நெஞ்சோடு கலந்திடு – 17

(Tamil Kamaveri - Nenjodu Kalanthidu 17)

Raja 2014-01-17 Comments

1

இன்னும் ஒரே நிமிடம்தான்..!! சென்னை அணி ஐந்து பாயிண்டுகள் அதிகமாக இருந்தது..!! அந்த அணி வெல்லப் போவது உறுதி என்று ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆராவாரம் செய்துகொண்டிருந்தனர். அப்போதுதான் அது நடந்தது..!!

திவ்யாவின் கையில் பந்து கிடைக்க, அவள் எதிர் அணியின் போஸ்ட் நோக்கி நகர்ந்தாள். அவளை கோவை அணியின் கேப்டன் அந்த டார்ஜான் இரு கைகள் விரித்து வழி மறித்தாள். அவளிடம் இருந்து அழகாக தப்பித்த திவ்யா மேலும் முன்னேற.. எதிரணி கேப்டன் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றாள். அதற்குள் திவ்யா கூடையை நெருங்கியிருக்க, வேகமாக அவள் பின்னால் ஓடிவந்த அந்தப்பெண் திவ்யாவின் முதுகைப் பிடித்து அப்படியே அதிக பலத்துடன் தள்ளிவிட்டாள்.

திவ்யா தடுமாறிப் போனாள். பந்து அவளுடைய கையை விட்டு எங்கோ பறந்து சென்றது. அவளுடைய ஷூ கால்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ள.. பேலன்ஸ் செய்ய இயலாமல்.. ஓடியவாக்கிலே சென்று.. பேக்போர்ட் போஸ்டிலேயே போய் ‘நச்ச்..!!’ என்று மோதினாள்..!! அவளுடய நெற்றி போஸ்ட்டில் சென்று முட்டியது. முட்டிய வேகத்தில் திவ்யா, மூச்சு பேச்சு இல்லாமல்.. ‘சொத்த்த்..!!’ என்று தரையில் விழுந்தாள்..!!

அவ்வளவுதான்..!! மொத்த கூட்டமும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனது..!! யாரோ ஒரு பெண் மட்டும் ‘ஓஓஓஓஓவ்வ்வ்..!!’ என்று பெரிதாக அலறினாள்..!! அசோக் நடந்ததை நம்பமுடியாதவனாய்.. பதறிப்போய் எழுந்தான்..!! திவ்யாவுடைய அணித்தோழிகள் அவளை நோக்கி ஓட.. அசோக் கேலரியை விட்டு குதித்து இறங்கினான்..!!

“திவ்யா…!!!” அசோக்கின் அலறல் தனியாக ஒலித்தது.

அதற்குள் திவ்யாவின் தோழிகள் அவளை சூழ்ந்திருக்க, அசோக் அவர்களை விலக்கிக்கொண்டு உள்ளே புகுந்தான். தரையில் வீழ்ந்து கிடந்த தன் தேவதையை கைகளில் அள்ளி எடுத்தான். திவ்யா மயங்கிப் போயிருந்தாள். அவளுடைய நெற்றி உடைந்து உதிரத்தை கொப்பளிக்க ஆரம்பித்திருந்தது.

“திவ்யா.. திவ்யா.. கண்ணைத் தொறந்து பாரு திவ்யா..”

அசோக் அவளுடைய கன்னத்தில் ‘பட் பட் பட்’ என தட்டினான். அதற்குள் இப்போது அந்த அஞ்சுவும் ஓடி வந்து அவளை இன்னொரு பக்கமாக தாங்கி பிடித்தாள். தனது காதல் மகாராணி.. தன் கைகளிலே.. நெற்றியில் குருதி ஓட… இமைகள் மூடிய விழிகளோடு.. பரிதாபமாய் கிடக்க.. அசோக்குடைய இதயம் இப்போது வெடித்து விடும்போல் வலித்தது.. அவனையும் அறியாமல் அவனது கண்கள் உடைப்பெடுத்து நீரை கொட்ட ஆரம்பித்தன..!! ‘திவ்யா.. திவ்யா..’ என அழுது அரற்றினான்..!! அந்த அஞ்சு இப்போது நிமிர்ந்து அசோக்கை பாவமாக பார்த்தாள்..!!

யாரோ முகத்தில் நீரை தெளிக்க, திவ்யாவின் மயக்கம் தெளிந்தது. இமைகளை மெல்லப் பிரித்தாள்..!! மயக்கம் தெளிந்து எழுந்ததுமே.. ‘எனக்கு ஒன்னும் இல்ல.. ஐ ஆம் ஆல்ரைட்.. ஐ கேன் ப்ளே..’ என்று, நெற்றியில் ரத்தத்துடன் எழ முற்பட்ட திவ்யாவை பார்த்து அசோக்கிற்கு அழுகை இன்னும் பீறிட்டது..!! அழுதான்..!! அதற்குள் அவளுடைய கோச் வந்து.. அவளை தட்டிக் கொடுத்தார்..!!

“இல்லம்மா.. நீ வெளையாண்டது போதும்.. இன்னும் ஒரு நிமிஷம்தான் இருக்கு..!!” என்றார்.

நல்லவேளையாக அவர்கள் கல்லூரியின் மருத்துவர் அங்கேதான் இருந்தார். அவர் வந்து முதலுதவி செய்தார். ‘ஒண்ணுல்ல.. சின்ன அடிதான்..’ என்று அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவாறே, அவளுடைய காயத்தை சுத்தம் செய்து, பிளாஸ்திரி போட்டார்..!!

அந்தப்பக்கம் இரண்டு அணிகளின் கோச்சுகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்புறம் அந்த டார்ஜான் பெண்ணுக்கு வார்னிங் கொடுத்தார்கள். அவளை வெளியேற்றிவிட்டு வேறொரு பெண்ணை சேர்த்துக் கொண்டு.. ஆட்டத்தை தொடர்ந்தார்கள். அசோக்குடைய தோளில் ஆதரவாய் சாய்ந்தவாறே திவ்யா மீதி ஆட்டத்தை பார்த்தாள். அதற்கு மேல் நடந்த ஒருநிமிட ஆட்டத்தில் எந்த அணியும் ஸ்கோர் செய்யாமல் போக.. சென்னை அணி வென்றது..!!

அந்த வெற்றியை மொத்த கும்பலும் ஆரவாரம் செய்து கொண்டாடியது..!! யாராரோ வந்து திவ்யாவின் கையை குலுக்கி பாராட்டினார்கள்..!! திவ்யாவின் கோச் அவளுடய தலையை தடவிக்கொடுத்து வாழ்த்தினார்.. பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தார்..!! பார்த்தவர்..

“சரிம்மா.. நீ ரொம்ப நேரம் இங்க இருக்க வேணாம்.. ஆளாளுக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்பாங்க.. நீ வீட்டுக்கு கெளம்பு.. போய் நல்ல ரெஸ்ட் எடு..!! எதுக்கும் நாளைக்கு ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துக்கோ.. பில் க்ளெயிம் பண்ணிக்கலாம்.. சரியா..?” என்றார். Koothi Tamil Kamaveri

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top