நெஞ்சோடு கலந்திடு – 30

(Tamil Kama Stories - Nenjodu Kalanthidu 30)

Raja 2014-01-31 Comments

சித்ராவும் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டாள். அவளுக்கு நிறைய விஷயங்கள் புதிதாக தோன்றின. செல்வா சொல்ல சொல்ல.. அசோக் திவ்யாவின் மீது கொண்டுள்ள காதலின் தீவிரம் அவளுக்கு முழுமையாக புரிய ஆரம்பித்தது..!!

சித்ரா மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது கார்த்திக் திரும்பியிருந்தான். ஆனால் திவ்யா இரவு உணவு கூட உண்ணாமல், அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ‘செய்வதை எல்லாம் செய்துவிட்டு.. நிம்மதியாக உறங்குவதை பார்..’ என்று சித்ரா திவ்யாவை மனதுக்குள் திட்டினாள். அடுத்த நாள் காலையிலும் திவ்யா சீக்கிரமே எழுந்து காலேஜுக்கு ஓடிவிட்டாள்.

அன்று மாலை.. சீக்கிரமே திவ்யா வீட்டுக்கு திரும்பிவிட்டாள். அவள் காலிங் பெல் அடித்தபோது, சித்ராதான் சென்று கதவு திறந்து விட்டாள். திறந்துவிட்டவள் அவளையே முறைத்து பார்க்க, அவளோ அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அவளுடைய அறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டாள்.

திவ்யா உள்ளே சென்றதும், சித்ரா இந்தப்பக்கம் குட்டி போட்ட பூனை மாதிரி இங்கும் அங்கும் அலைந்தாள். அடிக்கடி திவ்யாவின் அறையையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டாள். அவள் மனதில் பல்வேறு குழப்பங்கள். எல்லாம் நன்றாக நடக்கவேண்டுமே என்ற பயம் வேறு..!! கொஞ்ச நேரம் அந்த மாதிரி அவஸ்தையாக அலைந்தவள், அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. திவ்யாவின் அறையை நோக்கி நடந்தாள். அறையை நெருங்கியவள் கதவை ‘லொட்.. லொட்..’ என்று தட்டினாள்.

வெளியே செல்வதற்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்த திவ்யா, அசுவாரசியமாய் திரும்பி பார்த்தாள். வாசலில் சித்ரா நிற்பதைக் கண்டதும் அப்படியே அதிர்ச்சியில் திகைத்து போனாள். சித்ரா இந்த மாதிரி திவ்யாவின் அறை வாசலில் வந்து நிற்பது இதுவே முதல் முறை. அதுதான் திவ்யாவிடம் அப்படி ஒரு திகைப்பு..!!

திவ்யா அந்த மாதிரி திகைத்துக் கொண்டிருக்கும்போதே.. சித்ரா பதினைந்து வருடங்களுக்கு அப்புறமாக.. திவ்யாவின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து.. தன் வாய் திறந்து.. பேச ஆரம்பித்தாள்..!!

“எ..எனக்கு.. உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் திவ்யா..!!” Jatti Tamil Kama Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top