ஐ ஹேட் யூ பட் – 11

(Sex Stories In Tamil - I Hate You But 11)

Raja 2013-10-09 Comments

“வீ..வீட்டுக்கு கெளம்பலாமா அசோக்.. நீ பைக்ல ட்ராப் பண்றியா..??”

“இ..இல்ல ப்ரியா.. நீ கம்பனி பஸ்ல கெளம்பு.. இதை இன்னைக்கு முடிக்கணும்..!!” அசோக் பொய் சொன்னான்.

“இப்போதான் இன்னைக்கு முடிக்கனுமான்னு கேட்டதுக்கு இல்லன்னு சொன்ன..??”

“அ..அது.. அது வந்து.. இன்னைக்கு ஃபிக்ஸ் பண்ணி முடிக்கணும்.. நாளைக்கு டெஸ்ட் பண்ணி முடிக்கணும்..!!”

அசோக் தடுமாற்றமாக சொல்ல, ப்ரியா முகத்தில் ஒருவித ஏமாற்றத்துடன் சில வினாடிகள் அவனையே பார்த்தாள். அப்புறம் சகஜமான குரலில் சொன்னாள்.

“சரிடா.. அப்போ நான் கெளம்புறேன்..!!!”

“ம்ம்.. ஓகே..!!”

ப்ரியா அவளுடைய இடத்துக்கு சென்றாள். கையிலிருந்த பரிசுப்பொருளை பேகுக்குள் திணித்தாள். சிஸ்டத்தை ஷட்டவுன் செய்துவிட்டு, பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். வீட்டுக்கு கிளம்பினாள். அசோக்கை கடக்கையில் ‘பை டா..’ என்றாள். அசோக்கும் பை சொல்லிவிட்டு, அவளுடைய முதுகையே வெறித்துக் கொண்டிருந்தான். ப்ரியா ஒரு நான்கைந்து எட்டுகள் கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள். சட்டென ப்ரேக் போட்டது போல நின்றாள். ஏதோ யோசனையுடன் திரும்பவும் அசோக்கிடம் வந்தாள். சுட்டுவிரலால் நெற்றியை கீறியவாறு சற்றே குழப்பமான குரலில் கேட்டாள்.

“ஹேய்.. நீ அப்போ ஏதோ சொல்ல வந்தேல..??”

“எ..எப்போ..??” அசோக் தடுமாற்றமாய் கேட்டான்.

“அ..அப்போ.. காபி ப்ரேக் அப்போ..”

“ஓ.. ஆமால..??”

“ஹம்.. என்ன சொல்ல வந்த..??”

“ஆமாம்.. என்ன சொல்ல வந்தேன்..??” அசோக்கும் இப்போது நெற்றியை பிடித்துக் கொண்டு மறந்து போன மாதிரி நடித்தான்.

“ஹாஹா.. மறந்துட்டியா..??” ப்ரியா சிரித்தாள்.

“ம்ம்.. மறந்துட்டேன்..!!”

“ஓகே.. பரவால..!! நைட்டு வீட்டுக்கு போனதும் படுத்து தூங்காம.. என்ன சொல்ல வந்தேன்னு நல்லா யோசிச்சு பாரு.. ஞாபகம் வந்ததும் நாளைக்கு வந்து சொல்லு.. சரியா..??”

“ம்ம்.. சரி ப்ரியா..!!”

“ஓகேடா.. கெளம்புறேன்.. பை..!!”

ப்ரியா கிளம்பினாள். அவள் சென்ற பிறகு கொஞ்ச நேரத்திற்கு கம்ப்யூட்டர் திரையையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்த அசோக், பிறகு தானும் வீட்டுக்கு கிளம்பினான்.

ப்ரியா எந்த நேரத்தில் சொன்னாளோ..?? அன்று இரவு அசோக்கிற்கு தூக்கம் செத்துப் போனது. கண்களை மூடினால்.. காதுக்குள் கைதட்டல்கள் கேட்டன..!! கையில் கோப்பையுடன் ப்ரியா வக்கணம் காட்டினாள்..!! அசோக்கின் கைகளுக்குள் சிக்காமல் நழுவிப்போய், தூரமாய் சென்று கைகொட்டி சிரித்தாள்..!! அடிக்கடி அவன் விழித்துக்கொள்ள வேண்டி இருந்தது..!! பால்கனிக்கு சென்று இருட்டுக்குள் புகைக்க வேண்டி இருந்தது..!! அவனுடைய காதல் மனமும், அவனது இயல்பான குணமும் கட்டி உருண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தன..!!

அசோக் இங்கே கண்ணுறக்கம் இன்றி தவித்துக் கொண்டிருந்த வேளையில், ப்ரியா அவள் வீட்டில் பெரிய களேபரமே செய்து கொண்டிருந்தாள். தான் அவார்ட் வாங்கிய அனுபவத்தை, அப்பாவிடம் சொல்லி அவரை ப்ளேடு போட்டுக் கொண்டிருந்தாள்.

“இந்த அவார்ட் கெடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா டாடி..??”

“ஆமாம்.. ஆயிரம் பேரு இருக்குறப்போ.. உனக்கு குடுத்துருக்காங்கன்னா.. சும்மாவா..??”

“ஐயோ.. டாடீஈஈ.. தவுசன் அண்ட் எய்ட்டீன்.. ஆயிரத்தி பதினெட்டு..!!!!!”

“ஆமாமாம்.. ஆயிரத்தி பதினெட்டு பேரு..!!”

வரதராஜனும் மகளின் ஆட்டத்துக்கு மத்தளம் கொட்டினார். அந்த விஷயத்தை அப்பாவோடு விடவில்லை ப்ரியா. லோக்கலில் உள்ள நண்பிகளுக்கெல்லாம் கால் செய்து டார்ச்சர் செய்தவள், எஸ் டி டி வேறு போட்டு எக்சாமுக்கு படித்துக்கொண்டிருந்த தம்பியையும் சித்திரவதை செய்தாள்.

“காம்பனன்ட் டிசைன் ரொம்ப கஷ்டம்னு சொல்லிருக்கனே.. ஞாபகம் இருக்கா கோகுல்..??”

“ஷ்ஷ்.. காலைல எனக்கு எக்சாம் இருக்குன்னு சொன்னனே.. அது உனக்கு ஞாபகம் இருக்காக்கா..??” கோகுல் அடுத்த முனையில் அழுகுரலில் கேட்டான்.

“ஞாபகம் இருக்கே.. ஏன் கேக்குற..??”

“பேசுனது போதும்க்கா.. ப்ளீஸ்.. கட் பண்ணு..!!”

“ஐயோ.. இருடா.. நான் சொல்லி முடிச்சுக்குறேன்..!!”

“ப்ளீஸ்க்கா.. படிக்கனும்க்கா.. சொன்னவரை போதும்.. ஏற்கனவே அரை மணி நேரம் காலி..!!”

2

கோகுல் ரொம்பவே கெஞ்சவும், ப்ரியா சற்றே மனம் இளகினாள். நீண்டதாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு, இப்போது மிகவும் சீரியஸான குரலில் சொன்னாள்.

“ம்ம்ம்ம்.. அக்கா இதுலாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்குறதுக்கு காரணம் இருக்குடா தம்பி..!!”

“ஓ..!!”

“அதுவும் எக்ஸாம் டயத்துல இதெல்லாம் சொல்றதால உனக்கு ரொம்ப யூஸா இருக்கும்..!!”

“யூஸா..?? இதால என்ன யூஸ்..??” கோகுல் தலையை சொறிந்தான்.

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அக்கா மாதிரி நீயும் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியரா வரணும்டா தம்பி.. அக்காவோட கதையை சொன்னா உனக்கு இன்ஸ்பயரிங்கா இருக்கும்.. நாமளும் அக்கா மாதிரி வரணும், நல்லா படிக்கணும்னு ஒரு வெறி வரும்.. அதான் சொன்னேன்..!! போ.. அந்த வெறியோட போய்.. இப்போ எக்ஸாமுக்கு படி..!! பை..!!”

ஒருவழியாய் மனமுவந்து ப்ரியா காலை கட் செய்தாள். பேசி முடித்த கோகுலுக்கு படிப்பு மீதெல்லாம் வெறி வரவில்லை. மொக்கை போட்ட அக்காவின் மீதுதான் கொலவெறி வந்தது..!! ‘இவளுக்குலாம் அவார்ட் குடுத்து.. ஏண்டா என் தாலியை அறுக்குறீங்க..??’ என்று அவளுடைய கம்பெனியை கன்னாபின்னாவென்று திட்டினான்.

தம்பியிடமும் தற்பெருமை அடித்து தீர்ந்தபின்தான் ப்ரியாவுக்கு நிம்மதியாக இருந்தது. எந்தக்கவலையும் இல்லாமல் உறங்க முடிந்தது. ப்ரியா ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில், சுகமாக கம்பளிக்குள் முடங்கிப் போயிருந்தபோது, அசோக் உறக்கம் மறந்த கண்களால், சுவற்றில் நகர்ந்த பல்லியை முறைத்துக் கொண்டிருந்தான்.

காலையில் எழுந்தபோது அசோக்கின் மனம் ஓரளவு தெளிவாயிருந்தது. நடந்ததை இனியும் மனதுக்குள் போட்டு குழப்பிக்கொள்வது நல்லதில்லை என்று தோன்றியது. ப்ரியாவின் மீது தேவையற்ற வெறுப்புதான் இதனால் உண்டாகும் என்று புரிந்தது. எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஆபீஸில் ப்ரியாவை பார்க்கையில் சகஜமாக புன்னகைக்க முயற்சி செய்தான். நடுவில் ஒருமுறை அவள் வந்து வேலை விஷயமாக ஒரு உதவி கேட்கையில், சற்று தயங்கினாலும், பிறகு உதவினான். மாலையில் அவனாகவே ப்ரியாவின் இடத்துக்கு சென்று, ‘ஸ்குவாஷ் ஆட போலாமா ப்ரியா..??’ என்று கேட்டான்.

அசோக்கின் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தாலும், அதை ப்ரியாவிடம் காட்டிக்கொள்ளவில்லை. முன்பை போல அவளிடம் இயல்பாக பேச முடியவில்லை என்பதையும் அவனால் உணர முடிந்தது. விரைவில் எல்லாம் மாறிவிடும் என்று நினைத்தான். ஆனால்.. விதியோ வேறு விதமாக நினைத்தது..!! அடுத்த வாரமே அது தன் வேலையை காட்டியது..!!

அன்று சற்று தாமதமாகத்தான் அசோக் ஆபீஸுக்கு கிளம்பி இருந்தான். பைக்கில் எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி சென்று கொண்டிருந்தவன், பொம்மனஹல்லியை தாண்டியபோது மணி பத்தரை. அப்போதுதான் அவனுடைய பேன்ட் பாக்கெட்டுக்குள் கிடந்த செல்போன் பதறி துடித்தது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பதறிய போனை கையில் எடுத்து பார்த்தான். ஹரி கால் செய்திருந்தான். ஹெல்மட் கழற்றியவன், கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டான்.

“சொல்லுடா..!!” என்றான்.

“மச்சி.. எங்கடா இருக்குற..??”

“வந்துட்டு இருக்கேண்டா.. சொல்லு..!!”

“ஹேய்.. சீக்கிரம் வாடா.. இங்க கம்பெனில பெரிய கலவரமே நடந்துட்டு இருக்கு..!!”

“கலவரமா..?? என்ன கலவரம்..??”

“ம்ம்ம்..?? பேசி பேசியே காது ஜவ்வை கிழிக்கிற கலவரம்..??”

“ஹாஹா.. யார் அது.. அவ்வளவு பேசுறது..??”

“எல்லாம் உன் ஆளுதான்..!!”

“என் ஆள்னா.. ப்ரியாவா..??”

“ஆமாம்.. அவதான்..!! ஹப்பா…. அவ பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலைடா..!!”

“என்ன பண்றா..??”

“என்ன பண்றாளா..?? அந்தக்கொடுமையை நீயே இங்க வந்து பாரு..!!”

ஹரி அதன்பிறகும் என்ன விஷயம் என்று தெளிவாக சொல்லாமல் இழுத்துக்கொண்டே போக, அசோக் இப்போது பொறுமை இழந்து போய் டென்ஷனாக கத்தினான்.

“த்தா.. அப்புறம் என்ன மசுத்துக்குடா நீ கால் பண்ணின.. மாங்காக்..”

“ஏய் ஏய்.. இருடா.. சொல்றேன்..!!”

“சொல்லித்தொலை..!!”

“ப்ரியாவை ஆன்சைட் அனுப்ப சூஸ் பண்ணிருக்காங்கடா..!!” Koothi Sex Stories In Tamil

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top