மாங்கல்யம் தந்துனானே – 6

(Sex Stories In Tamil - Mangalyam Thanthunanae 6)

Raja 2014-04-04 Comments

“அ..அது ஒண்ணுல்ல.. அது சும்மா..” என்று திணறினாள்.

“சொல்ல புடிக்கலைன்னா.. பரவால்ல.. வேணாம்..!!”

“அ..அப்டிலாம் ஒண்ணும் இல்ல..?”

“அப்புறம்..???”

“அ..அது…”

“சும்மா சொல்லுங்க..!!”

“நா..நான் சும்மா வெ..வெளையாட்டுக்குத்தான் சொன்னேன்.. அதை நீங்க சீரியஸா..”

“வெளையாட்டா.. சீரியசான்னு நான் டிஸைட் பண்ணிக்கிறேன்.. என்ன சொல்ல வந்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க.. ப்ளீஸ்..!!”

நான் ஒருமாதிரி கெஞ்சும் குரலில் கேட்கவும், அவள் சற்று தயங்கினாள். எச்சில் கூட்டி மிடறு விழுங்கினாள். தலையை அப்படியும் இப்படியுமாய் அசைத்தாள்.பின்னர் மெல்லிய குரலில் சொன்னாள்.

“நா..நான் அதை ஜாலியாத்தான் சொல்ல வந்தேன்.. நீங்க அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு சொன்னா.. நான் சொல்றேன்..”

“தப்பா எடுத்துக்க மாட்டேன்.. சொல்லுங்க..!!”

அவள் அப்புறமும் சில வினாடிகள் தயங்கினாள். பின்பு திக்கித் திணறும் குரலில் சொன்னாள்.

“அ..அத்தானுக்கு பொண்ணுக ப்ரண்ட்ஸ் ஜாஸ்தி.. அதான்.. அவரை கட்டிக்கிட்டா.. ஒவ்வொரு நாளும் எ..எவகூட சுத்துறாரோன்னு சொல்ல வந்தேன்..!! ஆ..ஆனா… ச..சத்தியமா.. அத்தான் அப்படிப்பட்டவர் இல்ல.. நான் எதோ தெரியாத்தனமா.. வீணாகிட்ட.. ஜாலிக்கு..”

அவள் சொல்லி முடித்தும் அவளிடம் படபடப்பு குறையவில்லை. அந்த படபடப்பு.. கைவிரல்களின் நடுக்கம்.. கண்களில் தெரிந்த மருட்சி.. அவள் இன்னும் எதையோ மறைக்கிறாள் என்று எனக்கு தோன்றியது. விடாமல் கேட்டுவிட்டேன்.

“இல்ல.. நீங்க எதையோ மறைக்கிறீங்க..”

“ம..மறைக்கிறனா..? ச்சேச்சே.. அ..அதெல்லாம் ஒண்ணும் இல்லையே.. நா..நான் எதை மறைக்கப்..” அவள் தடுமாறினாள்.

“இல்ல.. நீங்க மறைக்கிறீங்க..”

“ச..சத்தியமா இல்ல..”

“நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன்.. சொல்லுங்க ப்ளீஸ்…”

“அ..அதான் எதுவும் இல்லன்னு சொல்றேன்ல..?”

“இல்ல.. அவரலாம் எவ கட்டிக்குவா.. அப்டி இப்டின்னு..”

“அ..அதுலாம் ஒண்ணுல்ல..”

“அப்புறம் ஏன் அப்படி சொன்னீங்க..?”

நான் திரும்ப திரும்ப கேட்கவும், துருவித் துருவி துளைக்கவும், மேலும் மேலும் வற்புறுத்தவும், ஒரு கட்டத்தில் அவள் நிலை குலைந்தாள். சற்றே தடித்த குரலில், சற்றே தைரியமான குரலில், சற்றே அழுகை பொங்கும் குரலில் சொன்னாள்.

“ஆமாம்.. சொன்னேன்..!!! நான் அப்டித்தான் சொல்வேன்..!!” என்று படபடவென சொல்லி நிறுத்தியவள்,

“நா..நான் அப்டி சொல்லித்தான் என் மனசை தேத்திப்பேன்..!!” என்று பரிதாபமாக சொல்லி முடித்தாள்.

அவள் சொல்லும்போதே அவளுடைய கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. விசும்ப ஆரம்பித்தாள். துக்கத்தில் தொண்டை அடைத்தவள் போல காணப்பட்டாள். அவளுடைய உதடுகள் கிடந்து படபடவென துடிதுடித்தன. நான் சுத்தமாய் அதிர்ந்து போய் நின்றிருந்தேன். ஒருசில வினாடிகள்..!! பின்பு சுதாரித்துக்கொண்டு, படபடப்பான குரலில் சொன்னேன்.

“ஐயையோ.. எ..என்ன சுஜி நீங்க.. இ..இதுக்குப் போய்..”

அவளும் உடனே சுதாரித்துக் கொண்டாள். உடனே கண்களில் வடிந்த நீரை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். மூக்கை ஒருமுறை உறிஞ்சிக் கொண்டாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், அப்புறம் எங்கேயோ ஒரு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“எனக்கு எக்ஸாம்லாம் எதுவும் கெடையாது.. சும்மா பொய் சொன்னேன்.. அத்தானை அந்த கோலத்துல என்னால பாக்க முடியாது.. அதனாலதான் உங்க மேரேஜுக்கு நான் வரலை..!! இ..இப்ப கூட.. அத்தான் ஊர்ல இல்லைன்னு தெரிஞ்சுதான் வந்தேன்..!!”

“ம்ம்ம்..”

“சி..சின்ன வயசுல இருந்தே அத்தானை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர்தான் என் புருஷன்னு எவ்வளவோ கற்பனை..!! எ..எல்லாம் போச்சு..!!”

“ம்ம்ம்..”

“இ..இதுலாம் அத்தானுக்கே தெரியாது.. அத்தானுக்கென்ன.. யாருக்குமே தெரியாது..!! தயவு செஞ்சு.. யார்கிட்டயும் இதை சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்..!!”

“ம்ம்ம்..”

“அ..அத்தான் ரொம்ப நல்லவரு.. அவரை நல்லா பாத்துக்குங்க..!!”

சொல்லிவிட்டு அவள் விடுவிடுவென ஓடினாள். படிக்கட்டில் படபடவென இறங்கினாள். இறங்கும்போது கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே..!! நான் அசைவற்று ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன். மனசுக்குள் பலவித உணர்ச்சி அலைகள்..!!

‘சம்பந்த சம்பந்தமில்லாமல் இளித்த சுஜிக்குள் இப்படி ஒரு அழு மூஞ்சியா..?’ என்ற ஆச்சரியம்..!! ‘இவதான் உன் பொண்டாட்டி.. இவன்தான் உன் புருஷன்.. என்று பெரியவர்கள் விளையாட்டாய் சொல்வதினால் இப்படி ஒரு பின்விளைவா..?’ என்ற ஆதங்கம்..!! ‘உள்ளத்தில் இருக்கும் காதலை இப்படி ஒருவரிடமும் சொல்லக் கூட முடியாத நிலை.. ஒரு பெண்ணுக்கு ஏற்படுமா..?’ என்ற பச்சாதாபம்..!! எல்லாவற்றிகும் மேலாக.. ‘சற்றுமுன் வீணாவிடம் இவள் பேசிக்கொண்டு இருந்த போது.. அட்லீஸ்ட் இவள் ஒருத்திக்காவது என் கணவரை பிடிக்காமல் இருக்கிறதே என்ற அந்த சின்ன சந்தோஷம் குலைந்து.. இவளுக்குமா..?????’ என்ற அந்த பொசஸிவ்னஸ்..!!

நான் அசைவற்று ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன்..!!! Pundai Mudi Sex Stories In Tamil

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top