ஆண்மை தவறேல் – 40

(Tamil Kamakathaikal - Aanmai Thavarael 40)

Raja 2013-12-22 Comments

அசோக்கை உடனடியாய் ஒரு சுறுசுறுப்பு வந்து தொற்றிக் கொண்டது. பாத்ரூம் சென்று அவசர அவசரமாய் குளித்தான். வெளியே வந்தான். வார்ட்ரோப் திறந்து சலவை செய்து வைக்கப்பட்டிருந்த ஆடைகளை வெளியே எடுத்தான். பேன்ட் அணிந்து கொண்டான். உடலுக்கு ஸ்ப்ரே அடித்துக்கொண்டான். பனியனை தலை வழியாக மாட்டிக் கொள்ளும்போதுதான், எதைச்சையாக வாசல் பக்கம் பார்வையை வீசினான். வீசியவன் லேசாக அதிர்ந்தான்.

f5

வாசலில் நந்தினி நின்றிருந்தாள். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சுவற்றில் ஒருபக்கமாய் சாய்ந்தவாறு நின்றிருந்தாள். அவளுடைய உதட்டில் ஒருவித கேலிப்புன்னகை வழிந்தது. கண்கள் அசோக்கின் உடலை மேய்ந்து கொண்டிருந்தன. ‘இவள் எப்போது வந்தாள்..?? எப்போதிருந்து இவ்வாறு தன்னை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள்..??’ அசோக் லேசாக துணுக்குற்றான். அப்புறம் உடனடியாய் சுதாரித்துக் கொண்டு, வாசலில் நின்றிருந்தவளை கண்டு கொள்ளாமல், மேல்சட்டையை எடுத்து அணிந்து கொள்ள ஆரம்பித்தான். இப்போது நந்தினி சற்றே கடுகடுப்புடன் ஆரம்பித்தாள்.

“மொபைலை ஏன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சீங்க..??”

“பேட்டரி சார்ஜ் போய்டுச்சு..!!”

அசோக் விட்டேத்தியாக சொல்ல, நந்தினி மேலும் சில வினாடிகள் அவனையே முறைத்தாள். அப்புறம் மெல்ல நகர்ந்து சென்று, கட்டிலுக்கு அருகே டீப்பாயில் இருந்த அவனது செல்போனை கையில் எடுத்தாள். உயிர்ப்பித்தாள். பேட்டரி இண்டிகேட்டர் பச்சை நிறத்துடன் வளமாக காட்சியளித்தது. உடனே மீண்டும் கணவனை ஏறிட்டு உஷ்ணமாக பார்த்தாள்.

“பொய்..!!” நந்தினி சீற,

“சரி.. பொய்தான் சொன்னேன்.. அதுக்கு என்ன இப்போ..??” அசோக்கும் பதிலுக்கு சீறினான்.

“எங்க இருக்கீங்கன்னு ஒரு ஃபோனாவது பண்ணி சொல்லிருக்கலாம்ல..?? நைட்டு பூரா எத்தனை தடவை உங்க நம்பருக்கு கால் பண்ணிருப்பேன் தெரியுமா..??”

“ஏன்.. நான் எங்க போவேன்னு உனக்கு தெரியாதா..?? அதான் காலாங்காத்தாலேயே.. கரெக்டா மோப்பம் புடிச்சு வந்து சேந்துட்டியே..?? ஆமாம்.. என்ன இந்தப்பக்கம்..?? புருஷன் என்ன பண்றான்னு வேவு பாக்க வந்தியா..??” அசோக் சட்டை பட்டன்களை மாட்டிக்கொண்டே எள்ளலாக கேட்டான்.

“ஆமாம்.. வேதாளாம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சா இல்லையான்னு.. வேவு பார்க்க வந்தேன்..!!”

“பாத்தாச்சா..?? சந்தோஷமா..??”

“ம்ம்..!! பாத்தாச்சு.. பாத்தாச்சு..!!”

நந்தினி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக்கின் செல்போன் ‘டிங்.. டிங்.. டிங்..’ என்று தொடர்ந்து சப்தம் எழுப்பியது. வரிசையாக மெசேஜ்கள் வந்து விழுந்தன. நந்தினி பட்டனை அமுக்கி என்னெவென்று பார்த்தாள். அதில் ஒரு மெசேஜை பார்த்ததும் புருவத்தை சுருக்கியவள், செல்போனை அசோக்கிடம் நீட்டியவாறே சொன்னாள்.

“நீங்க ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்குறப்போ.. உங்க ஆளு கால் பண்ணிருக்கா..!! கால் பண்ணி என்னன்னு கேளுங்க..!!”

“என் ஆளா..?? அது யாரு என் ஆளு..??”

“அவதான்.. கற்பகம்..!! நீங்க கூட ஆசையா ‘கற்பு.. கற்பு..’ன்னு கூப்பிடுவீங்களே..??” நந்தினி கிண்டலாக சொல்ல, அசோக் சூடானான்.

“அறைஞ்சு பல்லை உடைக்கப் போறேன் உன்னை..!! அவளை பத்தி என்ன நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..??”

“நான் ஒன்னும் நெனைக்கலை சாமீ..!!”

“அப்புறம் ஏன் அவளை என் ஆளுன்னு சொல்ற..??”

“நானா சொன்னேன்.. எல்லாம் அவதான் சொன்னா..!!”

“என்ன சொன்னா..??”

“உங்களுக்கும் அவளுக்கும் ஏதோ ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்புன்னு..!!”

“இங்க பாரு.. அவ என்ன சொன்னா.. அதை நீ எந்த அர்த்ததுல மாத்தி சொல்றேன்னு எனக்கு தெரியும்..!! ஆமாம்.. எங்களுக்குள்ள ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்தான்..!! ஆனா.. நீ நெனைக்கிற மாதிரி தப்பான ரிலேஷன்ஷிப் இல்ல..!! வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்.. ட்ரூ ஃப்ரண்ட்ஸ்..!! உன் புத்திக்குலாம் எங்க ஃப்ரண்ட்ஷிப் பத்தி புரியாது..!!”

“சரி சரி..!! இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி டென்ஷன் ஆகுறீங்க..?? எனக்கு மனசுக்குள்ள ஒரு சின்ன டவுட்டு.. தப்பா இருந்தா மாத்திக்கிறேன்.. அவ்ளோதான..?? ம்ம்..??”

கூலாக சொன்ன நந்தினியையே அசோக் ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம் கற்பகத்தின் நம்பருக்கு கால் செய்தான். ரிங் சென்றது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. மேலும் ஒரு முறை முயற்சி செய்து தோற்றுவிட்டு, செல்போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

“என்னாச்சு..??” நந்தினி ஆர்வமாக கேட்டாள்.

“ரிங் போகுது.. யாரும் பிக்கப் பண்ணலை..!!”

“ஒருவேளை குளிக்க போயிருப்பாளா இருக்கும்.. உங்ககிட்ட சொல்லிட்டு போகலாமேன்னு கால் பண்ணிருப்பா.. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க..!!”

குறும்பாக சொன்ன நந்தினியை, அசோக் எரிச்சலாக பார்த்தான். அவன் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நந்தினி திடீரென அப்படியே நின்றவாக்கிலேயே சரிந்தாள். அவளுக்கு பக்கவாட்டில் இருந்த மெத்தை மீது பொத்தென்று விழுந்தாள். விழுந்தவள் ‘வாவ்…’ என்று ஓசை எழுப்பிக்கொண்டே, இப்படியும் அப்படியுமாய் இரண்டு முறை உருண்டாள். அவள் செய்வதை எல்லாம் அசோக் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான். உருண்டு முடித்த நந்தினி, இப்போது தனது தலையை கொஞ்சமாய் உயர்த்தி, தனது வலதுகையை மெத்தையில் ஊன்றி, அந்தக்கையால் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை நீட்டி மெத்தையை தடவியவாறே குறும்பான குரலில் கேட்டாள்.

“இதுதான் அந்த பொன்னான மெத்தையா..?? பல பொண்ணுகளை நீங்க பொரட்டி எடுத்த மெத்தையா..??”

அவளுடைய கேலி அசோக்கை எரிச்சலாக்கியது. மனைவியையே முறைப்பாக பார்த்தவன், கடுப்பும் கேலியுமாய் சொன்னான்.

“ஆமாம்.. நேத்து கூட ஒருத்தி..!! விடிய விடிய நல்லா பொரட்டி எடுத்தேன்..!!” அசோக் அவ்வாறு சொல்ல, நந்தினி இப்போது சிரித்தாள்.

“ஹாஹா.. பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா..!!”

“ஏன்..??”

“நான் விழுறதுக்கு முன்னாடி.. ஒரு கசங்கல் கூட இல்லாம பெட் செம நீட்டா இருந்துச்சு..!! நைட்டெல்லாம் ஒரு பொண்ணை பொரட்டி எடுத்துட்டு.. காலைல உக்காந்து பெட் மடிப்புலாம் சரி பண்ணிட்டு இருந்தாரா என் புருஷன்..??”

“ஏன்.. பண்ணிருந்தா என்ன..??”

“ம்ம்.. பண்ணிருக்கலாம்..!! ஆனா.. அப்படியே வாட்ச்மேனுக்கும் கொஞ்சம் பணத்தை கொடுத்து.. எங்கிட்ட பொய் சொல்ல சொல்லிருக்கலாம்..!! அவனுக்கு நான் பணம் கூட குடுக்கலைப்பா.. பாத்து சிரிச்சேன்.. அவ்வளவுதான்.. எல்லா உண்மையும் கொட்டிட்டான்..!!” நந்தினி கண்சிமிட்ட,

“ஓ.. சொல்லிட்டானா..??” அசோக்கின் குரலில் ஒரு சோர்வு தெரிந்தது.

“யெஸ்..!! எல்லாம் சொல்லிட்டான்..!!”

“அவனுக்கு இன்னைக்கு இருக்குது..!! ராஸ்கல்..!!”

“ஐயோ.. பாவங்க அவன்.. நல்ல பையன்.. திட்டாதீங்க..!! அவன் சொன்னதை கேக்குறதுக்கு.. எனக்கு எவ்வளவு ஹேப்பியா இருந்தது தெரியுமா..??”

“ஓஹோ.. அப்படி என்ன சொன்னான்..??” ஷர்ட்டை டக்கின் செய்து, இடுப்பில் பெல்ட் அணிந்து கொண்டே அசோக் கேட்டான்.

“நேத்து ஒரு குட்டியை கூட்டிட்டு வந்தீங்களாம்.. ஆனா.. கூட்டிட்டு வந்த வேகத்திலயே பொட்டியை கட்டி திரும்ப அனுப்பிச்சிட்டீங்களாமே..?? இவ்வளவுக்கும் அவ அடிக்கடி இங்க வருவாளாம்.. அவ எப்போ வந்தாலும் வீட்டுல ஆட்டம் தூள் பறக்குமாமே..??” Koothi Mudi Tamil Kamakathaikal

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top