கண்ணாமூச்சி ரே ரே – 51

(Tamil New Sex Stories - Kannamoochi Rae Rae 51)

Raja 2014-07-03 Comments

“எ..என்னம்மா ஆதிரா.. இப்படி சொன்னா அப்பா என்ன செய்றது..?? ஒருவருஷம் முன்னாடி தாமிரா.. இப்போ சிபி..!! எங்களுக்குன்னு மிஞ்சி இருக்குறது நீ மட்டுந்தானம்மா..?? உன்னை பத்திரமா பாத்துக்கனும்னு இந்த அப்பா நெனைக்கக்கூடாதா..??”

“என்னை புரிஞ்சுக்கங்கப்பா.. ப்ளீஸ்..!! அந்த குறிஞ்சி எங்கிட்ட விளையாடுறா.. எங்கிட்ட இருந்து என்னவோ எதிர்பாக்குறா.. அது என்னன்னு தெரிஞ்சுக்கணும்..!! எனக்கு இன்னும் நெறைய கேள்விகளுக்கு விடை தெரியலப்பா.. அதெல்லாம் தெரிஞ்சுக்குற வரைக்கும் இங்கிருந்து நான் நகர்றதா இல்ல..!!”

“எ..என்னம்மா சொல்ற நீ..?? எனக்கு புரியல..!!”

“தாமிராவுக்கு என்னாச்சுன்னு இன்னும் சரியா தெரியலப்பா.. மணிமாறன்தான் காரணமா இல்ல குறிஞ்சியான்னு இன்னும் தெளிவா புரியல..!! ஒருவேளை குறிஞ்சியா இருந்தா.. அவ மேல அவ்வளவு நல்ல அபிப்ராயம் வச்சிருந்தவ நம்ம தாமிரா.. குறிஞ்சிக்கு நடந்த கொடுமையை இந்த உலகத்துக்கு சொல்லனும்னு நெனச்சவ.. அப்படிப்பட்ட தாமிராவை ஏன் அந்தக்குறிஞ்சி தூக்கிட்டு போகணும்..?? தங்கச்சியை தூக்கிட்டு போனவ.. நான் ஒரு கஷ்டத்துல இருக்குறப்போ என்னை ஏன் வந்து காப்பாத்தணும்..?? என்னை காப்பாத்தினவ.. அடுத்தநாளே என் புருஷனை ஏன் தூக்கிட்டு போகணும்..??”

“………………………….”

“எனக்கு எதுவும் புரியலப்பா.. எதுவும் புரியல..!! எவ்வளவோ யோசிச்சும் இந்த கேள்விக்குலாம்..”

சொன்னதை முடிக்காமலே பட்டென பாதியில் நிறுத்தினாள் ஆதிரா.. அவளுடைய மூளை திடீரென எதையோ கூர்மையாக யோசிக்க ஆரம்பித்தது..!! இரண்டு நாட்களுக்கு முன்பாக, இதே மாதிரியான ஒருகேள்வியை அவள் கேட்டபோது, அதற்கு செம்பியன் சொன்ன பதில் இப்போது ஞாபகத்துக்கு வந்தது..!!

“இதுதான் பேய், இப்படித்தான் ஆவிகள்’னு.. நம்மால அவ்வளவு ஈசியா எந்த முடிவுக்கும் வந்துட முடியாது..!! மனுஷங்களோட மனநிலைமை, குணாதிசயம், நியாயதர்மம்லாம்.. ஆவிகளுக்கு பொருந்தாது ஆதிரா.. அதனாலத்தான் அதை அமானுஷ்ய சக்தின்னு சொல்றோம்..!! பேய்ங்க எந்த நேரத்துல எதை நெனைக்கும், என்ன பண்ணும்னு.. எப்படி நம்மால உறுதியா சொல்ல முடியும்..?? ஆவிகளோட நியாயம் அதுகளுக்குத்தான் புரியும்.. நாம புரிஞ்சுக்கணும்னு நெனைச்சா.. அது ரொம்ப கஷ்டம்..!!”

அது ஞாபகத்துக்கு வந்ததுமே ஆதிராவின் முகத்தில் ஒரு சின்ன மாற்றம்.. அத்தனை நேரம் என்ன செய்வது என்றே விளங்காமல் இருண்டு போயிருந்த அவளது முகத்தில், லேசான ஒரு வெளிச்சக் கீற்று..!! மகளின் முகமாற்றத்தை கவனித்த தணிகைநம்பி,

“என்னம்மா.. என்னாச்சு..??” என்று கேட்க, ஆதிரா என்ன நினைத்தாளோ,

“நா..நான்.. நான் செம்பியன் அங்கிளை பாக்கணும்ப்பா..!!” என்றாள். அவளது குரலில் இப்போது ஒரு புதுவித நம்பிக்கை சிறிதளவு கலந்திருந்தது.

அத்தியாயம் 23

ஆதிரா செம்பியனை உடனடியாக நேரில் சென்று பார்க்கவில்லை.. முதலில் தொலைபேசியில்தான் அவரை அழைத்து பேசினாள்..!! அவருக்கு ஏற்கனவே சிபி காணாமல் போன விஷயம் தெரிந்திருந்தது.. அதற்கான தனது வருத்தத்தை முதலில் தெரிவித்துவிட்டே, அழைப்பின் நோக்கம் பற்றி கேட்டார்..!! ஆவிகளைப் பற்றிய தனது புரிதலுக்கு உதவுமாறு ஆதிரா கேட்டுக்கொண்டாள்.. எப்படியாவது அந்த குறிஞ்சியை தேடிச்சென்று தனது கணவனை மீட்கவேண்டும் என்று சொன்னாள்..!! அதற்கு செம்பியன் சொன்ன பதில் இதுதான்..

“ஆவிகளை நாம தேடிப்போறது ரொம்ப கஷ்டம் ஆதிரா.. அதுங்கள நம்மளத்தேடி வரவைக்கிறதுதான் ஈஸியான வழி..!!”

“ஓ..!! அப்போ குறிஞ்சியை நம்மளத்தேடி வரவைக்க முடியுமா..??”

“முடியும்னுதான் நான் நம்புறேன்..!! வரவைக்கிறது மட்டும் இல்ல.. பேசவும் வைக்கலாம்.. குறிஞ்சி மனசுல என்ன நெனைச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்..!! அதுதான உனக்கு வேணும்..??”

“ஆமாம் அங்கிள்.. அதுதான் எனக்கு வேணும்..!! முடியுமா..??”

“முடியுதான்னு பாக்கலாம்.. முயற்சி செஞ்சு பாக்கலாம்..!!”

“எப்படி..??”

“சொல்றேன்..!!”

ஆவியை நேரில் வரவைத்து பேசுகிற ஒரு முறையைப்பற்றி செம்பியன் தொலைபேசியிலேயே ஆதிராவுக்கு விளக்கினார்.. அந்தமுறையில் தனக்கு இருக்கிற அனுபவத்தையும், நம்பிக்கையையும் பற்றி சொன்னார்.. ஆதிராவுக்கு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் அதை முயன்று பார்க்கலாம் என்று தெரிவித்தார்..!! அவர் விளக்கி சொன்னவிதம் ஆதிராவுக்கு நம்பிக்கையையும், திருப்தியையும் கொடுத்திருந்தது.. உடனே சம்மதித்தாள்.. தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு, தொலைபேசி அழைப்பை துண்டித்தாள்..!!

அன்று மாலை..!! ஆதிராவின் வீட்டிலிருந்து முகிலனின் குடும்பத்தினர் கிளம்பி சென்றிருந்தனர்.. ஃபேக்டரியில் ஏதோ பிரச்சினை என்று திரவியமும் கழன்றுகொண்டிருந்தார்..!! நீண்டநேர இறுக்கத்தை தாங்கமுடியாமல் தென்றலும், கதிருமே வெளியே சென்றிருக்க.. வீட்டில் இப்போது ஆதிரா, தணிகைநம்பி, வனக்கொடி மட்டுமே..!!

அந்த சமயத்தில்தான் செம்பியன் ஆதிராவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.. அவருடைய தோளில் பழுப்பு நிறத்தில் ஒரு பெரிய தோல்ப்பை..!! ஆதிராவும், தணிகை நம்பியும் அவரை வரவேற்று பேசினார்..!! செம்பியன் வீட்டை கொஞ்சம் சுற்றிப்பார்த்தார்.. ஒருசில ஏற்பாடுகளைப் பற்றியும், தேவைப்படக்கூடிய பொருட்களைப் பற்றியும், எல்லோரும் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப் பற்றியும் பேசினார்..!!

“ரூம்ல சுத்தமா வெளிச்சம் இருக்கக்கூடாது.. ஆனா காத்தோட்டம் கொஞ்சம் இருக்கணும்..!! அந்த சீக்ரட் ரூம்தான் சரியா இருக்கும்னு நெனைக்கிறேன்.. அங்கேயே வச்சுக்கலாம்..!!”

“சரி ஸார்..!!”

“குண்டூசி கீழ விழுந்தாக்கூட சத்தம் கேக்குற மாதிரி.. அவ்வளவு அமைதியா இருக்கணும்..!! இந்த ரூம்ல இருந்து வர்ற சத்தம்கூட அந்த ரூம்ல கேட்க கூடாது..!! ஃபேன்லாம் ஆஃப் பண்ணிடுங்க.. அந்த வால்-க்ளாக்க ஸ்டாப் பண்ணிடுங்க.. டெலிஃபோன் லைனை கொஞ்சநேரம் கட் பண்ணி வைங்க.. செல்ஃபோன்லாம் ஸ்விட்ச்ஆஃப் பண்ணிடுங்க..!!”

“ம்ம்..!!”

“மெழுகுவர்த்தி வேணும்னு சொல்லிருந்தேன்.. வாங்கி வச்சிருக்கிங்களா..??”

“ம்ம்.. வாங்கியாச்சு..!!” சொன்ன தணிகைநம்பி தொடர்ந்து,

“நா..நானும் கூட இருக்கலாமா..??” என்று செம்பியனை கேட்டார்.

“இல்ல வேணாம்.. ஆதிரா மட்டும் போதும்..!! ஆளுங்க அதிகமானா ஆவிகளை வரவைக்கிறது கஷ்டம்..!!” என்ற செம்பியன் ஆதிராவிடம் திரும்பி,

“பால், காபின்னு ஏதாவது குடிச்சியாம்மா..??” என்று கேட்டார். Kundi Nakkum Tamil New Sex Stories

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top