நண்பனின் முன்னால் காதலி – 19

(Nanbanin Munnal Kadhali 19)

rahulraj 2015-09-12 Comments

This story is part of a series:

எல்லா பொருள்களையும் வைத்த பின் சுவாதி அஞ்சலியிடம் ஓகேக்கா நான் போறேன்க்கா என்றாள் அழுது கொண்டே .போறேன் சொல்லாதேடி போயிட்டு வரேன்னு சொல்லு என்றாள் அஞ்சலி ,அவள் அழுது கொண்டே மெல்ல சிரித்து விட்டு சொன்னாள் .இனி எங்கிட்டு இங்க வர போறேன் .குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அப்படியே கனடா போ போறேன் என்று சொல்லிவிட்டு ரொம்ப அழுதாள்.

சரி சரி அழுகாத அக்கா இங்கதான் இருக்கேன் எப்பனாலும் எனக்கு போன் போடு உடனே நான் வந்துடுறேன் என்றார்கள் .சரிக்கா என்று சொல்லி விட்டு இருவரும் கட்டி பிடித்தனர் .பின் அஞ்சலி அவள் கண்ணீரை துடைத்து விட்டு விக்கியை முறைத்து பார்த்து கொண்டே சொன்னாள் அந்த ராஸ்கல் எப்ப என்ன பிரச்சின பண்ணாலும் சொல்லு உடனே நான் போலிச கூப்பிட்டு அங்க வந்துறேன் என்றார் .சுவாதியும் சிரித்து கொண்டே சரிக்கா என்றாள் .

அவர்கள் இருவரும் விக்கிக்கு கொஞ்சம் தொலைவில் நின்று பேசியாதல் விக்கிக்கு அவர்கள் பேசியது கேக்கவில்லை .ஆனால் சுவாதி அழுவதும் அஞ்சலி அவளை கட்டி பிடித்து ஆறுதல் சொல்வதும் மட்டும் அவனுக்கு புரிந்தது .

என்னடா இது என்னமோ இவ கட்டி கொடுத்து புருஷன் வீட்டுக்கு போற மாதிரி இப்படி அழுகுறா அவ என்னமோ சொந்த தங்கச்சிய அனுப்புற மாதிரி ஆறுதல் சொல்றா இதல்லாம் ரொம்ப ஓவர்டி ரெண்டு பேருக்கும் என்று மனதிற்குள்ளே கிண்டல் அடித்தான் .ஆனால் அந்த அஞ்சலி வந்ததிலிருந்து அவனை கோபமாக முறைப்பது அவனுக்கு தெரிந்தது .

நான் வேணும்னா வந்து அந்த பொறுக்கிய கொஞ்சம் மிரட்டவா என்றாள் அஞ்சலி .வேணாம்க்கா பாவம் நான் மிரட்டனதுக்கே ஸ்கூல் பையன் மாதிரி பயந்து போயி கிடக்கான் .இனி நீங்க வேற மிரட்டுன்னிங்க பயத்துல பெண்ட்லே உச்சா போயிடுவான் என்று சொல்லி சிரித்தாள் .இரண்டு பேரும் விக்கியை ஒரு நிமிடம் உத்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள் ,அதை பார்த்த விக்கி என்ன இவளுக நம்மள ஏதும் ஒட்டுராலுகள என்று நினைத்தான் .

நீ வேணும்னா பாரு உனக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவன் கண்டிப்பா மாறி உன்னையே பிடிச்சுருக்குன்னு சொல்வான் என்றாள் அஞ்சலி .வேணாம் அக்கா அவன் அப்படியே இருக்கட்டும் நான் இப்படியே இருக்கேன் அத ரெண்டு பேருக்கும் நல்லது என்றாள் சுவாதி

ஏண்டி உனக்கு அவன் மாறுனா பிடிக்காதா .என்றார் அஞ்சலி .பாவம் அக்கா அவன் தப்பு எல்லாம் என் மேலதான் என்னையே காப்பாத்த போயி நானா அவன் கிட்ட தப்பா நடந்து அதனால அவன் பெஸ்ட் பிரண்ட பிரிஞ்சு ரொம்ப கஷ்டபட்டுடான்

.இன்னைக்கும் என்னாலதான் அவனுக்கு இவளவு தொல்லை .அதனால இருக்க வரைக்கும் அவன் சந்தோசத்த கெடுக்காம ஒரு ஓரத்துல இருந்துட்டு குழந்தை பிறந்ததும் எவளவுக்கு எவளோ சீக்கிரம் பாஸ்போர்ட் எடுக்க முடியுமோ எடுத்துட்டு அவன நிம்மதியா அவன் பழைய வாழ்கைய கொடுத்துட்டு போயிடனும் என்றாள் ஒரு ஏக்கத்தோடு .

இதை சொன்ன போது அவள் விழி ஒரமாக மெல்ல கண்ணிர் துளிகள் வந்தது .அதை துடைத்து விட்டு காரில் உக்காந்து இருக்கும் விக்கியை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தாள்

அவள் பேசியதையும் விக்கியை பாரப்பதையும் புரிந்து கொண்ட அஞ்சலி சரி இத பத்தி நாம இன்னொரு நாள் பேசுவோம் இப்ப கிளம்பு நேரமாச்சு என்றாள் அஞ்சலி .ஒகே பாய் அக்கா என்று சொல்லிவிட்டு காரில் ஏறினாள் .

அவள் காரில் ஏறியதும் என்ன ஒரே அழுகையும் சிரிப்பும் மாறி மாறி ஒரு சீரியலே ஓடுச்சு என்ன நடந்துச்சு என்றான் .கார எடு அப்படியே போற வழில பேசுவோம் என்றாள் .அதுவும் சரிதான் என்று காரை எடுத்தான் .சுவாதி அவள் ஹாஸ்டலை பார்த்து கண்ணீர் விட்டவாறே பிரிந்தாள் .

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top