மலரே என்னிடம் மயங்காதே – 4

(Tamil Hot Sex Stories - Malarae Ennidam Mayangathae 4)

Raja 2014-02-13 Comments

“சாயந்திரம் சரக்கு உன் செலவு..”

“அடப்பாவி..!! இதுக்குலாம் சரக்கு கொஞ்சம் ஓவர் அசோக்கு.. வேணுனா அந்த O.T காசுக்கு ஒரு போட்டி வாங்கித்தர்றேன்..!! நல்லா துன்னு…!!”

“ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா….!!” O.T, போட்டி என்று பன்னீர் ரைமிங்கில் பேச.. நான் வாய்விட்டு சிரித்தேன்.

பன்னீர் எப்போதும் இப்படித்தான்..!! நான் மனம் சோர்வடையும் போதெல்லாம் இப்படி ஏதாவது பேசி என் மனதை இலகுவாக்குவார். எனக்கும் அவருக்கும் அவ்வளவு அன்னியோன்யம். எட்டு வருட நட்பு எங்களுடையது..!! அவர் என்னிடம் பேசிவிட்டு வெளியேறியதும், என் மனதில் இருந்த ஒருவித இறுக்கம் வெகுவாக குறைந்திருந்தது. சற்று முன் திட்டிய மணியை கூட என் கேபினுக்கு வரவழைத்து, என் கோபத்தை வெளிப்படுத்திய விதத்துக்காக மன்னிப்பு கேட்டேன். அவனும் நெகிழ்ந்து போனான்.

சரியாக ஆறு மணிக்கு பன்னீர் என் ரூமுக்குள் எட்டிப் பார்த்து, வெளியில் காத்திருப்பதாக சொன்னார். நான் அதன் பிறகு ஒரு பதினைந்து நிமிடம் கழித்து கிளம்பினேன். காரை எடுத்துக் கொண்டு, காத்திருந்த பன்னீரை பிக்கப் செய்து கொண்டேன். பத்தே நிமிடத்தில் விஜய நகரை அடைந்தோம். பஸ் ஸ்டாண்டுக்கு அருகிலேயே இருக்கும் ஒரு சுமாரான பாருக்குள் புகுந்து கொண்டோம்.

பன்னீர் இரண்டு குவார்ட்டர் ஜானெக்ஷா வாங்கிக் கொண்டு வந்தார். அவருக்கு போட்டி சொல்லிக் கொண்டார். நான் சிப்ஸ் வாங்கிக் கொண்டேன். ஆரம்பித்தோம்..!! முதல் ரவுண்டில் கம்பெனி விஷயங்களை பேசிக் கொண்டிருந்தவர், இரண்டாவது ரவுண்டின் போதுதான் அவர் சொல்ல நினைத்த மேட்டருக்கு வந்தார். பிளாஸ்டிக் கப்பில் இருந்த மொத்த பிராண்டியையும், நான் ஒரே மூச்சில் தொண்டைக்குள் ஊற்ற.. என்னையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தவர், சற்றே இறுக்கமான குரலில் சொன்னார்.

“ம்ம்ம்.. நல்லா உள்ள ஊத்து.. அப்டியாவது உள்ள இருக்குற உன் பொண்டாட்டி நெனைப்புலாம் பொசுங்குதான்னு பாக்கலாம்..”

“என்ன சொல்ற நீ..??” நான் சிப்ஸ் கடித்துக் கொண்டே குழப்பமாய் கேட்டேன்.

“இல்ல.. பொண்டாட்டி போன சோகத்துலதான.. போற வாறவன் மேலலாம் வுழுந்து புடுங்குற..? அதை சொன்னேன்..”

நான் சில வினாடிகள் அமைதியாக அவரையே பார்த்தேன். அப்புறம் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டு, குபுகுபுவென புகை விட்டவாறே சொன்னேன்.

“இங்க பாரு பன்னீர்… நான் இன்னைக்கு கொஞ்சம் டென்ஷனாகி அந்த மணியை திட்டிட்டேன்.. தப்புதான்..!! இனிமே இந்த மாதிரி நடக்காம பாத்துக்குறேன்..!! ஆனா.. என் பொண்டாட்டியை நான் மறக்குறதுலாம்.. இந்த ஜென்மத்துல நடக்காது பன்னீர்.. அதை நீ புரிஞ்சுக்கோ..!!”

“எப்படி நடக்கும்.. இல்ல.. எப்படி நடக்கும்னு கேக்குறேன்..?? நீ கொஞ்சமாவது அவளை மறக்க முயற்சி செஞ்சாதான நடக்கும்..? திரும்ப திரும்ப அதையே நெனச்சுட்டு இருந்தா..??”

“எப்படி நெனைக்காம இருக்க சொல்ற..? உனக்கு தெரியாது பன்னீர்.. நான் அவ மேல..”

“எல்லாம் எனக்கு தெரியும் அசோக்கு..!! ஆனா.. அவளே போனப்புறம்.. இன்னும் அவளையே நெனச்சுக்கிட்டு.. நீ உன் வாழ்க்கையை பாழாக்கிக்கிறது சரி கிடையாது..!!”

“என்ன பண்ண சொல்ற என்னை நீ..?”

“நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ.. அதுதான் சரி.. இன்னொரு பொண்ணு வந்தாதான்.. உன் பொண்டாட்டி நெனைப்பு உன்னை விட்டு போகும்..!!”

“ஹாஹா..!! உனக்கு இன்னும் புரியலை பன்னீர்..!! கயலை தவிர வேற எந்த பொண்ணோட நெனைப்பும் எனக்கு தேவையில்லை..!! அவ எடத்துல வேறொருத்தியை வச்சு பாக்க.. சத்தியமா என்னால முடியாது..!! வேற ஏதாவது யோசனை இருந்தா சொல்லு..!!”

அவர் அவ்வளவு சொல்லியும் நான் பிடிவாதமாக இருக்க, பன்னீர் டென்ஷன் ஆனார். குரலை உயர்த்தி கத்தினார்.

“டேய்.. ஏண்டா இப்படி இருக்குற..? சொல்றது புரியலையா உனக்கு..??”

“எதுக்கு இப்போ கத்துற..?”

“பின்ன என்ன..? அவன் அவன் பொண்டாட்டி உசுரோட இருக்குறப்போவே நாலஞ்சு வச்சுக்கிட்டு சுத்துறானுக.. உனக்கு என்ன வந்தது..?”

“எவன் வேணா எப்படி வேணா இருந்துட்டு போகட்டும்.. என்னையும் அப்படி இருக்க சொல்லாத..!!”

“அப்போ நான் சொல்றதை கேக்க மாட்ட..? என் வார்த்தைக்கு அவ்ளோதான் மதிப்பு..??”

பன்னீர் அப்படி கோபமாக கேட்டதும், நான் பட்டென்று அமைதியானேன். அவருடைய கண்களையே கொஞ்ச நேரம் கூர்மையாக பார்த்தேன். அப்புறம் என் குரலை இலகுவாக்கிக் கொண்டு, சற்றே கேலியான குரலில் கேட்டேன்.

“சரி.. நான் ஒரு கேள்வி கேக்குறேன்..!! அதுக்கு நீ பதில் சொல்றியா..?”

“என்ன..?” அவர் டென்ஷன் குறையாமலே கேட்டார்.

“உனக்கும் சின்ன வயசுலேயே.. உன் பொண்டாட்டி உன்னை விட்டு போயிட்டாங்கள்ல..? நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல..?”

அவ்வளவுதான்..!! பன்னீர் அந்த கேள்வியை சற்றும் எதிர் பார்த்திருக்க மாட்டார் என்று தோன்றியது. அதிர்ந்து போனார். விழிகளை விரித்து ஒரு மாதிரி வித்தியாசமாக பார்த்தார். தடுமாற்றமான குரலில்..

“அ..அது.. அது…” திணறினார்.

“ம்ம்ம்.. சொல்லு..”

“இங்க பாரு அசோக்கு.. அத வேற.. இது வேற..”

“என்ன வேற வேற..??”

“என் பொண்டாட்டி என்னை விட்டு போறப்போ.. நான் ரெண்டு கொழந்தைக்கு அப்பா..”

“இருந்தா என்ன..? அப்போ உனக்கும் என் வயசுதான இருக்கும்..? நீ நெனச்சிருந்தா.. இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிருந்திருக்கலாம்ல..? உனக்கு என்ன பொண்ணா கெடைச்சிருக்காது..? ஏன் பண்ணிக்கலை..?”

“இன்னொரு கல்யாணம் பத்திலாம் நான் நெனச்சு பாத்தது இல்ல அசோக்கு.. அதுக்கு காரணம்லாம் இல்ல..”

“காரணம் இருக்கு பன்னீர்.. எனக்கு தெரியும்..!!”

“என்ன..?”

“என்னை மாதிரி.. உனக்கும் உன் பொண்டாட்டி மேல அவ்ளோ பாசம்.. அவங்க நெனைப்பு இப்போவும் உன் மனசுல இருக்குறது எனக்கு தெரியும்..!!”

“அ..அசோக்கு .. நான் சொல்ல வர்றதை..”

“உனக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா பன்னீர்..??”

நான் ஆணித்தரமாக கேட்க அவர் சோர்ந்து போனார். என் வார்த்தைகளில் இருந்த உண்மை அவருடைய மனசாட்சியை சுட்டிருக்கும். அவரால் பேச முடியவில்லை. ஒரு மாதிரி பரிதாபமாக என்னையே பார்த்தார். இறந்து போன அவர் மனைவியின் நினைவை, நான் இப்போது கிளறி விட்டுவிட்டேன் என்று தோன்றியது. அந்த நினைவில்தான் இப்போது தத்தளிக்கிறார் என்று எனக்கு புரிந்தது. இப்போது நான் அவருக்கு ஆறுதலான குரலில் சொன்னேன்.

“பன்னீர்.. நான் உன்னை கஷ்டப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. நீ என்னை புரிஞ்சுக்கணும்னுதான் சொன்னேன்..”

“பரவால வுடு..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்… என் வாழ்க்கைதான் எப்படியோ போயிடுச்சு.. உன் வாழ்க்கை இப்படி சந்தோஷம் இல்லாம இருக்குறது எனக்கு புடிக்கலை அசோக்கு.. அதான் அப்படிலாம் பேசிப்புட்டேன்..!! என்னை மன்னிச்சுடு..!!”

“ஹையோ.. இப்போ நான் சந்தோஷமா இல்லைன்னு யார் சொன்னா..? நான் சந்தோஷமாத்தான் இருக்குறேன் பன்னீர்..!! எனக்கு என்ன கொறைச்சல்..? நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்..!!”

நான் முகத்தை மலர்ச்சியாய் வைத்துக் கொண்டு, உற்சாகமான குரலில் படபடவென சொன்னேன். சொல்லிவிட்டு பன்னீரை பார்த்து அழகாக புன்னகைத்தேன். அவர் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் என்னையே பார்த்தார். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் உதட்டில் மெலிதாக ஒரு புன்னகையை கசியவிட்டவாறு, சற்றே எள்ளலான குரலில் சொன்னார்.

“நீ பொய் சொல்றேன்னு எனக்கு தெரியும் அசோக்.. ரொம்பலாம் நடிக்காத..!!”

சொல்லிவிட்டு, அவர் என்னை கண்டு கொள்ளாமல் ப்ராண்டியை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தார். எனது முகம் இப்போது பட்டென மலர்ச்சியை இழந்தது. உதட்டில் இருந்த புன்னகை சென்ற இடம் தெரியாமல் போயிருந்தது. அவருடைய வார்த்தைகளில் இருந்த உண்மை இப்போது எனது மனசாட்சியை சுட்டது..!! நீரை கொட்டலாமா என எனது விழிகள் ரெடியாயின..!!

அப்புறம் நானும் பன்னீரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக மிச்சமிருந்த பிராண்டியை குடித்து முடித்தோம். பன்னீர் தெளிவாக இருந்தார். எனக்குத்தான் கொஞ்சம் ஓவர் ஆகிவிட்டது. தள்ளாடினேன். காரை ஓட்டுவதாக சொன்ன என்னிடம் இருந்து சாவியை அவர் பிடுங்கிக் கொண்டார். நான் அருகில் அமர்ந்திருக்க, அவரே கார் ஓட்டினார். பள்ளிக்கரணை நோக்கி கார் சீரான வேகத்தில் சீறியது..!! Koothi Tamil Hot Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top