கண்ணாமூச்சி ரே ரே – 48

(Tamil New Sex Stories - Kannamoochi Rae Rae 48)

Raja 2014-06-28 Comments

“ஒருநிமிஷம் இருங்க.. வந்துடுறேன்..!!”

என்றுவிட்டு மீண்டும் அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டார்.. தனக்கு கீழ் வேலை பார்க்கும் காவலர்களுக்கும், பொக்லைன் இயந்திரத்தை இயக்க வந்திருப்பவர்களுக்கும், மேலும் சில கட்டளைகளை பிறப்பித்தார்..!! அவர் சொன்ன ஒருநிமிடம் முடிவதற்கு முன்பாகவே.. ஆதிராவையும், சிபியையும் வந்து அணுகினார்..!!

“வாங்க.. உள்ள போய் பேசலாம்..!!”

வில்லாளன் இருவரையும் வீட்டுக்குள் அழைத்து சென்றார்.. மூவரும் ஹாலுக்குள் பிரவேசித்து உள்ளே நடந்தனர்..!! இடப்புறமாக தெரிந்த அந்த அறைவாசலை அடைந்ததும்..

“நீங்க இங்கயே இருங்க.. அவங்கட்ட தனியா பேசணும்..!!”

என்று சிபியை அறை வாசலிலேயே தடுத்து நிறுத்தினார் வில்லாளன்.. ஆதிராவை மட்டும் அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார்..!! அறைக்குள் வேறு யாரும் இல்லை.. வாசலில் மட்டும் சிபியோடு சேர்த்து இன்னும் இரண்டு காவலர்கள்..!! உள்ளே சென்றவர்கள் எதிரெதிர் நாற்காலியில் அமர்ந்துகொண்டனர்.. வில்லாளன் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக விஷயத்திற்கு வந்தார்.. விசாரணையை ஆரம்பித்தார்..!!

“ஆர் யூ ஆல்ரைட் நவ்..??” ஆரம்பத்தில் ஒரு சம்பிரதாய கேள்வி.

“ம்ம்.. ஐ’ம் ஓகே நவ்..!!” ஆதிரா உலர்ந்துபோன குரலில் சொன்னாள்.

“ஹ்ம்ம்.. காலைல நீங்க போன்ல சொன்னதுல, நெறைய விஷயம் எனக்கு சுத்தமா புரியலைங்க.. சரி ஏதோ கொழப்பத்துல இருக்கிங்க போலன்னு விட்டுட்டேன்..!! எனக்கு இன்னும் நெறைய டவுட்டு இருக்கு.. அதான் இப்போ நேர்லயே பாத்து பேசிறலாம்னு ஆள்விட்டு வரச்சொன்னேன்..!! இப்போ கேக்கலாமா..??”

“ம்ம்.. கேளுங்க..!!”

“மொதல்ல.. அந்தாளு எப்படி உங்களை மயக்கமாக்குனான்..??”

“கைல ஏதோ ஸ்ப்ரே வச்சிருந்தாரு..!!”

“ஹ்ம்ம்.. மயக்கமாக்கியாச்சு.. வீட்டுக்கு தூக்கிட்டு வந்தாச்சு.. கட்டிப்போட்டாச்சு.. அந்த சீக்ரட் ரூமுக்கு கூட்டுப்போயாச்சு.. கைல கத்தியை எடுத்துக்கிட்டு உங்களை..”

“கத்தி இல்ல.. உளி..!!”

“ஓகே.. கைல உளியை எடுத்துக்கிட்டு உங்களை ஹர்ட் பண்ணவந்திருக்கான்.. கரெக்டா..??”

“ம்ம்.. கரெக்ட்..!!”

“அந்தமாதிரி அவ்வளவு வசமா அவன்கிட்ட மாட்டிக்கிட்டிங்க சரி.. அப்புறம் எப்படி தப்பிச்சிங்க..?? யார் ஹெல்ப் பண்ணா..??”

“அதான் காலைலயே சொன்னனே.. கு..குறிஞ்சிதான் வந்து என்னை காப்பாத்தினா..!!”

“ப்ச்..!!!!”

ஆதிராவின் பதிலைக்கேட்டு உடனடியாக ஒரு சலிப்பை உதிர்த்த வில்லாளன்.. குரலில் ஒரு கடுமையை கூட்டிக்கொண்டு தொடர்ந்து பேசினார்..!!

“இங்க பாருங்க ஆதிரா.. இந்த ஊர்க்காரய்ங்களுக்கு இனிமேயாவது நல்லபுத்தி வரப்போகுதுன்னு, நான்லாம் சந்தோஷமா நெனச்சிக்கிட்டு இருக்கேன்.. நீங்க கூடக்கொஞ்சம் அவய்ங்களை கிறுக்கய்ங்களாக்கிறாதிங்க..!! குறிஞ்சின்லாம் யாருங்கெடையாது.. எல்லாத்தையும் பண்ணிட்டு இருந்தது இந்த சைக்கோப்பயதான்..!! சொல்லுங்க.. என்ன நடந்துச்சுன்னு எதையும் மறைக்காம சொல்லுங்க..!!”

“நடந்ததைத்தான் சொல்லிட்டு இருக்கேன் ஸார்..!!” Sunni Oombum Tamil New Sex Stories

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top