மாங்கல்யம் தந்துனானே – 17

(Tamil Sex Story - Mangalyam Thanthunanae 17)

Raja 2014-04-23 Comments

எனக்கு கால்கள் தரையில் ஊன்றாமல், மிதப்பது போல இருந்தது.. சிறகுகள் முளைத்து வானத்தில் பறப்பது போல ஒரு உணர்வு..!! இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கிருந்த அத்தனை கவலைகளையும், மொத்தமாய் எதுவோ தின்று தீர்த்து விட்டது மாதிரி தோன்றியது. அந்த கணத்தில் இவ்வுலகில் மிகவும் சந்தோஷத்தில் மிதந்த ஜீவன், நான்தான் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும்..!!

எனக்கு அந்த சந்தோஷத்தை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. முதலில் யாரிடம் சொல்ல நினைத்திருப்பேன் என்று நீங்களே கணித்திருப்பீர்கள். எனக்கு தாயாகும் பாக்கியம் தந்தவரிடம்.. தன் ஆண்மையால் என் பெண்மையை முழுமையாக்கியவரிடம்.. என் உடலுக்குள் உயிர் விதைத்தவரிடம்.. இந்த சிப்பிக்குள் முத்து வைத்தவரிடம்..!!

ஆனால் அவரிடம் போன் செய்து விஷயத்தை சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நேரில் சொல்ல வேண்டும்.. அவருடைய மார்பில் சாய்ந்து கொண்டு சொல்லவேண்டும்.. அவரை அணைத்துக் கொண்டு சொல்லவேண்டும்.. சொல்லும்போது அவர் அடையும் சந்தோஷத்தை கண்டு ரசித்துக்கொண்டே சொல்லவேண்டும்..!! பொறுமையற்றவளாய் மாலை வரை காத்திருந்தேன்.

மாலை அவர் சற்று தாமதமாகத்தான் வந்தார். விமானத்தை பிடிக்க வேண்டிய அவசரத்தில்தான் வீட்டுக்குள்ளேயே நுழைந்தார். அதோடு வேறு சில ஆபீஸ் டென்ஷன்களும் இருந்திருக்க வேண்டும். வழக்கத்தை விட அதிகமாகவே நான் செய்திருந்த அலங்காரம் அவர் கண்களுக்கு தெரியவில்லை. வழக்கத்தை விட அதிகமாகவே என் முகத்தில் பொங்கும் பூரிப்பும் அவருக்கு புரியவில்லை. விடுவிடுவென என்னை கடந்து சென்றார்.

“என்னாச்சுப்பா.. டென்ஷனா இருக்கீங்க..?”

“ஒண்ணுல்ல பவி.. ரொம்ப லேட் ஆயிடுச்சு.. உடனே கிளம்பனும்..!!”

“நீங்க சொன்னதுலாம் பேக்ல எடுத்து வச்சுட்டேன்.. எல்லாம் ரெடியா இருக்கு..”

“குட்..!! ம்ம்ம்ம்.. அப்புறம் அந்த டார்க் ப்ளூ டை இருக்குல.. அது கூட எடுத்து வச்சிடு..”

“ச..சரிங்க..”

“எல்லாம் ரெடி பண்ணு.. நான் போய் குயிக்கா ஒரு குளியல் போட்டு வந்துடறேன்..”

அவ்வளவுதான்.. பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டார். ஏக்கமும், ஏமாற்றமுமாக நான் சில வினாடிகள் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தேன். நான் கரு உருவாகியிருக்கும் சேதியை அவரிடம் சொல்லும் ஆர்வத்தில் இருக்கிறேன்.. அவரோ பரபரப்பு தொற்றிக் கொண்டவராய் பாத்ரூமுக்குள் சென்று விட்டார்..!! கிளம்பும் முன், அமைதியாக ஒரு ஐந்து நிமிடம் எனக்கு ஒதுக்கினால் கூட நிம்மதியாக சொல்லிவிடுவேன். ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. பார்க்கலாம்..!!

ஒருசில வினாடிகளிலேயே சுதாரித்துக் கொண்டேன். நானும் பரபரப்பானேன். வார்ட்ரோப் திறந்து அந்த ப்ளூ கலர் டை தேடியபோது, பெட்ரூமில் அவருடைய செல்போன் அலறுவது கேட்டது. நான் கண்டுகொள்ளவில்லை. குளித்து விட்டு வந்ததும் பேசிக் கொள்வார் என்று நினைத்தேன். டையை தேடிப்பிடித்து எடுத்து, அவருடைய ட்ராவல் பேக்கில் எடுத்து வைத்தேன். அவருடைய செல்போன் சார்ஜர் எடுத்து வைப்பதற்காக பெட்ரூம் சென்றபோது, மீண்டும் அவருடைய செல்போன் கத்தியது.

இப்போது நான் அந்த செல்போன் மீது பார்வையை வீசினேன். அவருடைய சீனியர் மேனேஜர் அந்த ஷர்மாதான் கால் செய்கிறார். ஐயையோ.. திரும்ப திரும்ப கால் செய்கிறாரே.. ஏதாவது முக்கியமான விஷயமாய் இருக்குமோ..? இவர் வேறு பாத்ரூமில் இருக்கிறார்.. என்ன செய்வது..?? நான் ஓரிரு விநாடிகள்தான் யோசித்தேன். அப்புறம், கால் அட்டன்ட் செய்து ‘அவர் பாத்ரூமில் இருக்கிறார்.. இன்னும் சிறிது நேரத்தில் திரும்ப பேசுவார்..’ என்று மட்டும் சொல்லி கட் செய்துவிடலாம் என்று நினைத்தேன். கால் பிக்கப் செய்து பேசினேன்.

“ஹ..ஹலோ மிஸ்டர் ஷர்மா.. ஹீ இஸ்..” நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

“ஹே.. பவித்ராதான இது..? நா..நான் ஷர்மா இல்ல.. ஷர்மிலி..!! என்னை ஞாபகம் இல்லையா பவித்ரா..? உங்க மேரேஜுக்கு வந்திருந்தேனே..? ஹைட்டா.. ஜீன்ஸ்.. டி-ஷர்ட்.. போட்டுட்டு..!! இப்போ ஞாபகம் வருதா..?? அசோக்..”

அதன்பிறகு அவள் பேசியது எதுவுமே என் காதில் விழவில்லை. செல்போன் என் கையில் இருந்து நழுவியிருந்தது. தாங்க முடியாத அளவுக்கு பலத்த அதிர்ச்சியை உள் வாங்கியிருந்ததில், எனது இருதயம் பதறிக் கொண்டிருந்தது..!! உடலில் இருந்த சக்தி எல்லாம் வற்றிப் போனவளாய், நான் மெத்தையில் சரிந்து விழுந்தேன்..!! Sunni Oombum Tamil Sex Story

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top