மாங்கல்யம் தந்துனானே – பகுதி 4

(Tamil Sex Story - Mangalyam Thanthunanae 4)

Raja 2014-03-29 Comments

சொன்னவர் பட்டென ஒரு கையால் என் இடுப்பை வளைத்து இழுத்தார். இழுத்த வேகத்தில் என் இதழ்களை தன் இதழ்களால் கவ்விக்கொண்டார். ஆவேசமாக உறிஞ்ச ஆரம்பித்தார். அவருடைய கடுகடு முகம் எப்போது காதல் கொஞ்சும் முகமானது என்று எனக்கு நினைவில்லை. உர்ரென இருந்தவர் உதடு கவ்வி உறிஞ்சுவார் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் இதழ்களை இழந்திருந்தது இதமாய் இருந்த போதும், பிடிக்காத மாதிரி அவரை தள்ளிவிட்டேன்.

“ஐயோ.. என்னங்க இது.. யாராவது வந்துடப் போறாங்க..?”

“யாரும் வர மாட்டாங்க.. கதவை லாக் பண்ணியாச்சு.. வா பவி..”

சொன்னவர் மீண்டும் என் உதடுகளில் தன் உதடுகளை பதித்தார். முத்த வன்முறை செய்தார். இந்தமுறை நான் ரொம்ப பிகு பண்ணாமல் அவருடன் ஒத்துழைத்தேன். அவருடைய இடுப்பை சுற்றி என் கையை போட்டுக் கொண்டு, அவர் உறிஞ்சி முடிக்கும் வரை என் உதடுகளை அவருக்கு விட்டுக் கொடுத்து நின்றிருந்தேன். நீண்ட நேரம் ஆசையாய் சுவைத்து விட்டு, அவர் என்னை விடுவிக்க,

“என்னங்க இது.. காலங்காத்தாலேயே..?” நான் வெட்கத்தில் முகம் சிவந்து போனவளாய் கேட்டேன்.

“ஏய்.. என்ன.. இதுக்கே இப்படி வெட்கப் படுற..? சென்னைக்கு போனப்புறம் பாரு.. காலங்காத்தால இன்னும் என்னென்ன வேலைலாம் பண்றேன்னு..” அவர் சொல்லிவிட்டு கண்ணடிக்க, நான்

“ச்ச்சீய்ய்ய்..!!!” என வெட்கமுற்றேன். கொஞ்ச நேரம் என் வெட்க முகத்தை ஆசையாக ரசித்தவர், பின்பு கனிவான குரலில் கேட்டார்.

“எழுப்புறப்போ.. எரிஞ்சு விழுந்துட்டேன்னு கோவமா பவிம்மா..?”

“ச்சேச்சே.. அ..அதுலாம் ஒண்ணுல்ல..”

“ஸாரிடா.. எங்கிட்ட ரொம்ப நாளா இருக்குற கெட்ட பழக்கம் அது.. கண்டிப்பா மாத்திக்கிறேன்.. சரியா..?”

சொல்லிக்கொண்டே அவர் என் கைகள் ரெண்டையும், தன் கைகளுக்குள் வைத்து காதலாக முத்தமிட, சற்றுமுன் இருந்த ஒரு சின்ன கவலை இப்போது காலைப்பனியாய் மறைந்து போனது.

“ம்ம்.. சரி..” என்றேன் புன்னகையுடன்.

“இனிமே அந்த மாதிரி நான் மூஞ்சியை காட்டுனா.. என் கன்னத்துலையே ரெண்டு அறை கொடு.. ஓகேவா..?”

“ஹ்ஹ்ஹாஹ்ஹா.. ம்ஹூம்.. அப்டிலாம் நான் பண்ண மாட்டேன்..”

“இல்ல இல்ல.. நீ கொடுக்கணும்..”

“சரி.. கொடுக்குறேன்.. ஆனா..”

“ம்ம்.. ஆனா..?”

“அறை இல்லை.. முத்தம்..!!” நான் வெட்கத்துடன் சொல்ல, அவர் முகம் மலர்ந்தது.

“வாவ்… பரவால்லயே..?”

“என்ன பரவால்ல..?”

“என் பொண்டாட்டிக்கும் ரொமான்ஸ் நல்லா வருதே..?”

“ச்சீய்…”

“ஹ்ஹ்ஹ்ஹா… ம்ம்ம்.. அதுசரி.. பாத்ரூமுக்குள்ள போய் என்ன பண்ணிட்டு வர்ற..?”

“பாத்ரூமுக்குள்ள என்ன பண்ணுவாங்க..? குளிச்சுட்டு வர்றேன்..”

“குளிச்சுட்டியா..? நெஜமாவா..?” அவர் ஆச்சரியமாய் கேட்டார்.

“ஆமாம்.. ஏன்..?”

“குளிச்ச மாதிரியே தெரியலையே..?”

“அப்டியா..?” இப்போது நான் நம்ப முடியாமல் கேட்டேன்.

“ஆமாம்.. இப்போதான் தூங்கி எந்திரிச்ச மாதிரி இருக்கு.. வா.. இன்னொரு தடவை நல்லா குளிக்கலாம்..” அவர் குறும்பான குரலில் சொல்லியபடி என் கையைப் பற்றி உள்ளே இழுக்க, அவருடைய திட்டம் எனக்கு விளங்கிற்று.

“ச்சீய்.. விடுங்கப்பா.. நான் வரலை..”

“இட்ஸ் ஓகே.. கமான்.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..”

“உங்களுக்கு என்ன ப்ராப்ளம்..? எனக்குத்தான் ப்ராப்ளம்.. விடுங்க..” சொல்லிக்கொண்டே நான் கையை உதறி பறித்துக் கொண்டேன்.

“ப்ளீஸ் பவி..”

“ம்ஹூம்.. இன்னொரு நாள்..”

அவர் சிணுங்குவது மாதிரி நடித்துக் கொண்டே பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டார். நான் அறைக்கதவை திறந்து வைத்துவிட்டு , மெத்தையில் அமர்ந்தேன். மனசுக்குள் மத்தாப்பு கொளுத்திப் போட்டது மாதிரி இருந்தது. என் கணவர் செய்த சில்மிஷங்கள்தான் காரணம். யப்பா….!!! செம சேட்டைதான் இது..!! எப்படி இதை சமாளிக்கப் போகிறேனோ..?

ஒரு பத்து நிமிடம் ஆயிருக்கும். வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தேன். அந்தக் குட்டிப்பெண் நின்றிருந்தாள். அசோக்குடைய அக்காவின் மகள். நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும். நேற்றே அந்தக்குட்டியின் பெயர் சொன்னார்கள். கல்யாண பரபரப்பில் மறந்து போயிருந்தது. அவள் இப்போது வாசலில் நின்று கைகளை பின்னால் கட்டி , ஒருமாதிரி என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்து புன்னகைத்தபடி அருகில் அழைத்தேன்.

“ஹாய் குட்டி.. உள்ள வா..”

அவள் தயங்கி தயங்கி உள்ளே வந்தாள். ஆனால் எதுவும் பேசாமல் உர்ரென்று இருந்தாள். நான்தான் அவளுடைய கன்னத்தை பிடித்து தடவியவாறு மீண்டும் கேட்டேன்.

“குட்டிப்பொண்ணுக்கு என்ன வேணும்..?”

“எனக்கு ஒன்னும் வேணாம்.. ஆச்சி உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க..” அது மழலை மொழியை உதிர்த்தது.

– தொடரும் Mutham Koduthu Nakkum Tamil Sex Story

What did you think of this story??

Comments

Scroll To Top