரெடி ரொம்ப லேட்..!! போய் அவங்ககிட்ட உன் மனசுல இருக்குறதை பளிச்சுன்னு சொல்லிடு..!!”

“ப்ச்..!! என்ன சொல்றேன்னே எனக்கு ஒன்னும் புரியல..!!”

“ஹையோ.. ‘செண்பகத்தைத்தான் நான் கட்டிக்கப்போறேன்’னு.. அவங்ககிட்ட போய் சொல்லுன்னு சொல்றேன்..!!”

ப்ரியா சொன்ன விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளவே அசோக்கிற்கு சில வினாடிகள் பிடித்தன. பிறகு புரிந்ததும் எரிச்சலாக கேட்டான்.

“என்ன உளர்ற..?? செண்பகத்தை எதுக்கு நான் கட்டிக்கணும்..??”

Comments

Scroll To Top