இதயப் பூவும் இளமை வண்டும் – 101

(Idhayapoovum Ilamaivandum 101)

Raja 2015-07-17 Comments

This story is part of a series:

”அத விடுடா.. சரி… நேத்து நைட்.. நீ எத்தனை மணிக்கு தூங்கின..?”

”பதினொரு மணிக்கு. ..” அவளைப் பார்க்காமல் டிவியைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

”அவ…?”

”எவ..?”

”இருதயாடா…?”

நிஜமாகவே அவனுக்கு கோபம் வந்துவிட்டது.
திரும்பி அவளை முறைத்தான்.
”ஏய் வெளக்கெண்ண.. மூடிட்டு போய் தூங்கமாட்ட…”

”இப்ப ஏன்டா இப்படி கோச்சுக்கற..? இல்ல ரெண்டு பேரும் பேசிட்டிருந்துருப்பீங்கள்ள..? அவ வேற உனக்கு தோசையெல்லாம் சுட்டு குடுத்துருக்கா..? நாங்கள்ளாம் இருக்கப்பவே ரெண்டு பேரும் மணிக்கணக்கா பேசுவீங்களே… அதான் கேட்டேன்…?” என சிரித்துக் கொண்டே எழுந்தாள்.

எழுந்து நின்றவளின் பின்பக்கத்தில் ஓங்கி ஒரு அடி வைத்தான் சசி.

”சரி.. அவகிட்ட கேட்டா எல்லாம் சொல்லிடப்போறா..! நாங்கேட்டா எதையுமே மறைக்க மாட்டா..” என்றவாறு போனாள்.

சசி அவள் பின்னாலிருந்து சொன்னான்.
”ஒரு வெங்காயமும் நடக்கல.. மூடிட்டு போய் தூஙகு.. குட்நைட்..!!”

”குட்நைட்..ரா..”

சசி எழுந்து மொட்டை மாடிக்குப் போனான். இருதயாவைப் போனில் அழைத்து.. அவளது அப்பி பற்றி விசாரித்தான்.!

அவள் வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு மேலாகும் என்றாள்.!
அவளே..
”மிஸ் யூ.. ப்பா..!!” என்றாள்.

”நானும்தான் உன்ன மிஸ் பண்றேன்..! மிஸ் யூ..!!பை..!!”

”கிஸ் மீ.. ப்பா..!!”

போனில் முத்தம் வைத்து..
”ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!” என்றான்.

அவளும் முத்தம் கொடுத்து..
”பை..!!” என்றாள்.

சசிக்கு இப்போது இருதயாவின் நினைவு அதிகமாக வந்தது.
ஒரு இரவில் அவள்.. அவனது இதயம் முழுவதும் நிறைந்துவிட்டது போல் தோண்றியது.!!

ஆனாலும் காதல் என்கிற உறவில் அவன் ஆழமாக மூழ்கிப்போக விரும்பவில்லை.
நீண்ட ஒரு பெருமூச்செறிந்து விட்டு.. மொட்டை மாடியில் இருந்து இறங்கி படுக்கப் போனான் சசி….!!!!!!

-வளரும்……!!!!!!

– புரிந்துகொண்டு இந்தக் கதைக்கு ஆதரவு காட்டும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான…
நன்றிகள்….!!!!

– முகிலன்…..!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top