ஆண்மை தவறேல் – 35

(Tamil Sex Story - Aanmai Thavarael 35)

Raja 2013-12-17 Comments

“நா..நான் தப்பு பண்ணிட்டேன் மாமா.. உங்ககிட்ட நெறைய விஷயத்தை மறைச்சுட்டேன்..!!”

“எ..என்ன மறைச்சுட்ட..?” மஹாதேவன் திகைப்பாய் கேட்க, நந்தினி சொல்ல ஆரம்பித்தாள்.

“ஆறு வருஷத்துக்கு முன்னாடியே அவரை எனக்கு நல்லா தெரியும் மாமா.. காலேஜ்லேயே எங்களுக்குள்ள நல்ல பழக்கம்..!! இப்போ இவருக்கு இத்தனை பொண்ணுகளோட சகவாசம் இருக்கு.. ஆனா அப்போ.. காலேஜ்ல.. அந்த நாலு வருஷத்துல.. அவர் வாயை தொறந்து ஒரு பொண்ணுட்ட பேசினார்னா.. அது எங்கிட்ட மட்டுந்தான்..!!”

“ந..நந்தினி..”

“அவரு என்னை காதலிச்சாரு.. கல்யாணம் பண்ணிக்க நெனைச்சாரு..!! நான்தான் அப்போ அவரோட நல்ல மனசை புரிஞ்சுக்காம.. காயப்படுத்தி அனுப்பிச்சுட்டேன்..!!”

நந்தினி சொல்ல மஹாதேவனும், கௌரம்மாவும் அதிர்ந்து போனார்கள். மஹாதேவனுக்கு நம்பவே முடியாத மாதிரி ஒரு அதிர்ச்சி என்றால்.. கௌரம்மாவுக்கு ஆச்சரியம் கலந்த ஒரு அதிர்ச்சி..!! இருவரும் பேச வார்த்தை இல்லாமல், திக்கித்துப்போய் நந்தினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்புறம் கொஞ்ச நேரம் நந்தினி மட்டுந்தான் பேசினாள். ஆரம்பத்தில் இருந்து நடந்ததை எல்லாம் ஒவ்வொன்றாக.. பொறுமையாக.. தெளிவாக அவர்களுக்கு எடுத்துரைத்தாள்..!! அசோக்குக்கும் நந்தினிக்கும் ஏற்பட்ட அறிமுகம்.. அப்புறம் அவர்கள் பெங்களூர் சென்றிருக்கையில் ஏற்பட்ட நெருக்கம்.. இவள் அவனிடம் கனிவாக பேசியது.. அதை அவன் காதலென உணர்ந்தது.. தன் காதலை இவளிடம் வெளிப்படுத்தியது.. இவள் காயப்படுத்தி திருப்பி அனுப்பியது.. அப்புறம் ஆறு வருடங்களில் இருவருடைய மாற்றம்.. அவளுக்கு வந்த திருமண வாய்ப்பு.. அசோக் போட்ட அக்ரீமன்ட்.. திருமணதிற்கு அப்புறம் நடந்தவை.. என.. அந்த முத்த விவகாரம் தவிர்த்து மொத்த விவகாரத்தையும் நந்தினி கொட்டிவிட்டாள்.

நந்தினி சொல்லி முடித்துவிட்டு இருவரையும் ஏறிட்டு பார்த்தாள். இருவருமே ஒரு திகைத்த பார்வை பார்த்தபடி பேச்சிழந்துபோய் இருந்தார்கள். அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை உள்வாங்கியதில், சற்றே ஆடிப்போய் அமைதியாக இருந்தார்கள். முதலில் மஹாதேவனிடம்தான் சலனம் தெரிந்தது. ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தியவர், திடீரென சொன்னார்.

“தேங்க்ஸ்மா நந்தினி..!!”

“தே..தேங்க்ஸா..?? எதுக்கு மாமா..??” நந்தினியின் குரலில் ஒரு குழப்பம்.

“இத்தனை நாளா.. என் பையன் எதனால இப்படி மாற ஆரம்பிச்சான்னு.. எனக்கு காரணமே தெரியாம இருந்தது.. இன்னைக்கு அதை தெரிஞ்சுக்கிட்டதுல எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு..!!”

“எ..என்னை மன்னிச்சுடுங்க மாமா.. அப்போ எனக்கு எதுவும் புரியாத வயசு.. யார்கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியாது.. உடம்பு பூரா திமிரு.. அதான் அப்படிலாம் வார்த்தையை கொட்டிட்டேன்..!! அதுக்கான பலனை இப்போ நல்லா அனுபவிச்சுட்டு இருக்கேன்..!!”

“ம்ம்.. எனக்கு புரியுதும்மா.. எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்ல.. எங்கிட்ட நீ மன்னிப்பெல்லாம் கேக்க வேணாம்..!! அப்போ உன் வயசையும், இப்போ அதுக்காக நீ வருத்தப்படுறதையும் வச்சு பாத்தாலே.. உன் மேல என்னால கோவப்பட முடியலை..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்… எனக்கு என் பையன் மேலதான் கோவம், வருத்தம், கவலை எல்லாம்..!! இப்படி ஆபீஸுக்கே கூட்டிட்டு வர ஆரம்பிச்சுட்டானேன்னு.. ரொம்ப கவலையா இருக்கு..!!”

“இல்ல மாமா.. அவர் கூட்டிட்டு வரலை.. அந்தப்பொண்ணு தானா வந்திருக்கா.. அவ காரியத்தை சாதிச்சுக்குறதுக்காக அந்த மாதிரி பண்ணிருக்கா..!! அது நாம நெனைச்ச மாதிரி இல்ல மாமா.. நீங்களும் அவசரப்பட்டு அவரை திட்டிட்டீங்க.. நானும் அவசரப்பட்டு வார்த்தையை கொட்டிட்டேன்..!!” நந்தினி அவ்வாறு சொன்னதும், மஹாதேவன் இப்போது அவளை வியப்பாக பார்த்தார்.

“எ..என்னம்மா சொல்ற நீ..??”

“ஆமாம் மாமா.. அங்க நடந்தது ஒரு ஆக்ஸிடன்ட்.. அவர் மேல எந்த தப்பும் இல்ல..!!”

“எ..எப்படி நீ அதை அவ்வளவு உறுதியா சொல்ற..?”

“எனக்கு புரிஞ்சது மாமா.. அவர் கெஞ்சுன கெஞ்சல்ல இருந்து புரிஞ்சது..!! நான் அவரை நம்பலைன்னதும்.. அவர் கொதிச்ச கொதிப்புல இருந்து புரிஞ்சது..!! ஆனா.. எல்லாமே லேட்டாத்தான் புரிஞ்சது..!!”

“எ..எனக்கு புரியலைம்மா நந்தினி..!!”

நந்தினி அவருக்கு புரிவது மாதிரி எடுத்து சொன்னாள். அவர் சென்ற பிறகு, ஆபீஸ் அறைக்குள் அவளுக்கும் அசோக்குக்கும் ஏற்பட்ட விவாதம் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தாள். அவள் சொல்ல சொல்ல.. மஹாதேவன் தன் நெற்றியை கீறியவறே.. தீவிர சிந்தனையில் இருந்தார். எல்லாம் சொல்லி முடித்த நந்தினி,

“இப்போ சொல்லுங்க மாமா.. அவர் மேல தப்பு இருக்கும்னு நீங்க நெனைக்கிறீங்களா..?? அவர் நெனச்சிருந்தா.. கல்யாணம் ஆன நாள்ல இருந்து இத்தனை நாளா.. எப்போ வேணா என்னை குத்திக்காட்டி பேசிருந்திருக்கலாம்..!! ஆனா.. இன்னைக்கு அப்படி பேசிருக்கார்னா.. அவர் எந்த அளவு மனசு வேதனைப்பட்டிருந்தா அப்படி பேசிருப்பாரு..?? அவர் மேல தப்பு இருக்கும்னு எனக்கு தோணலை மாமா..!!”

“ம்ம்ம்ம்ம்ம்.. நீ சொல்றது சரிதான்மா.. நாமதான் கொஞ்சம் அவசரப் பட்டுட்டோம்னு நெனைக்கிறேன்..!!”

“ஆனா.. ஆனா அவர்.. கடைசியா.. இப்படி சொல்லிட்டாரே மாமா.. ‘நான் இப்படித்தான் இருப்பேன்.. உன்னால என்ன செய்ய முடியும்..’னு கேட்டுட்டாரே..?? என் அவசர புத்தியால.. எல்லாத்தையும் கெடுத்துட்டேனோன்னு நெனைக்கிறேன் மாமா.. இனிமே அவரை மாத்துறது ரொம்ப கஷ்டம்னு தோணுது..!!” கண்களில் நீர்துளிர்க்க நந்தினி சொல்ல, இப்போது மஹாதேவன் இறுக்கம் தளர்ந்து மருமகளைப் பார்த்து புன்னகைத்தார்.

“ஹாஹா.. என்னம்மா நீ..?? இனிமேதான் அவனை மாத்துறது ரொம்ப ஈஸின்னு எனக்கு தோணுது..!!” அவர் அப்படி சொல்ல, நந்தினி இப்போது அவரை திகைப்பாக பார்த்தாள்.

“எ..என்ன மாமா சொல்றீங்க..??”

நந்தினி அவ்வாறு கேட்டதும், அவளுக்கு எவ்வாறு விளக்கம் சொல்வது என்று மஹாதேவன் சற்றே தடுமாறினார். அவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த கௌரம்மா, அவருடைய தடுமாற்றத்தை உடனே புரிந்து கொண்டாள். முகத்தில் ஒரு மலர்ச்சியும் புன்னகையுமாய், இப்போது நந்தினிக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டாள். நந்தினியின் தலையை இதமாக தடவியவாறே கேட்டாள்.

“ஐயா சொல்றது உனக்கு புரியலையா நந்தினிம்மா..??”

“இ..இல்ல..”

“சரி.. நான் புரியிற மாதிரி சொல்றேன்..!! இத்தனை நாளா தான் செய்றது தப்புனே ஒத்துக்காத அசோக்கு.. இன்னைக்கு ‘நான் இப்படி இருக்குறதுக்கு காரணம் நீதான்..’னு கோவப்பட்டுருக்குன்னா.. அதுக்கு என்ன அர்த்தம்..?? அசோக்கோட அடிமனசுக்கு இந்த மாதிரி இருக்குறது அதுக்கு புடிக்கலைன்னுதான அர்த்தம்..?? ரெண்டு வாரமா வேற எந்த பொண்ணையுமே நெனைக்காம.. உன்னையே நெனச்சுட்டு இருந்ததா அசோக் தம்பி சொல்லிருக்கே.. அதுக்கு என்ன அர்த்தம்..?? அது மனசுல நீ ஆழமா புகுந்துட்டேன்னுதானே அர்த்தம்..?? உன்கிட்ட அவ்வளவு கோவப்பட்டு பேச என்ன காரணம் தெரியுமா..?? ‘ நாம இவளை இவ்வளவு நேசிக்கிறோம்.. இவ நம்மள நம்ப மாட்டேன்றாளே’ன்னு வந்த கோவம் அது..!! உரிமையும், பிரியமும் இருக்குற இடத்துலதான் இந்த மாதிரி கோவம் வரும் நந்தினிம்மா.. உனக்கு அசோக் தம்பி மேல வந்த கோவத்துக்கும் அதுதான் காரணம்.. அசோக் தம்பிக்கு இப்போ உன் மேல வந்திருக்குற கோவத்துக்கும் அதுதான் காரணம்..!!”

கௌரம்மா சொல்ல சொல்லவே.. நந்தினிக்கு நெஞ்சுக்குள் படபடவென பட்டாம்பூச்சி பறப்பது மாதியான ஒரு உணர்வு..!! கௌரம்மா சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேன் துளிகளாய் அவளுடைய காதுகளில் சிந்தின..!! ‘நிஜம்தானா..?? நிஜமேதானா..?? ஆமாம்.. அப்படித்தான் இருக்க வேண்டும்.. அதைத்தான் ‘சொல்ல வேண்டும்.. சொல்ல வேண்டும்..’ என்று அப்படி துடித்தானா..?? என்னை இழுத்துப் பிடித்து வைத்து, உதட்டை வர்ணித்து பேசினானே..?? அது காதல்தானோ..?? முத்தமிட்டதற்கு காரணம் வேறு என்று எதுவோ சொல்ல வந்தானே..?? காதல்தான் அந்த காரணமோ..?? இப்போது அவன் என்னை காயப்படுத்தியதற்கும் மூல காரணம் அந்த காதல்தானா..??’

நந்தினிக்கு இப்போது நம்பிக்கை வந்தது. கணவனுக்கு தன் மீது காதல் பூத்திருக்கிறது என்று புரிந்தது. ஆனால் அதை அவன் காதல் என்று உணராமல் இருக்கிறான் என்று தோன்றியது. ‘காதலே வேண்டாம் என்று இருந்தவனுக்கு வந்த இந்த காதல், அவனுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த குழப்பத்துக்கு தீர்வு காணவே என்னை அணுக முயன்றிருக்கிறான். நான்தான் அது புரியாமல் அவனை தவிக்க விட்டிருக்கிறேன். ஆனால்.. இப்போது.. இப்போது அவன்..??’ அசோக் இறுதியாக சொன்ன வார்த்தைகளை எண்ணி நந்தினி மருகிக்கொண்டிருக்க, கௌரம்மா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

“………… நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினாலே.. இப்போ எல்லா பிரச்னையும் தீந்துரும் நந்தினிம்மா..!! இனிமேயும் நீ அசோக் தம்பிட்ட.. பதிலுக்கு பதிலுன்னு பண்ணிட்டு இருக்காத.. பொண்ணுன்னா கொஞ்சம் நெளிவு சுளிவாத்தான் போக தெரிஞ்சிருக்கணும்..!!”

“அ..அது சரி.. ஆனா..”

“என்ன ஆனா..??”

“இ..இப்போ.. எ..என் மேல இருக்குற கோவத்துல.. ‘நான் மாற மாட்டேன்.. இப்படியே தான் இருப்பேன்’னு சொல்லிட்டாரே..?” நந்தினி தவிப்பும் தடுமாற்றமுமாய் சொன்னாள்.

“அதெல்லாம் சும்மாம்மா.. அசோக் தம்பி மனசார அப்படி சொல்லிருக்காது.. வீம்புக்கு சொன்ன மாதிரிதான் தோணுது.. ஆம்பளைல..? அந்த வீராப்பு..!!” கௌரம்மா சற்றே ஏளனமாக சொல்ல, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மஹாதேவன் இப்போது வாய் திறந்தார்.

“கரெக்டா சொன்ன கௌரம்மா.. நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்..!!”

“இ..இல்ல மாமா.. உங்களுக்கு அவரை பத்தி எதுவும் தெரியாது.. அ..அவருக்கு புடிவாதம் ரொம்ப ஜாஸ்தி..!!”

ஏக்கமும், தவிப்புமாய் நந்தினி தன் மாமனாரிடம் சொன்னாள். தனது மகனைப் பற்றி தனக்கே எதுவும் தெரியாது என்று சொல்கிற மருமகளை மஹாதேவன் புன்னகையுடன் பார்த்தார். அவளுடைய வார்த்தைகளில் பொதிந்திருந்த மகன் மீதான அன்பை, அவர் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட புன்னகை அது..!! Kai Adichu Vidum Tamil Sex Story

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top