ஆண்மை தவறேல் – 2

(Tamil Kama Stories - Aanmai Thavarael 2)

Raja 2013-11-12 Comments

நந்தினி முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு சொன்னாள். அசோக்கிற்கு இப்போது அவனுடைய இதயத்தின் ஒவ்வொரு அணுவிலும், ஒரு வித வேதனை உணர்வு பரவுவதை தெளிவாக உணர முடிந்தது. அவனுடைய முகமும் இப்போது களையிழந்து வாடிப்போனது. ரொம்பவே பரிதாபமான குரலில் கேட்டான்.

“ஏன் நந்தினி.. உனக்கு என்னை புடிக்கலையா..?”

“ஆமாம்.. புடிக்கலை..!! போதுமா.. ஹேப்பி நவ்..?? கெளம்பட்டுமா நான்..?? ம்ம்..??”

நந்தினி முகத்தில் அறைந்த மாதிரி சொன்னாள். சேரில் இருந்து எழுந்து கொள்ள முயன்றாள். அசோக் எழவில்லை. அப்படியே தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தவன், ஒருவித ஏக்கமான குரலில் கேட்டான்.

“ஏ..ஏன்..??”

“என்ன ஏன்..?” நந்தினி எரிச்சலாக அசோக்கை முறைத்தாள்.

“ஏன் என்னை புடிக்கலை..?” அசோக் பாவமாக கேட்க,

“உஷ்ஷ்ஷ்.. ப்பா..!!!” என்று நந்தினி இப்போது அவஸ்தையாக உஷ்ண மூச்சு விட்டாள்.

“சொல்லு நந்தினி.. ஏன் என்னை புடிக்கலை..?”

“புடிக்கலைன்னு சொன்னா விட மாட்டியா..? ஏன் எதுக்குன்னு காரணம்லாம் சொல்லனுமா..?”

“ஆமாம்..”

“என்னால காரணம்லாம் சொல்ல முடியாது.. புடிக்கலை.. அவ்ளோதான்..!!”

“ப்ளீஸ் நந்தினி.. நான் உன்னை உண்மையா நேசிக்கிறேன்.. மனசுல இருக்குற காதல் உண்மையா இருந்தா, அதுவே உன்னை என்கூட சேர்த்து வைக்கும்னு நம்புனேன்..!! என் காதலை நீ வேணான்னு சொல்றதே எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு.. ஆனா.. எதுக்காக என்னை ரிஜக்ட் பண்றன்னு கூட தெரிஞ்சுக்கலைன்னா.. எனக்கு தலையே வெடிச்சுடும்..!!”

“ஓஹோ..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?”

“ஆ..ஆமாம்..”

“சரி.. என்னவா இருக்கும்னு நீயே கொஞ்சம் யோசிச்சு பாரேன்..”

“எனக்கும் அதுதான் புரியலை.. என்னை ஏன் உனக்கு புடிக்கலை..?? எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன்.. தேவையில்லாத எந்த பிரச்னைக்கும் போகமாட்டேன்..!! நல்லா படிக்கிற பையன்.. உனக்கே தெரியும்ல.. நாந்தான யுனிவர்சிட்டி டாப்பர்..?”

“ம்ம்ம்.. தெரியும்..”

“அப்புறம் என்ன..?? நா..நான்.. நான் அழகா இல்லையா..?? நான் என் அம்மா மாதிரின்னு அப்பா அடிக்கடி சொல்வாரு.. என் அம்மா எவ்வளவு அழகுன்னு உனக்கு தெரியுமா நந்தினி..??”

“ஹ்ஹ.. உன் அழகுக்கு என்ன கொறைச்சல்..? ஐஸ்வர்யாராய்க்கு இருக்குற ஒரே காம்படிஷன் நீதான்..” நந்தினியின் நக்கலை கூட புரிந்து கொள்ளாமல் அசோக் தொடர்ந்து பேசினான்.

“வேற என்ன நந்தினி..? பணமா..?? என் அப்பாவுக்கு நான் ஒரே புள்ளை நந்தினி.. எங்களுக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்கு.. நான்தான் ஒரே வாரிசு தெரியுமா..? என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா.. நீ எந்த குறையும் இல்லாம நல்லா வசதியா வாழலாம்..!!”

“ப்ச்.. அசோக்.. நானும் ஒன்னும்.. இல்லாத வீட்டு பொண்ணு இல்ல..!! கார், பங்களான்னு எங்க வசதிக்கும் எந்த குறைச்சல் இல்ல.. அதுலாம் நான் பெரிய மேட்டரா நெனைக்கலை..!!”

“அப்புறம் என்ன நந்தினி..? வேற என்னதான் காரணம்..??”

“சொன்னா உனக்கு புரியாது அசோக்.. விடு..”

“பரவால.. சொல்லு..”

“இங்க பாரு அசோக்.. நான் சொல்லிருவேன்.. அப்புறம் ஏண்டா கேட்டோம்னு உனக்குத்தான் கஷ்டமா இருக்கும்..”

“ஹ்ஹ.. என் மேல லவ்வே இல்லைன்னு சொல்லிட்ட..? அதைவிட என்ன கஷ்டம் இருந்திட போகுது..? சும்மா சொல்லு..!!”

“ஓ.. காட்..!!” நந்தினி அவஸ்தையாக நெளிய,

“ப்ளீஸ் நந்தினி.. சொல்லு..” அசோக் அவளை கட்டாயப் படுத்தினான்.

“ஆஆஹ்.. அதை எப்படி சொல்றது..? எ..எனக்கு.. எனக்கு உன்னை பாத்தா அந்த லவ் ஃபீலிங்கே வரலை..”

“அதான் ஏன்னு கேக்குறேன்..?”

“யூ டோன்ட் லுக் மேன்லி..!! ஓகே..?”

நந்தினி பட்டென சொல்லி விட, அசோக் அதிர்ந்து போனான். நம்பமுடியாமல் நந்தினியின் முகத்தையே திகைப்பாய் பார்த்தான். அவனுடைய வாய் குழறியது.

“ந..நந்தினி..”

“உன் ஃபேஸ்.. உன் ஃபிஸிக்.. உன் நடை.. உன் பேச்சு.. உன்னோட சாஃப்ட் நேச்சர்.. எல்லாத்துலயுமே ஒரு பொம்பளைத்தனம்தான் தெரியுது.. ஒரு மேன்லினஸே இல்ல..!! உ..உன்னைப் பாத்தா எந்தப் பொண்ணுக்குமே லவ் வராது அசோக்..!!”

நந்தினி படபடவென சொல்ல, அசோக் அப்படியே இடிந்து போனான். இப்போது அவனுடைய கண்களில் கொஞ்சம், கொஞ்சமாய் நீர் தேங்க ஆரம்பித்தது. நந்தினியின் முகத்தையே ஏக்கமாக பார்த்தவன், பரிதாபமாக கேட்டான்.

“அ..அப்போ நான் ஆம்பளையே இல்லைன்னு சொல்றியா நந்தினி..?”

“ப்ச்.. நான் அப்படி சொல்லலை.. அந்த மாதிரி நீ நடந்துக்கலைன்னுதான் சொல்றேன்..!!”

நந்தினி வெறுப்பாக சொல்ல, அசோக்கின் கண்களில் இருந்து பொலபொலவென நீர் கொட்ட ஆரம்பித்தது. துடிதுடித்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டான். அவனுடைய கண்களில் கண்ணீரை பார்த்ததும், நந்தினி இப்போது சற்று பதறிப் போனாள். தன்னுடைய குரலில் மென்மையை குழைத்துக் கொண்டு சொன்னாள்.

“ஹேய்.. அசோக்.. நான் உன்னை ஹர்ட் பண்றதுக்காக சொல்லலை..!! ப்ளீஸ்.. அண்டர்ஸ்டாண்ட் மீ..!! ப்ச்.. இதுக்குத்தான் நான் சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.. நீதான் கேட்கலை..!! ப்ளீஸ் அசோக்.. அழாத.. நான் சொன்னது உன்னை ஹர்ட் பண்ணிருந்தா.. ஐம் ரியல்லி வெரி ஸாரி..!!”

“ம்ம்ம்… அதுலாம் ஒண்ணுல்ல..” மூக்கை உறிஞ்சிக்கொண்ட அசோக், புறங்கையால் கண்களை துடைத்துக் கொண்டான்.

“ஸா..ஸாரி அசோக்..”

“ப..பரவால நந்தினி.. நீ எதுக்கு ஸாரி கேக்குற..? நீ சொன்னதுல எந்த தப்பும் இல்ல..!! நீ ஒன்னும் அதுக்காக ஃபீல் பண்ணாத..!! சரி.. உனக்கு டைமாச்சு.. நீ கெளம்பு..!!”

“அ..அசோக்..”

“கெளம்பு நந்தினி..!! ஐ விஷ் யூ ஆல் சக்சஸ் இன் யுவர் லைஃப்..!! பை..!!” Koothi Tamil Kama Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top