மலரே என்னிடம் மயங்காதே – 18

(Sex Stories In Tamil - Malarae Ennidam Mayangathae 18)

Raja 2014-02-28 Comments

“மலர்.. மலர்..”

அழுதுகொண்டே, நான் அவளுடைய கன்னத்தை ‘பட்.. பட்..’ என தட்ட, அவள் இப்போது மெல்ல கண்கள் திறந்தாள்..!! என்னையே மலங்க மலங்க பரிதாபமாக பார்த்தாள்..!! அவளுடைய இமைகள் படபடத்தன.. அவளுடைய உதடுகள் துடிதுடித்தன..!! என்னையே காதலும் ஏக்கமுமாய் பார்த்தாள்..!! என்னுடன் கலந்துவிட துடிப்பது மாதிரியான ஒரு பார்வை..!! ஒரு வருடம் முன்பு கயலை, இதே மாதிரியான சூழ்நிலையில் என் கைகளில் ஏந்தியபோது அவள் பார்த்தாளே.. அதே பார்வை..!! என் உள்ளத்துக்குள் பாய்ந்து.. என்னை அப்படியே உலுக்கி எடுத்தது அந்தப் பார்வை..!!

“எ..என்னடா நீ..? காலைல இருந்து ஒன்னும் சாப்பிடாம..? நான்தான் அப்போவே சொன்னேன்ல..?” நான் அழுகையாய் சொல்ல,

“அ..அத்தான்.. அத்தான்..” அவள் திணறலாக என்னை அழைத்தாள்.

“ம்ம்ம்..”

“எ..எனக்கு உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் அத்தான்..”

“சொ..சொல்லுடா..!!”

“நா..நான்.. நான் உங்க கூடவே இருந்துடுறேன் அத்தான்..!! எ..எனக்கு உங்களை விட்டு பிரியிறதுல இ..இஷ்டமே இல்ல..!! ப்..ப்ளீஸ்த்தான்..!!”

சிறகொடிந்த பறவையின் பார்வையுடன்.. ஈனஸ்வரத்தில் அவள் அந்த மாதிரி கெஞ்ச.. என்னால் உள்ளத்தில் எழுந்த குமுறலை அடக்கவே முடியவில்லை..!! எனது கண்களில் கண்ணீர் பொலபொலவென அருவி மாதிரி கொட்ட ஆரம்பித்தது..!! அவளை அப்படியே என் மார்போடு சேர்த்து, இறுக்கி அணைத்துக் கொண்டேன்..!! அவளுடைய நெற்றியில் இச்சென்று முத்தம் பதித்தேன்..!!

“நீ எங்கயும் போக வேண்டாண்டா..!! எ..என்கூடவே இருந்திடு.. என்கூடவே இருந்திடு..!! எப்போவும்..!!”

3

நான் அழுகை பீறிட சொல்ல.. மலர் நிம்மதியாக தன் விழிகளை மூடி மீண்டும் மயக்கத்துக்கு போனாள்..!! கயலின் நினைவுகள் என் மனதில் எழுப்பியிருந்த சுவர்.. மலர் காட்டிய மாசற்ற அன்பினால்.. எப்போதோ விரிசல் விட ஆரம்பித்திருந்தது..!! இப்போது.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்.. இவள் பேசிய வார்த்தைகளில்.. மடை திறந்த வெள்ளமாய்.. என் மனதுக்குள் பொங்கிப்பெருகிய.. மலர் மீதான காதல் வெள்ளம்.. எஞ்சியிருந்த தடைகளையும் எளிதாக உடைத்து எறிந்து.. கட்டற்ற காட்டாறாய் எங்கெங்கும் பாய்ந்தோட ஆரம்பித்தது..!! நான் இரண்டு கைகளாலும் மலரை அப்படியே தூக்கிக் கொண்டேன்..!!

“ஸம்படி.. ஹெல்ப் ப்ளீஸ்…!!!!”

என்று கத்திக்கொண்டே, மலரை கைகளில் ஏந்தியவாறு.. படிக்கட்டுகளில் வேகமாய் மேலேறினேன்..!!

அடுத்து ஐந்து நொடிகள் கழித்து :

‘ஸார்.. என்னாச்சு ஸார்..?’ என்று பதறியவாறு ஒரு இரக்க குணம் படைத்தவர் உதவிக்கு வந்தார்..!!

அடுத்து ஐந்து நிமிடங்கள் கழித்து :

காரின் பின்சீட்டில் மலரை கிடத்தி.. நான் முன்பக்கம் சென்று ஏறிக்கொண்டு.. அவசரமாய் காரை ஸ்டார்ட் செய்து.. ஆவேசமாய் ஆக்சிலரேட்டரை மிதித்தேன்..!!

அடுத்து ஐந்து மணி நேரம் கழித்து :

மயக்கத்தில் இருந்து விழித்த மலரை.. நான் காதலாக பார்த்தேன்..!! அவளுடைய வலது கையை எடுத்து எனது இரண்டு கைகளுக்குள்ளும் வைத்துக் கொண்டேன்..!! அருகில் பன்னீர் இருப்பதை கூட கண்டு கொள்ளாமல்.. அவளுடைய கைக்கு தைரியமாக முத்தம் கொடுத்தேன்..!! ‘ஐ லவ் யூ மலர்.. ஐ லவ் யூ..’ என்று உணர்சிகள் மேலிட, கண்களில் நீரோடு சொன்னேன்..!! அவள் அன்பும் நன்றியுமாய் என்னை பார்த்தாள்..!! எனது தலை முடியை கோதி விட்டாள்..!!

அடுத்து ஐந்து நாட்கள் கழித்து :

மலர் அபிக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்க, நான் அவளை பின்பக்கமாக சென்று அணைத்துக் கொண்டேன். ‘ஐயோ.. என்னத்தான் இது காலைலேயே..?’ என்ற அவளது சிணுங்கலை கண்டுகொள்ளாமல்.. அவளது கழுத்துப் பகுதியை உதடுகளால் கவ்வினேன்..!! பின்னர் அவளது காது மடலை நாவால் தடவிவிட்டு.. கிசுகிசுப்பான குரலில் கேட்டேன்..!!

“எனக்கு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு.. நீ என்னை கட்டிக்கிறியா..?” என்று குறும்பாக கேட்டேன்.

அடுத்து ஐந்து வாரங்கள் கழித்து :

ஆபீஸ் கேண்டீனில்.. சாதத்தை பிசைந்து உடைத்துவிட்டவாறே பன்னீர் கேட்டார்.

“இன்னும் ஏன் நாளை கடத்திட்டு இருக்குற..? சட்டுபுட்டுன்னு ஒரு நாளை முடிவு பண்ணிட வேண்டியதுதான..?”

“அப்டியா சொல்ற..?” நான் சற்றே அப்பாவியாக கேட்டேன்.

“ஹ்ஹஹாஹஹா.. இன்னும் என்னடா வெக்கம் உனக்கு..?”

“வெக்கம்லாம் இல்ல பன்னீர்..” சொல்லும்போதே எனக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.

“அப்புறம்..? வேற ஏதும் உனக்கு பிரச்னை இருந்தா சொல்லு..”

“சேச்சே.. அதெல்லாம் ஒண்ணுல்ல..!! மதுரைல இருக்குற மாமாட்ட மட்டும் ஒரு வார்த்தை சொல்லணும் பன்னீர்.. அதுமட்டும் சொல்லிட்டோம்னா.. ஜோசியரை பாத்து ஒரு நல்ல நாள் குறிச்சிடலாம்..!!”

“அப்போ கவலையை விடு.. இந்த வாரம் ஞாயிற்றுக்கெழமை மதுரைக்கு டிக்கெட் புக் பண்ணு..!! ரெண்டு பேருமாவே போயிட்டு வந்துடலாம்..!! சரியா..?”

“ம்ம்.. சரி..”

அடுத்து ஐந்து மாதங்கள் கழித்து :

நான் மாங்கல்யத்தை சூட்டி முடிச்சிட, மலர் அதை தலை குனிந்து வாங்கிக் கொண்டாள். நடுவிரலால் அவள் நெற்றியில் நான் குங்குமம் இட.. அவள் என்னை பெருமிதமாக ஏறிட்டாள். என் கழுத்தில் இருந்த மாலையை நான் அவள் கழுத்தில் போட.. அவள் கழுத்து மாலையை என் கழுத்துக்கு மாற்றினாள்..!! நானும் மலரும் கணவன் மனைவியாய் மாறி.. இல்லறத்தில் அடி எடுத்து வைத்தோம்..!!

அன்று இரவு..

மலருடைய தடித்து சிவந்த உதடுகள் எனது உதடுகளுக்குள் அகப்பட்டிருந்தன. தேனூறும் அந்த உதடுகளை நான் சுவைத்து சுவைத்து, மது அருந்திக் கொண்டிருந்தேன். மலரும் தன் விழிகளை செருகியவாறு, என் முத்தம் தந்த போதைக்கு கட்டுண்டு கிடந்தாள். நெடுநேரம் நான் அந்த அதரங்களை சுவைத்து, இனிப்பு உறிஞ்சிவிட்டு விடுவித்தேன். விடுவித்ததுமே..

“ம்ம்ம்ம்.. மெல்லத்தான்.. வலிக்குது..” என்று நான் உறிஞ்சிய உதடுகளை கடித்தவாறே போதையாக சொன்னாள்.

Bathroom Sex Stories In Tamil

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top