நண்பனின் முன்னால் காதலி – 33

(Nanbanin Munnal Kadhali 33)

rahulraj 2015-10-05 Comments

This story is part of a series:

அத பத்தி நீ எதுவும் கவலைப்படாத நான் டாக்டர கிட்ட பேசி சமாளிச்சுக்கிறேன் .வேற என்ன சொன்னங்க என்றாள் .வேற நீ அதிகமா உடம்புக்கு வேலை கொடுக்காம உடம்ப பாத்துகிவியாம் என்றான் .அத நான் பாத்துக்கிறேன் வேற எதுவும் சொல்லலே என்றாள் .

இல்ல வேற எதுவும் சொல்லல வா போவோம் என்றான் .சரி என்றாள் .பின் இருவரும் காரில் வீட்டுக்கு போனார்கள் .பின் ஒரு இடத்தில சிக்னல் போட்டார்கள் .

விக்கி அப்போது எதார்த்தமாக பின்னே உக்காந்து இருந்த சுவாதியை பார்த்தான் ,அவள் தூங்கி கொண்டு வந்தாள் .அப்போது அவள் முகம் மிகவும் களைப்பில் வாடி ஒரு மாதிரி இருந்தது .சன்னல் காற்றுக்கும் அதுக்கும் அவள் தலை முடிகள் ஒரு சில அவள் முகத்தில் அடித்து கொண்டு இருந்தது .

அவள் தூங்கி கொண்டு இருப்பதற்கும் அவள் தலை முடிகள் அவள் முகத்தில் அடிப்பதற்கும் அவள் ஒரு குழந்தை போலவும் cute ஆக இருந்தது .

விக்கி தன்னை மறந்து அவளை ரசித்தான் .பின் அவ்வோபோது அவள் முகத்தை மறைக்கும் அவள் முடிகளை ஒதுக்கி விட்டு அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்து கையை கொண்டு போனான் .

அதற்குள் சிக்னல் போட்டு பின்னே இருக்கும் கார்காரன் ஆரன் அடிக்க விக்கி முன்னே திரும்பினான் .பின் வீட்டிற்கு வண்டியை ஓட்டினான் .போகும் போது அடிக்கடி கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து கொண்டே வந்தான் .

பின் வீடு வந்ததும் அவளை எழுப்பினான் .அவளும் தூக்க கலக்கத்தில் அதுக்குள்ளே வீடு வந்துருச்சா என்றாள் .ஆமா என்றான் .சே டாக்டர் ஊசி போட்டதுனால தூக்கமா வந்து இருச்சு என்று சொல்லி விட்டு உள்ளே போனாள் .பின் இருவரும் வீட்டிற்கு உள்ளே போனார்கள் .

சரி விக்கி எனக்கு ரொம்ப டய்ர்ட்டா இருக்கு நான் போயி தூங்குரென் என்றாள் .ஓகே குட் நைட் என்றான் .ஹ by the bye தேங்க்ஸ் என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்ததுக்கா என்றான் .இல்ல இன்னைக்கு புல்லா கோப படாம இருந்ததுக்கு என்று சொல்லி சிரித்தாள் .

ஒ அப்படியா என்று அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு எ உனக்கும் தேங்க்ஸ் என்றான் .எதுக்கு என்றாள் .பிரண்ட்லியா மனசு விட்டு பேசுனதுக்கு என்றான் .

ஓகே என்று சொல்லி சிரித்தாள் .விக்கி மீண்டும் அவள் முகத்தை பார்த்தான் .அவள் முகம் மிகவும் களைப்பில் வாடி போயி பார்க்க ஒரு மாதிரி இருந்தாலும் என்னமோ அவனுக்கு அவள் என்னைக்கும் இல்லாத மாதிரி அழகாக தெரிந்தாள் .

அவள் அங்கு வெளியே சொன்னது போல எனக்கு இதுதான் பிடிச்சு இருக்கு என்று சுவாதி தன் கர்ப்ப மான தாய் அழகை பிடித்து இருக்கிறது என்று சொன்னது போல

விக்கிக்கும் அவள் அழககாக இருப்பதாக தோன்றியது .பின் அவளிடிம் குட் நைட் சொல்லி விட்டு அவன் ரூமிற்கு போனான் .அவனை அறியமால் வாவ் என்றான் .

பின் அந்த நாளை பற்றியும் ஸ்வாதியோடு பார்க்கில் மனம் விட்டு பேசியதை பற்றியும் நினைத்து பார்த்தான் .பின் சுவாதியின் குழந்தை முகம் அவன் கண்ணில் வந்து போனது .அவனுக்கு அந்த முகத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது .

படுத்து இருந்தவன் உடனே எழுந்து அவளை பார்க்க செல்ல எழுந்தான் .அப்போது யாரோ அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டது போல இருந்தது .

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top