நண்பனின் முன்னால் காதலி – 11

(Nanbanin Munnal Kadhali 11)

rahulraj 2015-09-03 Comments

This story is part of a series:

வீட்ல குழந்தை வர போறதால இன்னும் நிறைய உழைக்கனும் போல இருக்கு என்று உற்சாகத்தோடு சொல்லி கொண்டு இருந்தான் மணி .

ஆனால் இந்த கர்ப்பம் ,குழந்தை போன்ற வார்த்தைகளை கேக்க கேக்க விக்கிக்கு அப்படியே இதயம் படக் படக் என்று அவனை அறியாமல் ஒரு பயத்தில் அடித்தது .அதனால் அவன் மணி பேசுவதற்கு வெறும் ம்ம் மட்டும் போட்டு கொண்டு இருந்தான் .

அவளுக்கு இப்ப ஆறவாது மாசம் ம்ம் இதே நம்ம ஊரா இருந்தா அவளுக்கு அடுத்த மாசம் கிராண்டா சொந்தகாரங்களோட வளைகாப்பு கொண்டாடி இருக்கலாம் அது மட்டும்தான் அவளுக்கும் எனக்கும் வருத்தமா இருக்கு என்றான் .

ஐயோ இவன் கிட்ட யாராச்சும் என்னயே காப்பாத்துங்களே என்று அவன் நினைத்த போது

விக்கியை தேடி பியூன் வந்தான் .அப்படா என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் விக்கி .ஆனால் பியூன் சார் உங்கள தேடி சுவாதின்னு ஒரு மேடம் வந்து இருக்காங்க என்றான் .அதை கேட்டதும் இதுக்கு இவன் கிட்டவே இருந்து இருக்கலாம் என்று நினைத்தான் .

சுவாதி பெயரை கேட்டதும் மணி சிரித்து கொண்டே என்னடா அன்னைக்கு லவ் இல்லேன்னா அப்புறம் இன்னைக்கு ஆபிஸ்க்கு எல்லாம் வரா என்ன விசயம் என்றான் மணி .

ஐயா BBC ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல சும்மா என்கிட்ட கொஞ்சம் பணம் கேக்க வந்துருக்கா நீ பாட்டுக்கு கண்டதையும் கறபனை பண்ணி ஆபிஸ் புரா பரப்பி விட்றாத உன்ன கெஞ்சி கேட்டுகிறேன் என்று சொன்னான் விக்கி .

சரிடா நீ சொன்னாத நான் நம்பிட்டேன் என்று சொல்லி சிரித்தான் .அவனை கோபத்தோடு முறைத்து விட்டு அவன் ரூமை விட்டு வெளியே வந்தான் .வெளியே அவன் ஆபிசில் இருக்கும் மற்றவர்களும் ஒரு கிண்டலாக சிரித்தனர் .

இவள யாரு ஆபிஸ்க்கு எல்லாம் வர சொன்னது என்று கோபத்தோடு போனான் .

உன்னையே யாரு இங்கலாம் வர சொன்னா என்று அவளை பார்த்ததும் கத்தினான் .உனக்கு ஒரு மணி நேரமா நான் போன் ட்ரை பண்ணேன் பிஸின்னே வந்துச்சு எவ கூடயாச்சும் கடலை போட்டுகிட்டு இருந்து இருப்ப

அதான் உன்னயே தேடி நானே வந்துட்டேன் என்றாள் சுவாதி ,
சரி என்ன விஷயம் என்றான் வெறுப்போடு .நீ சொன்ன மாதிரி அபார்செனே பண்ணிரலாம்டா என்று சொன்னதும் விக்கியின் முகம் மலர்ந்தது .

அதுக்கு நீ இன்னொரு தடவ என் புருசனா நடிக்கணும் சோ வரியா என்றாள் .
ஒ சுவாதி தாரளாமா வரேன் என்றான் சிரித்து கொண்டே .

எப்ப போவோம் என்றாள் .இப்பயே நான் போயி ஆபிஸ்ல பர்மிசன் வாங்கிட்டு வரேன் என் கார்லயே போவோம் என்றான் .

பின் இருவரும் மீண்டும் மருத்தவமனைக்கு போனார்கள் .

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top