மேனகாவோடு நினைத்து பார்க்காத உறவு

(Tamil Kamakathaikal - Meganaavodu Ninaithu Paarkkaatha Uravu)

maamu 2017-12-22 Comments

அவர்களின் வாக்குவத்தை கேட்ட போதே நானும் கொஞ்சம் சங்கடபட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். அப்போது மேனகா மேடத்தில் பதிலில் நியாயம் இருப்பதை பார்த்து அவளுக்காக பரிதாப பட்டேன். அவள் புருஷனின் இயலாமைக்காக அனுதாபபட்டேன். பிறகு மறுநாள் ரேஷன் கடைக்கே வந்த மேனகா மேடம் நடந்த சம்பவத்துக்காக என்னிடம் வருத்தப்படாள்.

நானும் இதுல என்ன மேடம் இருக்கு எல்லாரும் ஒரே மாதிரி இருந்துட்டா இந்த பூமி சுத்தாம நின்னுடும். நான் நல்ல மனசை தவிர வேற எதையும் ஜனங்க கிட்டே எதிர்பார்க்கிறது இல்லை மேடம். அந்த மாதிரி மக்களுக்கு எப்பவும் நான் ஓடிப்போய் உதவி பண்ணுவேன். அந்த லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்கஎன்று சொன்னதுமே மேனகா மேடம் கண்கலங்க வீட்டிற்கு சென்று விட்டாள்.

ஆனால் அதற்கு பிறகு அவள் புருஷனின் அடாவடித்தனத்தால் அவர்கள் வீட்டு பிரச்சனை தெருவுக்கே வந்து அவன் குழந்தையை தூக்கி கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் அவன் அப்பா வீட்டுக்கே ஓடிவிட்டான். எனக்கு அதை கேட்டு அதிர்ச்சியாக இருந்தாலும் இந்த மாதிரி ஆம்பளைக்கெல்லாம் காதலும், கல்யாணமும், குடும்பமும் எதுக்கு என்று நினைத்து நொந்து கொண்டேன்.

இப்போ மேனகா மேடத்துக்கு புதுச்சிக்கல் அவனை போல் சுயமரியாதையை விட்டு விட்டு பெற்றோர் வீட்டு வாசலிலும் போய் நிக்க முடியாது. அவர்களும் ஏற்று கொள்வார்களா என்று தெரியாது. புருஷனை தேடி மாமனார் வீட்டிற்கும் போகமுடியாது. அவர்களும் ஏற்று கொள்வார்களா தெரியாது. குழந்தையை பிரிந்த ஏக்கம் வேறு. அப்போது தான் இந்த சமூகம் எங்கே போகிறது என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.

ஆனால் மேனகா மேடம் படித்து, வேலை பார்த்து, சுயமாக சம்பாதித்து சொந்தகாலில் நிற்பதால் அவள் யாரிடமும் பிச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பெண்களோட படிப்பின் அருமையும், சுயமும் எனக்கே அன்று தான் புரிந்தது. அந்த நாள் மேனகா அதே வீட்டில் இருந்து கொண்டே தனியாக வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்தாள். கணவன் அலுவலகத்திற்கு சென்று சமாதானம் பேசியும் பயன் இல்லை. குழந்தையையும் மாமனார் வீடு தேடி போய் பார்க்க முடியவில்லை.

அப்போது தான் நான் களத்தில் இறங்கி எனக்கு தெரிந்த வக்கீல் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுத்த போது புருஷன் என்னை தேடி ஓடி வந்தான். நான் கெளரவமான குடும்பத்தை சேர்ந்தவன். எங்க அப்பா அம்மா ரொம்ப மரியாதையா வாழ்ந்தவங்க. எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். கோர்ட் கேசுலாம் வேண்டாம் என்றான். நீங்களே மேனகா கிட்டே சொல்லி கேசை வாபஸ் வாங்க சொல்லுங்க என்றான். நான் எதுவும் பேசாமல் அவனை கையோடு அழைத்து கொண்டு மேனகா வீட்டிற்கு போனேன்.

அவள் சொன்ன வார்த்தை இது தான். குழந்தையை மட்டும் கொடுத்து விட்ட அவர் போகட்டும். இனி அவரோடு எனக்கு எந்த உறவும் உரிமையும் வேண்டாம் என்று சொல்ல, எஸ்கேப் ஆன சந்தோஷத்தோடு அந்த காதல் என்கிற கன்றாவி ஹீரோ திரும்பி கூட பார்க்காமல் எனக்கு மட்டும் தாங்க்ஸ் சொல்லிவிட்டு அப்பா, அம்மா வீட்டிற்கு சென்று விட்டான். அவன் போகும்போதே நினைத்தேன் இவனுகளை விட இந்த நாட்டு ஊழல் அரசியல்வாதிகளும், திருடர்களும் எவ்வளவோ மேல் என்று.

ஆனால் அந்த ஏரியாவின் கோவில் காளையான எனக்கு இப்போது மேனகா என்கிற மனைவியும், அவள் குழந்தையும். நானும் இப்போ குடும்பஸ்தன் தான். ஆனா இப்பவும் அந்த ஏரியாவின் ஆசிபெற்ற செல்லபிள்ளையே…

நன்றி!

What did you think of this story??

Comments

Scroll To Top