ஐ ஹேட் யூ பட் – 10

(Latest Tamil Sex Stories - I Hate You But 10)

Raja 2013-10-08 Comments

Latest Tamil Sex Stories – “நாம பேசுறதை அவன் கேக்காட்டாலும்.. நமக்கா ஒரு பேஸிக் கர்ட்டஸி வேணாமா..??”

“ஓஹோ..?? அவனுக்கு மட்டும் அந்த கர்ட்டஸிலாம் இருக்கா.. அவன் என்ன பண்ணுனான்னு உனக்கு தெரியுமா..??”

“என்னடா பண்ணுனான்..??”

அசோக் இப்போது ஆர்வமானான். அதற்குள் சாப்பாட்டு ப்ளேட்டை கையில் ஏந்தியவாறு கோவிந்த் இவர்கள் அமர்ந்திருக்கிற டேபிள் நோக்கி, ஒரு அப்பாவிப் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான். அதை கவனியாத அசோக்,

“கேக்குறேன்ல.. சொல்லுடா.. என்ன பண்ணுனான் அவன்..??” என்று ஹரியை அவசரப் படுத்தினான்.

“ஹேய்.. இருடா.. அவன் இங்கதான் வந்துட்டு இருக்குறான்..!!” ஹரி கிசுகிசுப்பாக சொன்னான்.

“ஷ்ஷ்ஷேல் ஐ ஜாயின் வித் யூ..??”

புன்னகையுடன் அவர்களை பார்த்து பொதுவாக கேட்டான் கோவிந்த. அவனது பார்வை காலியாக கிடந்த அந்த ஒரு சேரின் மீது பதிந்திருந்தது. இப்போது அசோக் அமர்ந்திருந்த எல்லோர் முகத்தின் மீதும் ஒருமுறை பார்வையை வீசினான். அப்புறம் கோவிந்திடம் திரும்பி,

“ஸாரி கோவிந்த்.. இங்க ஆள் வர்றாங்க..!!” என்று இறுக்கமான குரலில் தயவு தாட்சணியம் இல்லாமல் சொன்னான்.

5

“ஓ..!! இ..இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே..!! நான் இன்னொரு எடம் பாக்குறேன்..!!”

கோவிந்த் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சொன்னான். வேறொரு மூலையில் ஒரு காலியிடம் இருக்க, அதை நோக்கி நகர்ந்தான்.

“ஹேய்.. ஸாரிப்பா.. சீரியஸா எடுத்துக்காத..!!” அசோக் கத்தவும்,

“நோ.. நாட் அட் ஆல்..!!”

அவன் திரும்பி ஒருமுறை அசோக்கைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மெல்ல நடந்தான். சற்றே தூரமாக காலியாக கிடந்த ஒரு டேபிளில் சென்று அமர்ந்து கொண்டான். தனியாக அமர்ந்து கொண்டு, பரிதாபமாக சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு, தட்டில் இருந்த வெள்ளரி ஸ்லைசை எடுத்து கடித்துக்கொண்டான்.

“ஹேய் அசோக்.. இப்போ எதுக்கு அவனை நீ இப்படி அவாய்ட் பண்ணின..??” நேத்ரா இப்போது அசோக்கிடம் சீறினாள்.

“ப்ச்.. நீ கொஞ்சம் சும்மா இருக்குறியா.. அவனைப் பத்தி பேசிட்டு இருக்குறோம்.. அவனை வச்சுக்கிட்டு எப்படி பேசுறது..?? ஹேய்.. நீ சொல்லுடா..!!”

அசோக்கின் பதிலில் நேத்ராவுக்கு திருப்தியில்லை. பாவமான பிள்ளையாக வெள்ளரி கடித்துக் கொண்டிருந்த கோவிந்தையே ஓரிரு வினாடிகள் இங்கிருந்தே வெறித்தாள். அப்புறம்..

“அச்சோ..!! பாபா அவனு.. நானு ஹோகி அவ்னிகே கம்பெனி கொட்த்தினி…!!”

என்றவாறு நேத்ரா சேரில் இருந்து எழுந்து, தனது ப்ளேட்டை கையில் எடுத்துக்கொண்டு, கோவிந்துக்கு கம்பெனி கொடுக்க சென்றாள்.

“ஆமாம்.. அவன் பாபா.. இவ சந்திரமுகி.. கம்பெனி குடுக்க கெளம்பிட்டாங்க..!! போடீ போ.. அவனை பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியலை..!!” ஹரி அவளை கிண்டல் செய்தான்.

“ஹேய்.. அவ கெடக்குறா விடு.. நீ சொல்லு.. என்ன மேட்டர்.. அவன் என்ன பண்ணினான்..??” அசோக் மீண்டும் ஆரம்பித்தான்.

“ஹ்ம்ம்.. என்னத்த சொல்றது..?? எனக்கு என்னவோ இவனைத்தான் ஆன்சைட் அனுப்ப போறாங்கன்னு தோணுது மச்சி..!!”

“எ..எப்படி சொல்ற..??”

“இந்த பஃபல்லோ வாயன்.. பக்-க்கு நல்லா சோப்பு போட்டு வச்சிருக்கான் மச்சி.. ஏற்கனவே நாலஞ்சு தடவை இவன் ஆன்சைட் போறது மிஸ் ஆயிடுச்சு.. இந்தத்தடவை எப்படியும் போயிடணும்னு வெறியோட இருப்பான்..!! அதில்லாம நான் இப்போ சொல்றதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு..!!”

“என்ன..??”

“இன்னைக்கு காலைல.. இவன் பக் ரூம்க்கு போயிருந்தான்..!! ரெண்டு பேரும் ஒரு மணி நேரத்துக்கு மேல.. குசுகுசுன்னு உள்ள பேசிட்டு இருந்தானுக.. கண்டிப்பா ஆன்சைட் பத்தித்தான் பேசிருப்பானுக..!! கூடவே இருந்துட்டு.. அவன் மட்டும் தனியா போய் பேசி.. நமக்குலாம் குழி பறிக்கிறான் பச்சி..!!”

“ஓ..!!”

அசோக் இப்போது முகத்தில் ஒரு சீரியஸ்னசுடன் நெற்றியை கீறிக்கொண்டான். தூரத்தில் நேத்ராவுடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிற கோவிந்த்தை இங்கிருந்தே ஒரு முறை முறைத்தான். இப்போது கவிதா இவர்களுடைய பேச்சுக்கு இடையில் புகுந்து சொன்னாள்.

“ஹேய்.. அவனை அனுப்பினா அனுப்பிட்டு போறாங்க.. இதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குறீங்க..??” என்றாள். உடனே ஹரி தன் மனைவியிடம் திரும்பி சொன்னான்.

“அதெப்படி அப்படி விட முடியும்..?? அவன் நேத்து வந்தவன்.. நாங்கல்லாம் அஞ்சாறு வருஷமா இந்த டீம்ல கெடந்திருக்கோம்..!!”

“ப்ச்.. அதனால இப்போ என்ன..??”

“என்னது.. அதனால இப்போ என்னவா..?? என்ன பேசுற நீ..?? இப்போ.. நீ வீட்ல இருக்குறப்போ.. உன்னை விட்டுட்டு.. உன் தங்கச்சியை எனக்கு கட்டி வச்சிருந்தாங்கன்னு வை.. நீ உன் அப்பா, அம்மாவை சும்மா..” அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கவிதா அவன் தொடையில் நறுக்கென கிள்ளி வைக்க, ஹரி

“ஆஆஆஆஆ…!!!” என்று அலறினான்.

“அப்டிலாம் வேற உங்களுக்கு கேடு கெட்ட நெனைப்பு இருக்கா..??” கண்களை உருட்டி கணவனை முறைத்தாள்.

“ஐயோ.. ஒரு உதாரணத்துக்கு சொன்னன்டி..!! அது மாதிரிதான் இதுவும்.. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தள்ளிட்டு போறதா..??” வலியோடு முகத்தை சுருக்கிக்கொண்டே சொன்ன ஹரி, அசோக்கிடம் திரும்பி

“மச்சான்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்.. நீ கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ.. இல்லனா ஆன்சைட் ஆப்பர்ச்சூனிட்டியை.. இந்த தர்பூஸ் தலையன் தட்டிட்டு போயிடுவான்.. பாத்துக்கோ..!!”

என்று பற்றவைத்துவிட்டு, பிசிபேலாபாத்தை கையில் அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். அசோக் சாப்பிட மனமில்லாதவனாய் சாதத்தை ஸ்பூனால் கிளறிக் கொண்டிருந்தான். அவன் மூளையில் சில குழப்பமான எண்ணங்கள். அப்புறம் எதேச்சையாக பக்கவாட்டில் திரும்பி பார்த்தவன், சற்றே எரிச்சலுற்றான்.

அவர்கள் பேசியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல, ப்ரியா தன் ப்ளேட்டில் கிடந்த நூடுல்சை அள்ளி வாய்க்குள் திணிப்பதிலேயே கவனமாக இருந்தாள். வாயில் இருந்து தப்பித்து செல்ல நினைத்த ஒற்றை நூடுலை, உதடுகளை குவித்து, சர்ரென கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிழுத்துக் கொண்டாள். கடுப்பான அசோக் நறுக்கென அவள் தலையில் ஒரு குட்டு வைத்தான்.

“ஆஆஆ.. ஏண்டா..??” ப்ரியா தலையை தேய்த்துக் கொண்டாள்.

“இங்க எவ்வளவு முக்கியமான மேட்டரு பேசிட்டு இருக்குறோம்..?? நீ பாட்டுக்கு எனக்கென்னடான்னு.. நூடுல்சை ‘ஊஊஊ’ன்னு உறிஞ்சிக்கிட்டு இருக்குற..??”

“ப்ச்.. போடா.. இதெல்லாம் தெரிஞ்சுட்டு நான் என்ன பண்ணப் போறேன்..?? நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டீங்கடா நீங்க..!!” என்று சலித்துக்கொண்டாள்.

அன்று மாலை நாலரை மணி இருக்கும். அன்றைய வேலையை முடித்துவிட்ட அசோக், சும்மா இராமல் தனது பர்சனல் ஃபைல்களை மேய்ந்து கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கு திடீரென அது ஞாபகம் வந்தது. அன்று ப்ரியாவின் ஃபோட்டோக்களை எல்லாம் தன்னுடைய சிஸ்டத்தில் காப்பி செய்து வைத்தது. இப்போது அதை எடுத்து பார்க்கலாம் என்று தோன்றியது. திரும்பி ஒருமுறை தூரத்தில் அமர்ந்திருந்த ப்ரியாவை பார்த்தான். அவள் ஆர்வமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, சற்றே தைரியமுற்றான்.

ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து உள்ளே சேமிக்கப்பட்டிருந்த ஃபோட்டோக்களை பார்த்தான். ப்ரியாவின் அழகை பயந்து பயந்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவன் கண்ணில் அந்த ஃபோல்டர் பட்டது. MM என்று மொட்டையாக பெயர் சூட்டப்பட்டிருந்த ஃபோல்டர்..!! உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தவன், ஆச்சரியமுற்றுப் போனான்.

உள்ளே ஒரே ஒரு ஃபோட்டோ.. இவனுடைய ஃபோட்டோ..!! அந்த ஃபோட்டோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது கூட இப்போது அவனுக்கு நினைவில்லை. கம்பெனியில் ஏதோ பார்ட்டி கொடுக்கப்பட்டபோது எடுத்த படமாக தோன்றியது. அழகாக வசீகரமாக சிரித்துக் கொண்டிருந்தான் அந்த ஃபோட்டோவில்..!!

அசோக்கிற்கு இப்போது சந்தோஷமும், குழப்பமும் ஒன்று கலந்த மாதிரியான ஒரு உணர்வு. ‘என் ஃபோட்டோவை இவள் எதற்கு எடுத்து வைத்திருக்கிறாள்..?? ஒருவேளை இவளும் என்னை மாதிரி..??’ அசோக்கிற்கு அந்த கேள்வியே அவன் மனதிற்கு ஒரு தித்திப்பை ஊட்டுவதாக இருந்தது. நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது மாதிரி ஒரு பரவசம்..!! ஒருமுறை திரும்பி ப்ரியாவை பார்த்தான். அவள் தன் வேலையிலேயே இன்னும் கவனமாக இருந்தாள். ‘அவளிடமே கேட்டுவிடலாமா..??’ மனதில் ஒரு ஆர்வம் இப்போது அவனை அரிக்க ஆரம்பித்திருந்தது.

‘ஒருவேளை அவள் சாதாரணமாக எடுத்து வைத்திருந்து.. அதை நான் போய் கேட்டு.. அவள் தவறாக நினைத்துவிட்டால்..?? இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது..?? எதேச்சையாக பார்த்தேன்.. எதற்காக வைத்திருக்கிறாய் என்று கேட்பதில் எந்த தவறும் இல்லை..!! கேட்டுப் பார்க்கலாம்.. அவள் என்ன சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ளலாம்..!!!’ குழம்பி குழம்பி இறுதியாக அசோக் ஒரு முடிவுக்கு வந்தான்.

Comments

Scroll To Top