ஐ ஹேட் யூ பட் – 21

(Tamil Hot Sex Stories - I Hate U But 21)

Raja 2013-10-19 Comments

“ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..??”

“ம்ம்.. சொல்லுங்க தம்பி..!!”

“நெறைய நகை கேக்குறவன் நல்ல மாப்பிள்ளை இல்லைங்க.. உங்ககிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதவன்தான் நல்ல மாப்பிளை..!!”

அசோக் சொன்ன வார்த்தைகளில் இருந்த கூர்மையில் வரதராஜன் ஒருகணம் திகைத்தார். அந்த வார்த்தைகளின் உள் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள முனைந்தார். அப்புறம் சற்றே மனத் தெளிவடைந்தவராய் அசோக்கை ஏறிட்டு, புன்னகையும் பெருமிதமுமாக பார்த்தார். அவனுடைய முதுகை இதமாக தடவி..

“புரியுது தம்பி..!! உங்களை சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்..!!” என்றார்.

“சரி ஸார்..!! எனக்கு நேரம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!! மொதல்ல இந்த தாலிச்சரடை கொண்டு போய் வீட்ல பத்திரமா வைங்க..!! கவலைப்படாதீங்க.. உங்க பொண்ணுக்கு.. உங்ககிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்காத.. நெஜமான நல்ல மாப்பிள்ளை கெடைப்பான்..!!”

சொல்லிவிட்டு அசோக் திரும்பி நடந்தான். தனது பைக்கில் ஏறி அமர்ந்தான். வண்டியை ஸ்டார்ட் செய்ய போகும்போதுதான், அவ்வளவு நேரமாய் தன் மனதில் குறுகுறுத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை வரதராஜனிடம் திரும்பி சொன்னான்.

“உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கு ஸார் எனக்கு.. ஆனா.. எங்கன்னுதான் ஞாபகம் வரலை..!!”

“ஹாஹா.. அப்படியா..?? நான் உங்களை எங்கயும் பாத்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லயே..!!”

“ஹ்ம்ம்.. உங்களுக்கு சொந்த ஊர் மதுரைப்பக்கமா..??”

“இல்ல தம்பி.. கிருஷ்ணகிரி.. இங்க வந்து ரொம்ப வருஷம் ஆச்சு..!!”

“ஓ.. ஓகே ஓகே..!! சரி ஸார்.. பாக்கலாம்..!!”

அசோக் வண்டியை கிளப்பினான். ஒரு யு டர்ன் அடித்து திருப்பினான். ‘எங்கே பார்த்திருக்கிறோம் இவரை..??’ என்று சில வினாடிகள் யோசனையுடனே வண்டியை செலுத்தினான். அப்புறந்தான் பேக்கரியில் தனியாக விட்டு வந்த செண்பகம் ஞாபகத்துக்கு வந்தாள். உடனே ஆக்சிலரேட்டரை முறுக்கி வண்டியை ஸ்பீடாக விரட்டினான்.

வரதராஜனை அசோக் பார்த்திருக்கிறான். ப்ரியாவின் பர்சனல் ஃபோட்டோக்களை பார்வையிடுகையில் அதில் ஒரு ஃபோட்டோவில் அவரை பார்த்திருக்கிறான். ஆனால் அது சில வருடங்களுக்கு முன்பு எடுத்த போட்டோ. அதில் கருகருவென நிறைய இருந்த அவரது தலைமுடி, இப்போது வெளுத்துப் போய் வெகுவாக குறைந்து போயிருந்தது. அதனால்தான் அவனுடைய மனதுக்கு சரியாக அவர் பிடிபடவில்லை.

அசோக் பேக்கரியை அடைந்தபோது.. செண்பகம் முகமெல்லாம் வியர்த்து வடிந்து போய் பதற்றமாக காணப்பட்டாள்..!! படபடக்கும் இதயத்துடன் இவனை காணாமல் தவித்துக் கொண்டிருந்தவள்.. இவனை பார்த்ததுமே ‘அப்பாடா..!!!’ என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்..!! ஆனால்.. அடுத்த நொடியே அவன் மீது ஒரு கோவம் வந்து மனதுக்குள் குடியேற.. கையை மடக்கி அவனுடைய புஜத்தில் ஓங்கி குத்தினாள்..!!

“ஆஆஆ..!!” அசோக் கத்தினான்.

“எங்க போயிட்டீங்க.. என்னை தனியா விட்டுட்டு..!! நான் எப்படி பயந்து போயிட்டேன் தெரியுமா..??”

“அவர் வண்டியை எடுத்துட்டு கெளம்பிட்டார்மா.. வெரட்டி புடிச்சு போய் குடுத்துட்டு வந்திருக்கேன்..!!”

“சொல்லிட்டு போறதுதான..??”

“சொல்றதுகுலாம் நேரம் இல்ல..!! ஒரு அஞ்சு நிமிஷந்தான.. அதுக்குள்ள இப்படி டர் ஆகிப்போய் உக்காந்திருக்குற..??”

“ஆமாம்.. நீங்க பாட்டுக்கு திடீர்னு காணாம போயிட்டீங்க.. பில்லுக்கு கூட பணம் குடுக்கலை..!!”

“அதான் தவுசண்ட் ருபீஸ் வச்சிருக்கேன்னு சொன்னியே.. அதை எடுத்து குடுக்குறதுதான..??” அசோக் கிண்டலாக கேட்க,

“அ..அது.. அது.. தவுசண்ட் ருபீஸ்க்கு இவன்கிட்ட சேன்ஜ் இருக்காதுல..??” செண்பகம் திக்கி திணறி சொன்னாள்.

“ப்ச்.. சேன்ஜ் இருக்காதுன்னு நீயா சொல்லிக்கிறதா..?? அவன்ட்ட குடுத்து பாத்தாத்தான தெரியும்..?? எடு அந்த தவுசண்ட் ருபீசை.. இவன்ட்ட சேன்ச் கேட்டுப் பாக்கலாம்..!!” சொல்லிக்கொண்டே அசோக் அவளுடைய கையில் இருந்த பர்ஸை பறிக்க,

“ஐயையோ.. இவன்ட்ட இருக்காது மாமா..!!” செண்பகம் பதறினாள்.

அசோக் அதற்குள்ளாகவே அவளுடைய பர்ஸை திறந்திருந்தான். பர்சுக்குள் பார்வையை வீசியவன் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளானான். உள்ளே ஒரு கசங்கிப்போன பத்து ரூபாய் நோட்டும், சில சில்லறை காசுகளும், நிறைய காற்றும் மட்டுமே இடத்தை அடைத்துக்கொண்டு இருந்தன. அதைப்பார்த்து நொந்துபோன அசோக், நிமிர்ந்து செண்பகத்தை ஏறிட்டு, அவளை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான். அவளோ கட்டைவிரலை பற்களுக்கு இடையில் வைத்து கடித்தவாறே அசடு வழிந்தாள். அசோக் அந்த பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவள் முகத்திற்கு முன்பாக ஆட்டிக்காட்டியவாறே கடுப்புடன் கேட்டான்.

“இதுதான் உங்க ஊர்ல தவுசண்ட் ருபீசா செம்பு..??”

“இ..இல்ல மாமா.. அந்த தவுசண்ட் ருபீஸ் இங்க இல்ல..!!” செண்பகம் ஏதோ சமாளிக்க முயன்றாள்.

“வேற எங்க இருக்கு..?? ஏ டி எம் மெஷினுக்குள்ளயா..??” அசோக் பற்களை கடித்தவாறே கேட்டான்.

“ஐயோ.. இல்ல மாமா.. வீட்ல இருக்கு.. எடுத்துட்டு வரலாம்னு நெனச்சேன்..!! அக்காதான்.. செலவெல்லாம் அசோக் மாமா பாத்துப்பாரு.. நீ..” செண்பகம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“வெறுங்கையை வீசிட்டு போன்னு சொன்னாங்களா..??”

“ஹ்ம்ம்..!!”

செண்பகம் சொல்லிவிட்டு கட்டைவிரலை கடிக்க, அசோக் நொந்து போனவனாய் தலையில் அடித்துக் கொண்டான். Mama Pundai Tamil Hot Sex Stories

– தொடரும்

ஐ ஹேட் யூ பட் – 21

What did you think of this story??

Comments

Scroll To Top