நெஞ்சோடு கலந்திடு – 33

(Sex Stories In Tamil - Nenjodu Kalanthidu 33)

Raja 2014-02-03 Comments

Sex Stories In Tamil – திவ்யாவும் சற்று தயங்கிவிட்டு, அப்புறம் மெல்ல அந்த ஜூஸை பருக ஆரம்பித்தாள். ஜூஸ் குடித்து முடித்ததும்,

“சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டேன் திவ்யா.. இன்னும் டென், ஃபிப்டீன் மினிட்ஸ்ல வந்துடும்..!! வா.. அதுவரை நான் உனக்கு வீட்டை சுத்தி காட்டுறேன்..!!”

காலி க்ளாசை டீப்பாயில் வைத்துவிட்டு, இருவரும் ஹாலில் இருந்து உள்ளறைக்குள் நுழைந்தார்கள். திவாகர் ஒவ்வொரு அறையாக திறந்து அவளுக்கு காட்டிக் கொண்டு வந்தான். ஒரு அறைக்குள் நுழைந்ததும் உள்ளே விளக்குகளை போட்டுவிட்டு, சற்றே குறும்பான குரலில் சொன்னான்.

“இந்த வீட்லயே இதுதான் ரொம்ப ஸ்பெஷலான ரூம் திவ்யா.. ஹாஹா.. நம்ம பெட்ரூம்..!!” வாயெல்லாம் பல்லாக சொல்லிவிட்டு கண்ணடித்தான். திவ்யா முகத்தை இறுக்கமாகவே வைத்திருக்க, திவாகர் தொடர்ந்தான்.

“நம்ம லைஃப்ல இந்த ரூம்லதான்.. நாம ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ண போறோம் ..!! ஹஹாஹஹாஹஹா..!!”

திவாகர் ஏதோ பெரிய ஜோக் அடித்தவன் போல சிரிக்க, திவ்யாவால் ஏனோ அந்த ஜோக்கை ரசிக்க முடியவில்லை. அவஸ்தையாக நெளிந்தாள். இப்போது திவாகர், அவளை நெருங்கி,

“உள்ள வா திவ்யா.. உனக்கு ஒன்னு காட்டுறேன்..!!” என்றவாறு திவ்யாவின் தோளில் கைபோட்டு அவளை அணைத்துக் கொண்டான். உடனே,

“ஐயோ.. எ..என்ன திவாகர் இது..?” திவ்யா பதறிப்போய் விலகிக்கொண்டாள்.

“ஏன்.. என்னாச்சு..?”

“இ..இல்ல.. ஒண்ணுல்ல..”

“அப்புறம் என்ன..? வா..!!” என்றவாறே அவன் மீண்டும் அணைத்துக் கொள்ள முயல, திவ்யா மீண்டும் விலகினாள்.

“நோ திவாகர்.. வேணாம்..”

“ஏன்..?” திவாகர் இப்போது முகம் சுருங்கிப் போனவனாய் கேட்டான்.

“எ..எனக்கு பிடிக்கலை..”

“அதான் ஏன்னு கேக்குறேன்..”

“எ..எனக்கு சொல்ல தெரியலை.. ஆனா வேணாம்..!!”

“கமான் திவ்யா.. என்ன நீ இப்படி வெட்கப்படுற..? வீ ஆர் லவ்வர்ஸ்..!! லவ் பண்றவங்க இந்த மாதிரி ஹக் பண்ணிக்கிறது.. கிஸ் பண்ணிக்கிறது.. எல்லாம் சகஜம்..!! கமான்..!!”

சொன்ன திவாகர் இப்போது மீண்டும் திவ்யாவை அணைத்துக்கொண்டான். ஆனால் இந்தமுறை அவள் விலகிவிட முடியாதபடி மிக இறுக்கமாக அவளை பிடித்திருந்தான். திவ்யா பதறினாள். ‘ப்ளீஸ் திவாகர்..’ என்றவாறு விலகிக்கொள்ள முயன்றாள். அவளால் முடியவில்லை. திமிறினாள். முடியவில்லை. வேறு வழியில்லாமல் கெஞ்சலாக சொன்னாள்.

“ப்ளீஸ் திவாகர்.. விட்ருங்க.. எ..எனக்கு பிடிக்கலை..!!”

“ஹாஹா.. எனக்கு பிடிச்சிருக்கே..? நான் விட மாட்டேன்..” திவாகர் பிடியை இன்னும் இறுக்கமாக்கினான்.

“ப்ளீஸ் திவாகர்..” திவ்யாவின் கண்களில் இப்போது நீர் துளிர்க்க ஆரம்பித்தது.

“நோ..!!”

“ப்ளீஸ்..”

“ஹாஹா.. என்ன நீ..? நான் தொடாம வேற யாரு உன்னை தொடப்போறாங்க..? எனக்கு இல்லாத உரிமையா..?”

என்று கேட்டவாறே திவாகர், தன் பிடிக்குள் சிக்கியிருந்த திவ்யாவின் முகத்தை நோக்கி குனிந்து முத்தமிட முயன்றான். அவ்வளவுதான்..!!! திவ்யாவுக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ. ‘நோ..!!!!’ என்று அலறியவாறே, திவாகரின் மார்பில் இரண்டு கைகளையும் ஊன்றி, அவனை பலமாக பின்னால் தள்ளிவிட்டாள். திவாகர் நிஜமாக அந்தமாதிரி ஒரு ஆவேசத்தை திவ்யாவிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. நான்கு எட்டு பின்புறமாக தள்ளப்பட்டு, பின்பு தடுமாறி நின்றான். திவ்யா அப்புறமும் ஆவேசம் அடங்காதவளாய் கத்தினாள்.

“இல்லை.. உங்களுக்கு அந்த உரிமை இல்லை..!!!”

திவாகர் திகைத்துப் போனான். தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவனாய் திவ்யாவையே பார்த்தான். பிறகு திணறலான குரலில் கேட்டான்.

“தி..திவ்யா.. எ..என்ன சொல்ற நீ..? நான் திவாகர்.. உ..உன்.. உன் காதலன்..!! எனக்கு உன்னை தொட உரிமை இல்லையா..??”

திவ்யா இப்போது எதுவும் சொல்லவில்லை. சில வினாடிகள் திவாகரின் முகத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து இப்போது கண்ணீர் பெருமளவு கொட்டிக்கொண்டிருந்தது. படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்து கொண்டாள். பதற்றத்தில் அவளுடைய மார்புகள் படுவேகமாய் மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. திவ்யா இப்போது தலையை குனிந்து கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். கொஞ்ச நேரம் அந்த மாதிரி அமைதியாக நின்றவாறே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

அப்புறம் தன் தலையை நிமிர்த்தி திவாகரை ஏறிட்டாள். அவளுடைய முகத்தில் இப்போது புதிதாக ஒரு தெளிவு பிறந்திருந்தது. தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். மிகவும் தைரியமான, அதே நேரம் நிதானமான குரலில் திவாகரை கேட்டாள்.

“நீங்க ஏன் என்னை லவ் பண்றீங்க திவாகர்..?”

திவ்யாவின் அந்த கேள்வியை திவாகர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. திணறினான்.

“எ..என்ன கேள்வி இது..?”

“கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..!! என்னை ஏன் லவ் பண்றீங்க..?”

“எ..எனக்கு உன்னை பிடிக்கும்..”

“அதான்.. ஏன் என்னை பிடிக்கும்..?” திவ்யா கேள்விகளால் கிடுக்கிப்பிடி போட, திவாகர் உளற ஆரம்பித்தான்.

“நீ.. நீ அ..அழகா இருக்குற..”

“அப்புறம்..?”

“எனக்கு புடிச்ச மாதிரிலாம் நடந்துக்குற..”

“ம்ம்ம்.. அப்புறம்..??”

“அ..அப்புறம்.. நான் சொல்றதெல்லாம் செய்ற..”

“ம்ம்.. வேற..?”

“அ..அவ்ளோதான்..!! ஆமாம்.. இப்போ எதுக்கு இதெல்லாம் கேக்குற..?”

“ம்ம்ம்.. மொத்தத்துல.. நான் அழகா இருக்கேன்.. உங்களுக்கு பிடிச்ச மாதிரிலாம் நடந்துக்குறேன்.. நீங்க சொல்றதெல்லாம் செய்றேன்.. சரியா..??”

“நீ.. நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியலை திவ்யா..”

திவ்யா எங்கே வருகிறாள் என்றே திவாகருக்கு புரியவில்லை. குழப்பமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். திவ்யாவோ அமைதியாக வேறெங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுடைய கண்களில் கண்ணீர் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. சில வினாடிகள்..!! அப்புறம் கண்ணீர் வழியும் கண்களுடனே திவாகரின் பக்கம் திரும்பி பார்த்து சொன்னாள்.

“நான் அழகா இல்லாட்டி கூட.. ஒருத்தன் என்னை லவ் பண்ணுவான்.. தெரியுமா திவாகர்..? நீங்க சொன்னதெல்லாம் நான் செய்றேன்னு சொன்னீங்களே.. நான் சொன்னதெல்லாம் செய்றதுக்கு ஒருத்தன் இருக்கான்.. அது உங்களுக்கு தெரியுமா திவாகர்..?”

“தி..திவ்யா..” திவாகரிடம் இப்போது மெலிதாக ஒரு அதிர்ச்சி.

“சி..சின்ன வயசுல இருந்தே என்னை லவ் பண்றான்.. என் மேல உயிரையே வச்சிருக்கான்.. என் சந்தோஷத்துக்காக என்னவேணாலும் பண்ணுவான்..!! நான் அவனை அவ்வளவு ஹர்ட் பண்ணினப்புறமும்.. இன்னும் என்னையே நெனச்சுட்டு இருக்குற ஒரு பைத்தியக்காரன் இருக்கான் திவாகர்.. உங்களுக்கு தெரியுமா..?” சொல்லி முடிக்கும் முன்பே திவ்யா உடைந்து போய் ‘ஓ..!!’ வென அழ ஆரம்பித்தாள்.

“ஹேய்.. திவ்யா.. நீ ஏதோ தேவையில்லாம குழப்பிக்கிற..”

“இல்லை திவாகர்.. இப்போத்தான் நான் தெளிவா இருக்கேன்..!!”

“இங்க பாரு திவ்யா.. நான் உன்னை லவ் பண்றேன்.. எனக்கு..” திவாகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, திவ்யா குறுக்கிட்டாள்.

“நோ திவாகர்.. நீங்க என்னை லவ் பண்ணலை..!! நான் நானாவே உங்ககிட்ட நடந்துக்கலையே..?? அப்புறம் எப்படி நீங்க என்னை லவ் பண்ணிருக்க முடியும்..?? உ..உங்களுக்கு என்னோட இந்த அழகு புடிக்குமா திவாகர்.. அது இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் எங்கிட்ட இருக்கும்..!! இந்த ட்ரெஸ்.. இந்த மேக்கப்.. என் பேச்சு.. நான் உங்ககிட்ட நடந்துக்கிற விதம்.. இதெல்லாம் பிடிச்சிருக்கா..?? இது எல்லாமே அசோக் எனக்கு சொல்லிக் கொடுத்தது திவாகர்..!! இப்படி நடந்துக்கிட்டாத்தான் உங்களுக்கு பிடிக்கும்னு நான் போட்ட வேஷம்..!! நீங்க நெனைக்கிற திவ்யாவுக்கும், நிஜமான திவ்யாவுக்கும் நெறைய வித்தியாசம்.. நீங்க என்னை லவ் பண்ணலை..!!”

“தி..திவ்யா.. அப்படி சொல்லாத.. நீ.. நீ எப்படி இருந்தாலும் எனக்கு உன்னை பிடிச்சிருக்கும்..!!” திவாகர் சமாளிக்க முயன்றான்.

“இல்லை திவாகர்.. உங்களுக்கு பிடிக்காது..!! உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்கிட்டாத்தான் உங்களுக்கு பிடிக்கும்.. நீங்க சொல்றதெல்லாம் நான் செஞ்சாத்தான் என்னை உங்களுக்கு பிடிக்கும்..!! கொஞ்ச நேரம் முன்னாடி அந்த ஜூஸ் சாப்பிட்டோமே.. அப்போ..!! அது ஒரு சின்ன சாம்பிள்..!! ஆனா.. அசோக்கோட லவ் அப்படி இல்லை..!!” இப்போது திவாகர் சற்றே எரிச்சலானான்.

“இங்க பாரு.. அவன் லவ் எப்படி வேணா இருந்துட்டு போட்டும்.. ஆனா நீ என்னைத்தான் லவ் பண்ற.. அதை ஞாபகம் வச்சுக்கோ..!!”

“இல்லை திவாகர்.. நான் உங்களை லவ் பண்ணலை..!!” திவ்யா பட்டென சொல்ல, திவாகர் அதிர்ந்து போனான்.

“தி..திவ்யா.. என்ன சொல்ற நீ..?”

“ஆமாம் திவாகர்..!! காக்கா குருவின்னா இப்படித்தான் இருக்கும்ன்ற மாதிரி.. காதலும் இப்படித்தான்னு நானா அதுக்கு ஒரு வடிவம் கொடுத்துட்டேன்..!! இந்த மாதிரி ஒரு ஆளோடதான் எனக்கு காதல் வரப் போகுதுன்னு.. முன்னாடியே நானா ஒரு லிஸ்ட் போட்டுக்கிட்டேன்.. அந்த லிஸ்ட்ல இருக்குற குவாலிட்டியோட உங்களை பார்த்ததும் எனக்கு உங்க மேல ஒரு அட்ராக்ஷன்..!! அதை லவ்வுன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேன்..!! ஆனா.. நாலும் நாலும் சேர்ந்தா எட்டுன்னு கணக்கு போடுற மாதிரி.. காதல் இல்லைன்னு இப்போ எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு..!!”

Comments

Scroll To Top