இதயப் பூவும் இளமை வண்டும் – 31

(Idhayapoovum Ilamaivandum)

Raja 2015-02-17 Comments

This story is part of a series:

”வரேன்..!!” என எழுந்து ராமுவிடம் சொல்லிவிட்டு. மேலே போனான்.

குமுதா புடவை கட்டியிருந்தாள். குழந்தை மதுகூட புது கவுன் அணிந்து தயாராக இருந்தாள்.
குமுதாவின் கணவன் சாப்பிட்டுககொண்டிருந்தான்.
”என்னாச்சு..?” என்று மச்சானைப் பார்த்துக் கேட்டான் சசி.

”தலை சுத்தல்.. வாந்தி.. மயக்கம் போட்டு விழுந்திருக்கு..” சாப்பிட்டுக் கொண்டே சொன்னான்.

” பிரஷ்ஷரா..?”

”ம்.. சுகர்..!!”

குமுதா ”நாங்க இன்னிக்கு நைட் அங்க இருந்துட்டு.. நாளைக்குத்தான்டா வரமுடியும்..! சூர்யா ஸ்கூல்லருந்து நாலரை மணிக்கு வந்துருவான்.. அவன கூட்டிட்டு போய் அம்மாகிட்ட விட்று..! அப்றம் நைட்ல நீ இங்க வந்து படுத்துக்க..” என சசியிடம் ஒரு லிஸ்ட் போட்டாள் ”சாப்பாடு கொழம்பெல்லாம் அப்படியே இருக்கு.. நீ இங்கயே சாப்பிட்டுக்க..”

”இப்ப கெளம்பறீங்களா..?”

” மச்சான் சாப்பிட்டா கெளம்பவேண்டியதுதான்..! நான் எல்லாத்தையும் அம்மாகிட்ட போன்ல சொல்லிட்டேன்.! வீட்ட மட்டும் பத்ரமா பாத்துக்க..” என்றாள்.

”எத்தனை கோடி வெச்சிருக்க.. உன் வீட்ல…?” என்று கிண்டலாகக் கேட்டான் சசி….!!!!!

-வளரும்…..!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top