ஐ ஹேட் யூ பட் – 13

(Tamil Hot Stories - I Hate You But 13)

Raja 2013-10-11 Comments

Tamil Hot Stories – “வர்றேண்டா மச்சி.. பட் ஒன் கண்டிஷன்..!!”

“என்ன..??” அசோக் குழப்பமாய் கேட்க,

“இந்தா..!!” ஹரி அவனுடைய செல்போனை எடுத்து அசோக்கிடம் நீட்டினான்.

“இது எதுக்கு..??”

“தண்ணியடிக்கிறதுக்கு என் பொண்டாட்டிட்ட பெர்மிஷன் கேளுடா மச்சி.. ப்ளீஸ்டா..!!” ஹரி வெட்கமே இல்லாமல் சொன்னான்.

“த்தா.. என்ன வெளையாடுறியா..?? ஒவ்வொரு தடவை தண்ணியடிக்க போறப்போவும் இதுதான் எனக்கு வேலையா..?? என்னால முடியாது.. நீயே கேளு..!!” அசோக் டென்ஷனானான்.

“ஹேய்.. புரிஞ்சுக்கோடா மச்சி.. நீன்னா அவ கொஞ்சம் பொறுமையா சாஃப்டா பேசுவா.. அதான் உன்னை கேக்க சொல்றேன்..!!”

“பொறுமையா பேசுறாளா..?? இப்டியே நான் அடிக்கடி பர்மிஷன் கேட்டுக்கிட்டே இருந்தேன்னு வச்சுக்கோ.. ஒருநாளைக்கு என்னையும் வெளக்கமாத்தாலதான் அடிக்கப்போறா..!!”

“உன்னையுமா..?? அடப்பாவி.. அப்போ என்னை வெளக்கமாத்தால அடிக்கிறான்னு முடிவே பண்ணிட்டியா..??”

“ஆமாம்.. அதுல என்ன சந்தேகம்..??”

“டேய்.. அவளுக்கு நான் தண்ணியடிக்கிறது கொஞ்சம் புடிக்காதுடா.. அவ்ளோதான்..!! மூஞ்சை கொரங்கு மாதிரி தூக்கி வச்சுப்பா.. எனக்கு அதை பாக்க சகிக்காமத்தான்.. இதெல்லாம் அவாய்ட் பண்றது..!! மத்தபடி வீ ஆர் கூல்..!!”

“ஹ்ம்ம்.. நீங்க கூலா இருங்க.. இல்லனா ஹாட்டா இருங்க.. எனக்கு அதைப்பத்திலாம் கவலை இல்ல..!! சும்மா சும்மா இதுக்குலாம் என்னால பெர்மிஷன் கேட்க முடியாதுடா.. எனக்கு தேவையில்லாத பிரச்னை..!!”

“ஹேய் அப்டிலாம் சொல்லாதடா மச்சி..!! ஹ்ம்ம்.. இங்க பாரு.. நான் ஒரு சூப்பர் ஐடியா சொல்றேன்.. உனக்கு ஒரு பிரச்னையும் வராது.. கேக்குறியா..??”

“என்ன..??”

“உனக்கு இன்னைக்கு பர்த்டே.. எனக்கு ட்ரீட் குடுக்க ஆசைப்படுறேன்னு அவகிட்ட சொல்லு.. அவ ஒன்னும் சொல்ல மாட்டா..!! என்ன சொல்ற..??” ஹரி இளித்தவாறு சொல்ல அசோக் அவனை முறைத்தான்.

“மசுரு.. ரெண்டு மாசம் முன்னாடி அப்படி சொல்லிட்டு போய்த்தானடா.. எனிக்மால போய் மூக்கு முட்ட குடிச்சோம்..??” அசோக் சொல்ல, ஹரிக்கு முகம் சுருங்கிப் போனது.

“ஓ..!! ஆமால்ல..?? ஐடியா அல்ரெடி யூஸ்ட்-ஆ..?? ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்…!!”

ஹரி நெற்றியை கீறியவாறு யோசித்தான். வேறு என்ன சொல்லி தன் மனைவியை ஏமாற்றலாம் என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். ஒரு சில வினாடிகள்..!! வேறு எந்த யோசனையும் தோன்றாமல் போகவே வெறுப்பாக கத்தினான்.

“ச்ச.. என்ன உலகம்டா இது.. என்ன சொசைட்டிடா இது..?? கருமம்..!!”

“என்னடா அச்சு..??”

“பின்ன என்ன மச்சி.. பொறந்த நாள்லாம் வருஷம் வருஷம்தான் கொண்டாடனும்னு எந்த பொறம்போக்கு இவனுகளுக்கு சொல்லிக் குடுத்துட்டு போனான்..?? மாசமாசம் அந்த டேட்ல பொறந்த நாள் கொண்டாடினா, என்ன கொறைஞ்சா போயிடுவானுக..??” ஹரி சீரியஸாக சொல்லிக்கொண்டிருக்க, அசோக் அவனையே கடுப்புடன் பார்த்தான்.

“இங்க பாரு.. வெட்டித்தனமா பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத.. என்ன காரணம் சொல்லலாம்னு சீக்கிரம் யோசி..!!”

“ம்க்கும்.. எனக்கு தோணுச்சுனா சொல்ல மாட்டனா..??”

“சரி.. அப்போ நான் ஒன்னு சொல்லவா..??”

“என்ன..??”

“பர்மிஷனே கேக்க வேணாம்.. குடிச்சுட்டு நேரா வீட்டுக்கு போயிடு..!! எப்படியாவது அவகிட்ட அடியை உதையை வாங்கியாவது சமாளிச்சுக்கோ..!!” அசோக் கூலாக சொல்ல,

“டேய்.. ஒரேடியா என் ஜோலியை முடிச்சிறலாம்னு பாக்குறியா நீ..??” ஹரி பதறினான்.

“அப்போ என்னை ஆளை விடு.. டைம் ஆயிட்டே இருக்குது.. நான் கெளம்புறேன்..!!”

“டேய் மச்சி… இருடா.. டேய்..!!”

ஹரி கத்திக்கொண்டே இருக்க, அவனை கொண்டுகொள்ளாமல் அசோக் கிளம்பினான். தளத்தின் நுழைவாயில் நோக்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான். ஒரு நான்கைந்து எட்டுகள் வைத்ததும் அப்படியே நின்றான். தனது தலையை திருப்பி பக்கவாட்டில் பார்வையை வீசினான். அவன் பார்வை சென்ற இடத்தில் கோவிந்த் அமர்ந்திருந்தான்.

தனது இருக்கையில் அமர்ந்தவாறு.. எதிரே இருந்த மானிட்டரை முறைத்தவாறு.. அருகில் இருந்த வேஃபர் பிஸ்கட்டை அவ்வப்போது எடுத்து கடித்தவாறு..!! அவனுடைய முகத்தில் ஒருவித சோகம் அப்பிக் கிடந்தது..!! விரக்தியுடன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெளிவாக புரிந்தது..!! அசோக்கிற்கு ஏனோ இப்போது அவன் மீது புதிதாக ஒரு இரக்கம் பிறந்தது..!! ‘தன்னைப் போலவே ஏமாற்றம் கொண்டிருக்கும் இன்னொரு ஜீவன்..’ என்று தோன்றியது..!!

ஒருசில வினாடிகள் அவ்வாறு கோவிந்தை இரக்கத்துடன் பார்த்த அசோக்கிற்கு, மனதில் திடீரென ஒரு எண்ணம். அந்த எண்ணம் தோன்றியதுமே அவன் அதிகம் தயங்கவில்லை. நடந்து சென்று கோவிந்தை நெருங்கினான். இதமான குரலில் அவனை அழைத்தான்.

“கோவிந்த்..!!”

“ம்ம்..!!” கோவிந்த் அசோக்கை நிமிர்ந்து பார்த்தான்.

“ட்..ட்ரிங்க்ஸ் சாப்பிடுவியா நீ..??”

அசோக் சிறு தயக்கத்துடனே கேட்டான். கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் விழித்த கோவிந்த், அப்புறம் தடுமாற்றமாய் சொன்னான்.

“ம்ம்.. சா..சாப்பிடுவேன்.. எ..எப்போவாச்சும்..!! எதுக்கு கேக்குறீங்க..??”

“இன்னைக்கு சாப்பிடலாமா..??”

இப்போது கோவிந்த் முகத்தில் மீண்டும் குழப்ப ரேகைகள். அசோக் அப்படி கேட்பான் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அத்தனை நாளாய் நேத்ராவை தவிர அந்த டீமில் இருப்பவர்கள் யாருமே கோவிந்திடம் முகம் கொடுத்து பேசியதில்லை. அசோக் திடீரென இவ்வாறு தன்னை அணுகவும், ஒருவித ஆச்சரியத்துக்கு உட்பட்டுப் போயிருந்தான். உடனே பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை பார்த்துவிட்டு அசோக்கே இப்போது புன்னகையுடன் சொன்னான்.

“ஹே.. கமான்..!! ஜஸ்ட்.. எனக்கு இன்னைக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிடனும் போல இருந்தது.. கம்பெனிக்கு ஆள் இல்ல.. அதான் உன்னை கூப்பிட்டேன்.. உனக்கு விருப்பம் இருந்தா என் கூட ஜாயின் பண்ணிக்கலாம்.. வாட் யு ஸே..??”

அசோக் மிகவும் ஸ்னேஹமான குரலில் கேட்டான். கோவிந்த் முகத்தில் இருந்த குழப்பம் இப்போது சற்று நீங்கியது. மெலிதாக புன்னகைத்தான். நீண்ட நேரம் எல்லாம் யோசிக்கவில்லை அவன். ஒரு சில வினாடிகளிலேயே,

“ம்ம்.. போலாம்..!!” என்று தலையாட்டினான்.

“ஓகே.. அப்போ ஷட்டவுன் பண்ணிட்டு கெளம்பு..!!”

கோவிந்த் ஷட்டவுன் எல்லாம் செய்யவில்லை. சிஸ்டத்தை அப்படியே லாக் செய்து மானிட்டரின் வெளிச்சத்தை மட்டும் நிறுத்தினான். சேரில் இருந்து எழுந்து கொண்டான். அத்தனை நேரம் அவர்களை கடுப்புடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஹரி, இப்போது பொறுக்கமாட்டாமல் எழுந்து ஓடிவந்தான். அசோக்கை பார்த்து கத்தினான்.

“டேய்.. டேய்.. என்னை விட்டுட்டு குடிக்க போறலடா.. நீ நல்லாவே இருக்க மாட்டடா.. நீ நல்லாவே இருக்க மாட்ட!!”

“ஏய்.. போடா..!! வொய்ஃப்புக்கு பயப்படுறவன்லாம் ஏன்டா லைஃபை என்ஜாய் பண்ணனும்னு ஆசைப்படுறீங்க..?? போ போ.. போய் வேலையை பாரு போ..!!” அசோக் ஏளனமாக சொன்னான்.

“போங்கடா போங்க.. என்னை இப்படி அம்போன்னு விட்டு போறீங்கல்ல.. நீங்க இன்னைக்கு குடிக்கிற சரக்குலாம் மட்டமான சரக்காதாண்டா இருக்கப் போகுது.. மப்பே ஏறாதுடா உங்களுக்கு.. அப்படியே ஏறுனாலும் அடுத்த செகண்டே வாந்தி எடுத்துடுவீங்கடா.. அப்படியே வாந்தி எடுக்காட்டாலும் போதையோட போய் போலீஸ்ட்ட மாட்டி, பர்ஸை பறிகொடுக்கப் போறீங்கடா..!! இது என் சாபம்டா.. வயிறு எரிஞ்சு சொல்றேண்டா.. பலிக்குதா இல்லையான்னு பாருங்க..!!”

ஹரி துக்கம் தாளாமல் புலம்ப, அவன் பேசிய வார்த்தைகள் அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தன. முகத்தை முறைப்பாக வைத்திருந்தவன் அவனையும் மீறி சிரித்து விட்டான். பிறகு கை நீட்டி ஹரியை அருகில் அழைத்தான்.

“ஏய்.. வாடா இங்க..!!”

“என்னடா..??”

கடுகடுப்பாக அருகில் வந்து நின்ற ஹரியின் பாக்கெட்டுக்குள் அசோக் கைவிட்டான். உள்ளே இருந்த செல்போனை எடுத்து கோவிந்த்திடம் நீட்டினான். என்னவென்று புரியாமல் விழித்த கோவிந்திடம் பொறுமையாக சொன்னான்.

“கவிதாவுக்கு ஒரு கால் பண்ணு கோவிந்த்.. இன்னைக்கு உனக்கு பர்த்டேன்னு சொல்லு.. ஹரியை ட்ரீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி.. அவகிட்ட பர்மிஷன் கேளு.. ப்ளீஸ்..!!”

கோவிந்த் ஓரிரு விநாடிகள்தான் திகைத்தான். அப்புறம் அசோக்கிடமிருந்து செல்போனை வாங்கி கவிதாவின் நம்பருக்கு கால் செய்தான். இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹரிக்கோ முகமெல்லாம் பிரகாசம்.. வாயெல்லாம் பல்..!! அசோக்கின் கையை பிடித்துக்கொண்டு இளித்தவாறே சொன்னான்..!!

“மச்சி.. நண்பேண்டா மச்சி.. நண்பேண்டா..!!”

அசோக் எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. அவனது கவனம் கோவிந்திடம் இருந்தது. கோவிந்த் கவிதாவுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னான். அசோக்கும், ஹரியும் ரிசல்ட் தெரிந்து கொள்வதற்காக கோவிந்தின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஷயத்தை சொல்லிவிட்டு ஒரு சில ‘உம்..’ கொட்டின கோவிந்த், அப்புறம் செல்போனை ஹரியிடம் நீட்டினான்.

“என்ன..??” ஹரி புரியாமல் கிசுகிசுப்பாக கேட்டான்.

“உங்ககிட்ட பே..பேசணும்னு சொல்றாங்க..!!”

ஹரியின் முகம் இப்போது பட்டென சீரியசானது. செல்போனை வாங்கி பவ்யமாக காதுக்கருகே வைத்துக் கொண்டான். பெரும் முயற்சி செய்து குரலை இயல்பாக மாற்றிக்கொண்டு,

Comments

Scroll To Top